என்று தணியும்?



நடுத்தட்டு மக்கள் 
இரவுபகலாக 
நடுத் தெருவில் ...

கோடிகளில் வரி ஏய்க்கும்
கொம்பன்கள் 
கதகதப்பாய் பஞ்சணையில்.

****************

பாடுபட்டுத் தேடிவந்த 
நூறு ரூபாய் நோட்டுகளை
'படக்'கென்று கிழித்துப் போட்ட 
ரெண்டு வயசு மகனின் 
முதுகு பழுத்தது முதன்முறையாக.

****************

தன் சேமிப்பின் கதியறிய 
கேட்கிறான் சிறு பையன்...
"நூறு ரூபாய் நோட்டெல்லாம் செல்லும் தானே?"
'நாளைய செலவுக்கு உண்டியல் இருக்கு'
வரிசை விட்டு வெளியேறுகிறாள் அம்மா.

*******************

அலைந்து திரிந்து ஓய்ந்தவர்களும்
நின்று நின்று கால் கடுத்தவர்களும் 
அடுத்த வேளை சோற்றுக்கு உதவாத 
கற்றைப் பணத்தை விட்டெறிய முடியாமல் 
பட்டினி வயிறு பற்றியெரிய 
சட்டென சபிக்கிறார்கள்...
செல்லாக் காசாக தம்மை  ஆக்கியவர்களை.

*******************


8 கருத்துரைகள்
  1. செல்லாத நோட்டுகள் பற்றி
    செல்லும் (சொல்லும்) வரிகள்

    அருமை / உண்மை.

    ReplyDelete
  2. @வை.கோபாலகிருஷ்ணன்
    உடனடி வருகை தரும் உற்சாகம்... நன்றி சார்.

    ReplyDelete
  3. @திண்டுக்கல் தனபாலன்
    ஆம் சகோ. தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்துக்கு நெறி கட்டுவதுதான் வலிமிகு வேடிக்கை.

    ReplyDelete
  4. செல்லா காசும் சாமானிய குடிமகனும்
    செல்லா கதைகள்

    ReplyDelete
  5. @Manikandan Annamalai
    வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வதும் சாமான்யனுக்கு விதி போலும்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணி.

    ReplyDelete
  6. இதைச் சொன்னால் தேசத்துரோகி என்கிறார்கள்

    ReplyDelete
  7. இதைச் சொன்னால் தேசத்துரோகி என்கிறார்கள்

    ReplyDelete