நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >



         கடந்த இரு நாட்களாக சிபியிடம் அடைக்கலமாகி இருக்கிறது பிறந்து ஒருவாரம் கூட ஆகாத பூனைக்குட்டி ஒன்று.
அதற்கும் இரு நாட்கள் முன்பிருந்தே கொல்லைப்புற சன் ஷேடில் விடாமல் கத்திக் கொண்டிருந்த குட்டிக்கு இரக்கப்பட எல்லோராலும் முடிந்தது. அம்மா பூனை வந்து தூக்கிச் சென்று விடுமென்று அலட்சியமாக இருந்தோம்.
இவன் வந்ததிலிருந்து பாவம் அம்மா, பசி போலிருக்கு... கீழே எடுத்து பால் தரலாம் என்றபடியே இருந்தான். நடைமுறை சிக்கல்கள் தானே தடுக்கிறது...
பத்து நாட்கள் கழித்து நாத்தனார் வீட்டு திருமணத்துக்கு சென்றால் வர மூன்று நான்கு நாட்களாகும்.
இதெல்லாம் நாளடைவில் உபத்திரவமாகி விடும்.
பொதுவாகவே எனக்கு பூனை பிடிக்காது.
        இரக்கப்பட்டு இவர்கள் ஸ்தாபிதம் செய்து விட்டு அவரவர் வேலைக்குப் போன பின் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எனதாகிவிடுமே...
நீண்ட நாட்களாகவே சிபிக்கு நாய் அல்லது பூனை வளர்க்கப் பேராவல். நான் தான் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தேன். இணைகுருவிகள் வளர்த்து அவற்றை இழந்த சோகம் போல் இன்னொரு தடவை எதிர்கொள்ள இடம் கொடாத மனசோடு.
நான் குளிக்கச் சென்றிருந்த சிறுபொழுதில் யார் வீட்டு செல்லப் பிராணிகளையும் வெகு சுலபமாக வசப்படுத்திவிடும் அப்பாவும் பிள்ளையுமாக பூனைக் குட்டியை இறக்கியாயிற்று.
அதன் உருட்டி விழிக்கும் பளிங்கு கண்களோடு குட்டி குட்டி கைகளும் கால்களும் வாலும் பட்டு உடம்பும் விடாத சத்தமுமாக வசீகரமாகத்தான் இருக்கிறது. அப்பாவும் பிள்ளையும் தான் அவ்வப்போது பால் எடுத்து வைப்பது, தூக்கி கொஞ்சுவது, கதகதப்புக்கு துண்டு விரிப்பது, வெளியே அழைத்துச் சென்று வருவது என ஒரே கோலாகலம் தான் போங்கள்!
வெளியில் போனால் கூட போன் செய்து அதற்கு பால் வைத்தீர்களா என்று கேட்கிறான் சிபி.
டப்பாவில் ஊற்றும் பாலில் அது நிறைவடைவதில்லை. கூரிய பற்களால் கிடைப்பதையெல்லாம் கடித்துப் பார்க்கிறது. இவர்களின் கால்களைப் பிறாண்டுவதோடு பாதத்துக்கு பக்கமாக படுத்து பரபரவென அடிப்பாதத்தில் தன் அம்மாவைத் தேடுகிறது. பார்க்கும் நமக்கு உணர முடிகிறது அதன் தேவையை.
        கடவுளே, இந்தக் குட்டி தன் அம்மாவோடு சேர கொஞ்சம் கருணை காட்டேன் என இறைஞ்சுகிறது மனசு. இரை தேடச் சென்ற அதன் அம்மா, விரைவில் திரும்பி வந்து தன் குட்டிக்கு பாலூட்டும் அழகைப் பார்க்கத் தவிக்கிறது பாழ்மனசு.

Share on:
     பொறுமை என்னும் அருங்குணம் ஓர் இறைநம்பிக்கையாளன் வாழ்வில் அடித்தளம் எனலாம்.  இதுவே  ஒவ்வொரு நம்பிக்கையாளனின் இம்மை, மறுமை எனப்படும் ஈருலக வாழ்விலும் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. அதனால், இறைநம்பிக்கையாளர்கள் தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல உதவும் நம்பிக்கை விளக்காக பொறுமையை எடுத்துக் கொள்ள வேண்டும். 
      வாழ்வின் கணம்தோறும் எதிர்ப்படும் பிரச்சினைகளில் சில நேரம் வெல்லலாம். பல நேரம் தோல்வியுறலாம். அந்தத் தோல்விகளை வெற்றிகளாக்க பொறுமை எனும் அருங்குணத்தால் தான் அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதனால், எல்லா விதமான கஷ்டங்களையும் இழப்புகளையும் சகித்துக் கொள்ள இறை நம்பிக்கையாளர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருக்காலும் பொறுமையை இழந்து அவரவர் மரணக்குழியை அவரவர் கரங்களாலேயே பறித்துக் கொள்ளக் கூ டாது. 
      பொறுப்புகளை எதிர்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதில் தயக்கம்,
     வாழ்வியல் யதார்த்தங்களை உள்வாங்குவதில்  ஏற்படும் குழப்பம்,
     தோல்வியைக் கண்டு மனதில் ஏற்படும் அச்சம்...
இவை எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்கச் செய்து ஓர் இறைநம்பிக்கையாளனை வன்முறைப் பக்கம் திசை திருப்பக்  கூடாது. 
     பொறுமை எனப்படும் பெரும்பண்பு, சோதனைகள் மற்றும்  இறைநம்பிக்கையின் ஆழமான வெளிப்பாடு என்னும் இரண்டு தூண்கள் மீது நிலை கொண்டுள்ளது.
     இந்தஉலகியல் அமைப்பு வெறும் ஆனந்தமும் நிம்மதியும் கொண்டதாக மட்டும் படைக்கப் படவில்லை. சோதனைகள் நிரம்பிய களமாகவே  உள்ளது.
     எவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றி மறக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான்.
     வாழ்வியல் சோதனைகள் என்னும் முதல் தூண்  நிலைகொள்ள இறைதொடர்புகள் எனும் இரண்டாவது தூண்  மிகவும் இன்றியமையாதது. 
     பொறுமையை முறைப்படுத்திக் கொள்பவனுக்கு இறைவன் பொறுமையை வழங்குகிறான். இந்தப் பொறுமை வழங்கப் பெற்றவரைவிட ஆகச் சிறந்த வெகுமானம் பெற்றவர் வேறு யாருமில்லை!

நன்றி: இக்வான் அமீர்,   'தி இந்து ' தமிழ் நாளிதழ்  

Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ▼  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ▼  August (2)
      • வெள்ளை நிறத்தொரு பூனை ...
      • இறைக்கொடை
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 day ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    2 weeks ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    3 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    6 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    (அ)நீதி அரங்கம்
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    7 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    8 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates