நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

திருவிழாக் கூச்சலில்
தனித்து இனிக்கிறது
ஊதல்காரனின் இசை

காலை நேரத்தில்
உற்சாகமாய் தொடர்ந்தொலித்த
அவனது ஊதல்

வியாபார மந்தமாலோ
வயிற்றைப் புரட்டும் பசியாலோ
தட்டுத் தடுமாறுகிறது
மதியப் பொழுதில்

இசையால் மட்டுமே
உயிர்த்திருந்தான்
அவன்  

கூட்டம் நெரிந்த
மாலைப் பொழுதில்
இருள் விலக்க
எரியும் தீப்பந்தமாய்
உயர்ந்தோங்கிய
அவனது குழலொலி
எட்டும் செவிகளைப்
பிரகாசமாக்குகிறது

பெற்றோரை தம்
பிடிவாதத்தால் மசிய வைக்கும்
குழந்தைகள்
சூழ்ந்தனர் அவனை
இன்றிரவு உறங்கலாம்
அவனும்
நிறைந்த வயிறுடன்.

(கல்கியில் பிரசுரம் ஆனது )
Share on:
            அப்பாடா... நானும் இந்த வலையுலகில் நூறாவது பதிவை எட்டிவிட்டேன்! குருவணக்கமாக எங்கள் மகன் சிபிகுமாருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன். (வலைப்பூ தொடங்கி வைத்ததும், பல தொழில்நுட்பங்களை கணினியில் தேர்ந்து செழுமைப்படுத்தியதும், மிகப் பொறுமையாக அடிப்படை விஷயங்களை அறியச்செய்து தொடர்ந்து நான் செயல்பட உற்சாகம் ஊட்டியதும் ஆக இன்னபிறவற்றுக்காக)
      கல்வியின் நிமித்தம் பிரிவிலிருக்கும் அவனை நினைவுகளால் அரவணைக்கும் தருணங்களில்  பிரிவாற்ற துணை நிற்பது சிறு பிராயம் முதல் எடுத்து வைத்துள்ள புகைப்படங்களே. ஒருசிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
      

எங்கள்  இரு முத்துக்கள்



அப்பாவுடன்...



பாட்டி செல்லம்...(மாமனாரின் தாயார்)


அக்காவின் உடையணிந்து    ...

தோட்டத்துக்கு வரும் நிஜ மயிலுடன் எங்க தங்க மயில்!


பள்ளி செல்லத் துவங்கிய முதல் நாள் ... தாயுடனான முதல் பிரிவு!


அக்காவும் அத்தை பெண்ணும் உடன் நிற்க ...


அப்பாவும் பிள்ளையும் பிறந்தநாள் கேக் வெட்டிய நேரம் ...



அத்தை பையனுடன் குளிர்பதனப் பெட்டியின் தட்டுகளை எழுது பலகையாக்கி...



வயதுக்கு மீறிய வண்டி மீதான மாறா விருப்பம்...




கங்கை கொண்ட சோழபுரம்  கோயிலில் ...

திருச்செந்தூர் கடலில்...
கொடைக்கானலில் ...

 

எந்த வண்டியாயினும் உடன் நின்று படமெடுத்துக் கொள்வதில் தீரா விருப்பம்...
 

விளையாடப் போன இடத்தில் அடிபட்டுக் கிடந்த மைனாவை எடுத்து வந்து வீட்டில் உபசாரம்...

துப்பாக்கி சுடுவதில் அலாதி சுகம்... எந்த சுற்றுலா தளத்திலும் பார்த்தவுடன் நின்றுகொள்வான் . ஆசை தீர பலூன்களை குறிபார்த்து சுடுவதில் ஒரு திருப்தி.
கடந்த ஆண்டின் பிறந்த நாளில் அக்காவுடன்...



பள்ளி முடிந்த நாளன்று நண்பர்களுடன் கொண்டாட்டம்...
பத்தாம் வகுப்புத் தேர்வை இந்தக் கட்டுடன் தான் எழுதினான் பிள்ளை. (நிஜ கட்டு! சுண்டு விரலில் சின்ன எலும்பு முறிவு)
சிரிஷ் சந்திரன் தான் அவனது ஹீரோ!

ஓவர் டிரைவ் படித்து, பார்த்து, பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் தன் நண்பன் அரவிந்த் உடன் இம்மூன்று  வண்டிகளையும் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தனர்.
அதையொரு கட்டுரை வடிவமாக்கி மோட்டார் விகடனுக்கும் அனுப்பினர்.மோட்டார் விகடனிலிருந்து தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். இருவரும் பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் என்ற காரணத்தால் அக்கட்டுரை பிரசுரிக்க இயலாமல் போனது.
அதனாலென்ன... விடுமுறையை உபயோகமாக ப்ரஜெக்ட் செய்து கழித்த நிம்மதி....



நட நட நட நடப்பதுவும் ஸ்டைல் ....

சாகசக்காரன் என்ற பெயரெடுக்க தீரா அவா ...

நாராயணா ஜூனியர் காலேஜில் சேர வீட்டிலிருந்து புறப்படுகிறான்... முகத்தின் சிரிப்புக்கு  சற்றும் குறைந்ததல்ல மனதினுள்  பிரிவின் நெருடல்...

இனி இரண்டாண்டுகளுக்கு இதுதான் அவனது விலாசம்...

பிரிட்ஜ் கோர்ஸ் முடிந்து வீட்டுக்கு வந்ததும் கடலூர் பீச்சில் ஒரு கொண்டாட்டம்...
அப்பாவும் பிள்ளையும் கடலில் இறங்கினால் சாமானியமாக கரையேற மாட்டார்கள்.
உற்சாகமும் சந்தோஷமும் நிழல்போல் அவனுடன் எப்போதும்...


புகைப்படமெடுத்தல் அவனது பொழுதுபோக்கு ...  அவன் திறனுக்கு சில...


கணினியில் தானாகவே கற்றுத் தேர்ந்த பலவற்றுள் ஒன்றிரண்டு...




கார் ... அவனது பிரம்மாண்ட கனவு நாயகி...



இவ்வாண்டின் பிறந்த நாளுக்காக பதிவிட அவனறியாமல் அவனது சேமிப்பிலிருந்து சுட்ட அவனது கிராபிக்ஸ் படம்...
மாதங்களில் 'அவன்' மார்கழி!


இப்பதிவுக்கான படங்களை உடனிருந்து தேர்வு செய்ததிலிருந்து, பதிவுக்கான தொழில் நுட்பங்களில் உதவி செய்த 'தாய்க்கு தாயான' ('தகப்பன்சாமி'க்கு பெண்பால்!) எங்கள் மூத்த முத்து... ப்ருத்வி மதுமிதா... நன்றி சொல்லவே எனக்கு வார்த்தையில்லையே... உன் 'கனவு' நிறைவேற பிரார்த்தனைகளையே நன்றியாக சமர்ப்பிக்கிறேன் மது... 
Share on:

      கடந்த டிசம்பர் கடைசி வாரத் தொடக்கம். வார இறுதியில் துணைவரும் நானும் நெல்லூர் சென்று மகனுடன் புத்தாண்டை கொண்டாட முடிவு செய்திருந்தோம். புறப்படும் நாள் நெருங்க நெருங்க டிசம்பர் 31 அன்று ஆந்திராவில் உருவாக இருக்கும் புயல் நாகப்பட்டினத்தில் கரைகடக்க இருப்பதாக வேலையிடத்தில் கேள்விப்பட்டு வந்து சொன்னார். (எங்க வீட்டில் கேபிள் இணைப்பு இல்லாததால் தொலைக்காட்சி நீள் உறக்கத்திலிருக்கிறது)
       நெல்லூரிலிருந்து மகன் தொலைபேசினான் வழக்கம் போல். புத்தாண்டுக்கு ஒரு நாள் தான் அவனது கல்வி நிறுவனத்தில் விடுமுறையெனினும், பெற்றோர் வந்தால் ஓரிரு நாள் முன்னதாக வீட்டுக்கு அனுப்புவார்களாம்; அதனால் ‘நீங்க மட்டும் வந்து கூப்பிட்டுப் போங்கப்பா' என்று. இவன் பிறந்ததும் ஒரு ஆங்கிலப்  புத்தாண்டில் தான் (1996) என்பதால் எங்கள் கொண்டாட்ட கிழமைகளில் புத்தாண்டுக்கு சிறப்பிடம். (அவனுக்காக சிறப்புப் பதிவு எழுத மகள் துணையுடன் கணினியிலிருந்து சேகரித்த அவன் தொடர்பான படங்கள் 'தானே' கூத்தில்  தடம் பிரியாமல் இருக்கிறது)
       தானே வந்து செல்லும் பிள்ளை, கூப்பிடவும் இவரும் உடனடியாக வேலையிடத்தில் விடுப்புக்கு ஏற்பாடு செய்துகொண்டு கிளம்பினார் வியாழன் இரவு (29.12.2011).
      மகளுடன் இரவு மூன்று மணிவரை ஏதேதோ கதைகள் பேசிவிட்டு, உறக்கத்துக்கு ஆட்பட்டேன்.  படார், திடீர் என சப்தம் கலைத்தது தூக்கத்தை. விழித்தால் மின்சாரம் தடைபட்டிருந்தது. எழுந்து வெளிச்சமூட்ட சோம்பலுடன் படுத்திருந்த என்னை, திறந்திருக்கும் சாளரங்களின் கதவுகள் கிளப்பின. மணி மூன்றரை ஆகியிருந்தது.
Share on:
எங்களுக்கு புயலுடன் தொடங்கிய புத்தாண்டு இது. 'தானே' புயலில் இருந்து மீண்டு கொண்டிருக்கிறோம் ஒருவாறாய் .

'நாங்களும்' ஆண்டிறுதி முதல், ஆண்டு தொடக்கம் வரை
( 30 . 12 . 2011 - 5 . 1 . 2012 )  ஆறேழு நாட்கள் மின்தடையை அனுபவித்து வாழ்ந்தோம்.(சந்தோஷப் படுங்கள் மக்களே... தினசரி மின்தடை அனுபவித்த உங்கள் வேதனைக்கு மருந்தாய் இருக்கட்டும் இச்செய்தி.)

மனிதர்களை விடுத்து மரங்களைத்  தாக்கி அழித்தொழித்தது புயல்.

கடந்த ஒரு வாரமாய் கலவர பூமியாய் காட்சியளித்தது  எங்கள் ஊரின் தெருக்களும் தோட்டங்களும்.

தாறுமாறாய் வீழ்ந்து கிடக்கும் மரங்கள் ஈழத்து தமிழ் மனிதர்களாய் தோற்ற மயக்கம் தந்தன  எனக்கு...

டிசம்பர் 30 , 2011 அதிகாலை தொடங்கிய 'தானே' புயலின் சேதாரங்களில் இருந்து நெய்வேலி மீண்டெழ, கட்டமைக்கப் பட்ட நகரான இவ்வூரின் நகர நிர்வாகம் சிறப்பான செயல்பாடினை செய்து வருகிறது .

புயல் பற்றிய அனுபவங்கள் அடுத்த பதிவில்...

Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ▼  January (4)
      • செவிக்குணவு
      • இங்கிவனை யான் பெறவே...
      • காத்தடிக்குது காத்தடிக்குது...
      • 'தானே' தனக்குள்...
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • சிவகுமாரன் கவிதைகள்
    கபீரும் நானும் 55
    3 weeks ago
  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    4 weeks ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    1 month ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    4 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    7 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    8 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    9 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates