நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

பையில் போட வேண்டியதை  மனசிலும்
மனசில் போட வேண்டியதை  பையிலும்
போடுவது தான் 
உங்க பிரச்னையே சுவாமி

பத்திரமாக இருக்க பையில் போடுங்கள்
சித்திரமாக ரசிக்க மனசில் வையுங்கள்

அன்பு காதல் பாசம் பரிவு
இதையெல்லாம்
பையில் வைத்திருக்காதீர்  ஓய்!
இதெல்லாம் மனசில் வைக்க வேண்டிய பண்டங்கள்

பணம் புகழ் பசி காமம்
எல்லாவற்றையும் தூக்கி 
பையில் போடுங்காணும்!

பையை சீக்கிரம்  காலி செய்யச்செய்ய
மனசு நிரம்பிக் கொண்டே இருக்கும்.
பையையே எறியும் பக்குவம் வந்தால்
மனசு நிறைந்து மானுடம் தழைக்கும்.
               - தஞ்சாவூர் கவிராயர் .

கவிராயரின் கவிதைகள் அமுத ரசம் நிரம்பியவை என்பதை நாமறிவோம் .

நாளை தனது இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர இருக்கும் அவருக்கு நமது பிரார்த்தனைகளை காணிக்கை ஆக்குவோம் வாருங்கள் தோழர்களே...

நம் விசாரிப்புக்களை அவர் உடனிருக்கும் நம் சுந்தர்ஜி அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம் . கவிராயர் பூரண நலம் பெற்றவுடன் அவரிடம் நம் மகிழ்வான விசாரிப்புக்களை  பகிரலாம்.

பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாதவர்களின் நல்லெண்ணமும் நேர்மறை சிந்தனைகளும் கூட அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லவா...!!

நாளையும் நாளை மறுநாளும் (29.8.2012, 30.8.2012) நம் சிந்தனையில் அவரது  மேன்மைகள்  நிறைந்திருக்கட்டும்!

 
Share on:

தன் குழந்தை வயிறு நிறைக்க
ஒரு தாய்க்கு
விளையாட்டு பொம்மையாய்...

மோகித்தவளின் முகம் பொருத்தி
சிலாகிக்கும் காதல் பித்தனை
தெளிவிக்கும் மருந்தாய்...

மின் தடை இரவிலும்
தெருப்பிள்ளைகளின்
விளையாட்டுத் தடையறாமல்
இயற்கையின் வெளிச்சமாய்...

இரவோடிரவாய்
உறவறுத்து வெளியேறும்
அபலையின் வழித்துணையாய்...

வாழ்வின் மூர்க்கத்தில்
கொதிப்பேறிக் கிடப்பவனைத்
தணிவிக்கும் தண்ணொளியாய்...

மினுக்கும் உடுக்களிடையே
கம்பீரமாய் அரசோச்சி
ஜொலிக்கும் பெரு நட்சத்திரமாய்...

நிலவுக்கும் உண்டு...
அரிதாரம் தேவையற்ற
பல அவதாரங்கள்...!

நன்றி: நீலநிலா.. செப். 2012
Share on:
         “உலக இலக்கியம் படித்தவர்களுக்குச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை” என்று தன் கவிதைநூலின் முன்னுரையில் பிரகடனம் செய்யும் துணிவோடு திரு.செளரிராஜன் அவர்கள் வழுவழுக்கும் ஆர்ட் பேப்பரில் நம் கைகளில் தன் கவிதைநூலை தவழச் செய்திருக்கிறார். அவரது மகன் செள.ராஜேஷ் அவர்கள் முகமன் கூறி வரவேற்கிறார் முதல் பக்கத்தில்! கவிஞரின் 66-வது பிறந்தநாள் வெளியீடாக வரும் இந்நூல் செறிவோடும் அழகோடும் நம்மை நிறைக்கிறது.
        ஸ்ரீரங்கம் கோவிந்தராஜ் கவிஞரை நேர்கண்டது நூலின் பின் நான்கு பக்கங்களில் நமக்கு பலவற்றை தெளிவுபடுத்திச் செல்கிறது.
 கவிதையென்பது என்ன? எனும் கேள்விக்கு கவிஞர், “என்ன விளக்கினாலும் முழுமை பெறாமலிருக்கும் ஒரு வடிவமே கவிதை” என்கிறார்.
         கதையம்சம் கவிதைக்கு விலங்கா? சிறகா? எனும் கேள்விக்கு, “ ஒரு சம்பவம் கவிதைக்கான கருப்பொருளாக அமையும் போது கதைத் தன்மை தோன்றலாம். எதன்மீதும் இது கவிதைக்கானது இல்லை என்று முத்திரை குத்த முடியாது. எனவே கதைத் தன்மை ஒரு கவிதைக்கு விலங்காகாது. இயல்பேயாகும்” என்கிறார் கவிஞர்.
          “செளரியின் கவிதைகளில் முதலில் நம்மை வசீகரிப்பது அவற்றின் இருண்மையற்ற எளிமைதான். முதல்வாசிப்பில் அவரது கவிதைகள் லேசாகத் தோன்றினாலும் பிரித்துப் பல பொருள் கூறுமளவுக்கு அவற்றில் பல அடுக்குகள் ஒளிந்துள்ளன. சாதாரண சொற்களைக் கொண்டே அசாதாரண அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறார். அரிதான படிமங்களின் பயன்பாடு, அற்புதமான பதச் சேர்க்கைகள், மற்றும் காட்சிப்படுத்துதல் இவை இணைந்து இவரது கவிதைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.” இது பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியின் தமிழ்த்துறையிலிருக்கும் வ.நாராயண நம்பியின் அணிந்துரை.
Share on:
வ‌ங்காள‌ம்: ப‌க்கிம் ச‌ந்திர‌ ச‌ட்டோபாத்யாய‌ர்

த‌மிழில் : ம‌காக‌வி பார‌தி


ந‌ளிர்ம‌ணி நீரும், ந‌ய‌ம்ப‌டு க‌னிக‌ளும்
குளிர்பூந் தென்ற‌லும் கொழும்பொழிற் ப‌சுமையும்
வாய்ந்துந‌ன் கில‌குவை வாழிய‌ அன்னை!
வ‌ந்தே மாத‌ர‌ம்!

தெண்ணில‌ வ‌த‌னிற் சிலிர்த்திடு மிர‌வும்
த‌ண்ணிய‌ல் விரிம‌ல‌ர் தாங்கிய‌ த‌ருக்க‌ளும்
புன்ன‌கை யொளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்த‌னை யின்ப‌மும் வ‌ர‌ங்க‌ளு ந‌ல்குவை.
வ‌ந்தே மாத‌ர‌ம்!


கோடி கோடி குர‌ல்க‌ ளொலிக்க‌வும்
கோடி கோடி புய‌த்துணை கொற்ற‌மார்
நீடு ப‌ல்ப‌டை தாங்கிமுன் னிற்க‌வும்
கூடு திண்மை குறைந்த‌னை யென்ப‌தேன்?
ஆற்ற‌லின் மிகுந்த‌னை அரும்ப‌த‌ங் கூட்டுவை
மாற்ற‌ல‌ர் கொண‌ர்ந்த‌ வ‌ன்ப‌டை யோட்டுவை
வ‌ந்தே மாத‌ர‌ம்!

அறிவுநீ த‌ரும‌நீ உள்ள‌நீ அத‌னிடை
ம‌ரும‌நீ உட‌ற்க‌ண் வாழ்ந்திடு முயிர்நீ
தோளிடை வ‌ன்புநீ நெஞ்ச‌க‌த் த‌ன்புநீ
ஆல‌ய‌ந் தோறும் அணிபெற‌ விள‌ங்கும்
தெய்வ‌ச் சிலையெலாந் தேவியிங் குன‌தே.
வ‌ந்தே மாத‌ர‌ம்!


ப‌த்துப் ப‌டைகொளும் பார்வ‌தி தேவியும்
க‌ம‌ல‌த் தித‌ழ்க‌ளிற் க‌ளித்திடும் க‌ம‌லையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ!
வ‌ந்தே மாத‌ர‌ம்!

திருநிறைந்த‌னை த‌ன்னிக‌ ரொன்றிலை!
தீது தீர்ந்த‌னை நீர்வ‌ள‌ஞ் சார்ந்த‌னை
ம‌ருவு செய்க‌ளின் ந‌ற்ப‌ய‌ன் ம‌ல்குவை
வ‌ள‌னின் வ‌ந்த‌தோர் பைந்நிற‌ம் வாய்ந்த‌னை
பெருகு மின்ப‌ முடையை குறுந‌கை
பெற்றொ ளிர்ந்த‌னை ப‌ல்ப‌ணி பூண்ட‌னை
இருநி ல‌த்துவ‌ந் தெம்முயிர் தாங்குவை
எங்க‌ள் தாய்நின் ப‌த‌ங்க‌ளி றைஞ்சுவாம்.
வ‌ந்தே மாத‌ர‌ம்! வ‌ந்தே மாத‌ர‌ம்!!
Share on:
          இம்முறை கோடைக்கானல் பயணத் திட்டமான நான்கு நாள்கள் திட்டமிட்டபடி செம்மையாகவே எல்லாம் அமைந்தது. ஊருக்கு திரும்ப வேண்டிய முதல் நாள் இரவு தொடங்கிய மழையிலும் அதன் காரணமான மின் தடையிலும் எங்களுக்கான சோதனை ஆரம்பமானது.
           தங்கியிருந்த இடத்தில் எடுத்துச் சென்றிருந்த மெழுகு வர்த்திகள் மற்றும் டார்ச் லைட் துணையிருக்க தூக்கம் தழுவிய நேரம். பெரிய நாத்தனார் மகள் எழுந்து போய் பாத்ரூமில் வாந்தி எடுத்தாள். அடுத்த அரை மணியில் மறுபடியும். கையிலிருந்த முதலுதவி மருந்துகள் பலனளிக்கவில்லை. மணி 12.30
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ▼  August (5)
      • பையும் மனசும்
      • அரிதாரமற்ற அவதாரம்
      • ஸ்ரீரங்கம் செளரிராஜனின் “உரிய நேரம்”...
      • சுத‌ந்திர‌ தேவிநின் திருவ‌டி ச‌ர‌ண‌ம்!
      • நீங்க போனதுண்டா இங்கே?
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 day ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    2 weeks ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    3 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    6 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    (அ)நீதி அரங்கம்
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    7 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    8 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates