தோலுரித்துத் தொங்கும்
ஆடுகளை கோழிகளை
கண்ணெடுத்துப் பார்க்க அஞ்சி
அந்தக் கடைகளின்
தெருவையே தவிர்த்துச் செல்லும்
கால்களும்
கடிக்காத எறும்பை
நசுக்க விரும்பாத
கருணையும் இருந்துமென்ன...
திறந்திருந்த உடற்பரப்பில்
சுருக்கெனக் கடித்து-தன்
விடமேற்றிய சிறுகுளவி
பிடிபடாமல் பறந்தது
கடுகடுப்பே மனசிலும்...
வலி மரக்க பற்பசைதடவி
மனம் மறக்க வலை மேய்ந்தேன்
கணினியில்...
சிற்றசைவில் கண் திரும்ப
சுவர்ப்பல்லி வாயில் சிறுகுளவி
அதக்கி அதக்கி
விழுங்கி
சப்பு கொட்டி நாசுழற்றி
திருப்தியான பல்லியை
குரூரக் குதூகலிப்பு எழ
பார்க்கும் என்னுள்
மெல்ல மெல்ல
வளர்ந்தது பல்லியின் வால்.
ஆடுகளை கோழிகளை
கண்ணெடுத்துப் பார்க்க அஞ்சி
அந்தக் கடைகளின்
தெருவையே தவிர்த்துச் செல்லும்
கால்களும்
கடிக்காத எறும்பை
நசுக்க விரும்பாத
கருணையும் இருந்துமென்ன...
திறந்திருந்த உடற்பரப்பில்
சுருக்கெனக் கடித்து-தன்
விடமேற்றிய சிறுகுளவி
பிடிபடாமல் பறந்தது
கடுகடுப்பே மனசிலும்...
வலி மரக்க பற்பசைதடவி
மனம் மறக்க வலை மேய்ந்தேன்
கணினியில்...
சிற்றசைவில் கண் திரும்ப
சுவர்ப்பல்லி வாயில் சிறுகுளவி
அதக்கி அதக்கி
விழுங்கி
சப்பு கொட்டி நாசுழற்றி
திருப்தியான பல்லியை
குரூரக் குதூகலிப்பு எழ
பார்க்கும் என்னுள்
மெல்ல மெல்ல
வளர்ந்தது பல்லியின் வால்.