நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

“வெற்றிகரமாக ஆளுவதென்பது ஆளப்படுபவர்கள் நாம் ஆளப்படுகிறோம் என்று தெரிந்து விடாமல் பார்த்துக் கொள்வதுதான்!”

“மிகக் கூர்மையான, பெரிதும் நுட்பமான நினைத்ததை நினைத்தபடி சாதிக்கும் கருவி, இந்தப் பிரபஞ்சத்தில் முகத்துக்கு முகம் புகழ்வது தான்.”

“பழிவாங்கும் கலை என்பது, சந்தேகம் ஒரு சிறிதும் வராதபடி அதைப் பெரிதும் ரகசியமாக நிகழ்த்திக் காட்டுவது தான்.”

“அறிவாளிக்கு மிக உயர்ந்த வேதனை என்பது எந்த வேலையும் செய்யாமல் ஒருவனிடம் நல்ல பெயர் வாங்கும் திறமைதான்”

நன்றி: எரிக் ப்ரன்க் ரஸ்ஸல் 

 
Share on:

         இயற்கையின் அற்புதப் படைப்பான மணம் வீசும் மலர்களிலிருந்து பெறப்படும் மகத்துவமான ஒன்று தேன். ரிக் வேதத்தில் கூட தேனின் சிறப்பு வெகுவாக சொல்லப்பட்டிருக்கிறதாம். வேதகாலத்து மகரிஷிகளின் முக்கிய பானமாக விளங்கியதும் தேன் தானாம்.
            தேனீக்கள் தம் முகத்தில் நீண்டிருக்கும் குழல்போன்ற அமைப்பை மலரில் நுழைத்து உறிஞ்சிய தேனுடன் தன் மார்பில் சுரக்கும் ஒருவகை சுரப்பி நீரையும் சேர்த்து பக்குவப்படுத்தி தம் வயிற்றுப் பகுதியிலுள்ள பை போன்ற அமைப்பில் நிரப்பிக் கொள்கின்றன. தம் கூட்டுக்குத் திரும்பும் தேனீக்கள் சேகரித்த தேனை தம் சிறகுகளை வேகமாக அடித்து விசிறி தேனடையின் ஒவ்வொரு அறையிலும் பாதுகாக்கின்றன.
             தேனீக்கள் அடிக்கடி இடம் விட்டு இடம் மாறும் தன்மையற்றவை எனக் கண்டறிந்த மனிதர்கள் செயற்கைக் கூடுகள் வைத்து தேனீக்களை வளர்த்து பெருமளவு தேனை சேகரித்து உபயோகிக்கக் கற்றனர். கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கக் கண்டறியும் முன்பே தேனின் பயனை அறிந்து உபயோகித்துள்ளனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளதாம்.
            உலகிலேயே அமெரிக்காவில்தான் தேன் உற்பத்தி அதிகம். அடுத்து ஆஸ்த்ரேலியா, கனடா, ஸ்பெயின், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளைக் கூறலாம். இலங்கை மற்றும் இந்தியாவின் பல இடங்களிலும் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.
            இப்படியான தேன் சேகரிப்பவை மலைத் தேனீ, கொம்புத் தேனீ, அடுக்குத் தேனீ என மூவகையாக உள்ளன.
            
        உருவத்தில் பெரிய மலைத்தேனீ மலைகளிலும் செங்குத்தான பாறைகளிலும் தேன்கூடுகளைக் கட்டி அதிகளவு தேன் சேகரிக்கும். இவை கொடூரமானவை. எனவே பழக்கப்பட்டவர்கள் மட்டுமே பக்குவமாக இத்தேனடைகளில் தேன் எடுப்பர்.
          
         கொம்புத்தேனீக்கள் சிறிய கூடுகளையே கட்டும். மரக்கிளைகள், புதர்களில் மட்டுமே கட்டுமிவை விஷத்தன்மையற்றவை. இத்தேனடைகளிலிருந்து குறைந்த அளவே தேன் கிடைக்கும்.
            
         மரப்பொந்துகளிலும் பூமியிலுள்ள வளை போன்ற இடங்களிலும் அடுக்கடுக்காக அடைகளை அமைக்கும் அடுக்குத் தேனீக்களும் மனிதர்களுக்கு கெடுதல் செய்வதில்லை.
          
         மண் பாத்திரம், கண்ணாடிப் பாத்திரம், பீங்கான் பாத்திரம் ஆகியவற்றில் தேனை சேகரித்து பாதுகாத்து உபயோகிக்கலாம்.
            உடலுக்குப் புது உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் அளிக்கும் தேனை ஆரோக்கியமான சமயங்களிலும் குழந்தை முதல் முதியவர் வரை அருந்தலாம். ஒருசிலருக்கு மட்டும் தேன் ஒத்துக் கொள்ளாது. சருமத்தில் நமைச்சலை ஏற்படுத்தி கட்டிகளை உண்டாக்கும். வேறு சிலருக்கு வாந்தியும் வயிற்றுப் போக்கும், சிலருக்கு மூச்சுத் திணறலும் கூட ஏற்படலாம்.
          
         கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத் தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதிய தேன், பழைய தேன் என ஏழுவகைத் தேன் பற்றிய குறிப்புகள் பதார்த்த குண விளக்கம் எனும் நூலில் காணப்படுகிறது.
          
         திரிதோஷங்களால் ஏற்படும் நோய்களையும் மாந்தம் மற்றும் பசியின்மையையும் நீக்க வல்லது கொம்புத்தேன்.
           நுரையீரல் தொடர்பான சளி, காசம், காய்ச்சல், உடல்தடிப்பு, அக்கிப்புண், விக்கல் போன்ற நோய்களை நீக்க வல்லது மலைத்தேன். பசி விருத்தியாகவும், குரல் வளத்தையும் அளிக்க வல்லது இது.
           உடலுக்கு உஷ்ணமூட்டி, வாந்தி, அஜீரணம், விக்கல், பசியின்மை, இருமல், சளி, காசம் போன்ற நோய்களை நீக்கக் கூடியது மரப்பொந்துத் தேன்.
 சரும நோய்களை நீக்கவும், ரணம், கரப்பான், புழுவெட்டு போன்றவற்றை ஆற்றவும் சளியை அறுத்து காச நோய்க்கு மருந்தாகவும் மனைத்தேன் பயன்படுகிறது.
           கண் தொடர்பான நோய்களைப் போக்கவும், சளித்தொல்லையை நீக்கவும், இருமல், அஜீரணம், வாந்தி போன்றவற்றையும் கட்டுப்படுத்த வல்லது புற்றுத்தேன்.
         
         புதிய தேன் சக்தி மிக்கது. உடலுக்கு வெப்பத்தையும், சக்தியையும் தரவல்லது. இரத்தத்தைச் சுத்திகரிக்க வல்லது. பசியின்மையைப் போக்கும். கபத்தை அறுத்தெடுக்கும், மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றிலுள்ள அசுத்தப் பூச்சிகளை வெளியேற்றும். ஆழ்ந்த உறக்கத்தை அளிக்கும். பஸ்பம், செந்தூரம், மாத்திரை, பானங்கள் போன்ற பல மருந்துகளுக்குத் துணைமருந்தாகவும், அனுபானமாகவும் பயன்படுகிறது.
             நீண்ட நாட்களானாலும், தேனை சீரான முறையில் வைத்திருக்காவிட்டாலும் அது புளித்துப் போய் பழைய தேனாகும்.இது வாதம் மற்றும் மூல சம்பந்த நோய்களைத் தோற்றுவிக்கும். இதனை உபயோகித்தால் அஜீரணம், வாந்தி, வயிற்றில் எரிச்சல் ஆகியன ஏற்படும்.

தேனில் அடங்கியுள்ள சத்துகள்:             அயோடின், கால்சியம், கந்தகம், சோடியம், மக்னீஷியம், குளோரின், பொட்டாசியம், பாஸ்பரம், இரும்புச்சத்து, உப்புச் சத்து, குளூக்கோஸ், லெவுலோஸ் (Levlose) லாக்டிக் ஆசிட், டார்டாரிக் ஆசிட், சிட்ரிக் ஆசிட், ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் உயிர்ச்சத்துக்களான பி-2, பி-6,சி, மற்றும் கே போன்றவை உள்ளன.

சுத்தமான தேனை அறிய:            தேன் சுத்தமானது தானா என்றறிய மை ஒற்றும் பேப்பர் (Blating paper) மீது ஒரு சொட்டு விட்டால் பேப்பரில் ஊறாது முத்துப் போல் நிற்க நல்ல தேன் என அறியலாம். வெல்லப்பாகு காய்ச்சி கலப்படம் செய்யப்பட்டதாயின் இச்சோதனையில் தெரிந்துவிடும்.
             தேனின் மருத்துவ குணங்களை மற்றொரு பதிவில் காண்போம்...

 
Share on:

பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி இருக்கின்றதென்பது மெய்தானே...
... .... ....

உடம்பு என்பது உண்மையில் என்ன... கனவுகள் வாங்கும் பைதானே...!

 

                எவ்வளவுதான் மனசை துடைத்து துடைத்து தெளிவாக்கிக் கொண்டாலும் ஒவ்வொரு மரணத்தின் தூசியிலும் கலங்கித் தான் போகிறது பாழும் மனசு.

                உறவாயிருக்கட்டும், நட்பாயிருக்கட்டும், அறிந்தவரோ அறியாதவரோ யாராகவேனும் இருக்கட்டும்... இறப்பின் இழப்பு சற்றேனும் சலனப்படுத்தவே செய்கிறது நம்மை. கணநேரமேனும் ஆட்பட்டு மீள்கிறோம்.

                போனவர் போக இருப்பவர் நினைத்து அனுதாபமெழுகிறது.

                மூன்று நாட்களுக்கு முன் தோழர் யாழி கோவையிலிருந்து அனுப்பிய குறுஞ்செய்தியால் திரு.கோவை ஞானியின் துணைவியார் இவ்வுலகைத் துறந்து உடல் கிடத்தினார் என்ற தகவலும் மனதைக் குடைந்தவண்ணமிருக்கிறது.

                அம்மையாரின் ஆன்மசாந்திக்கு நாம் பிரார்த்திப்போம்.


Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ▼  September (3)
      • இது இப்படித்தான்...!
      • ‘தேன்' இருக்க பயமேன்?!
      • மரணத்தின் தூசி
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • முத்துச்சிதறல்
    துபாய் எக்ஸ்போ-2!!!
    2 weeks ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    சுடலை ஞானம்
    2 months ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    கேட்பாரில்லா கீதாஞ்சலி
    3 months ago
  • கீதமஞ்சரி
    பூச்சி வீடும் புல் தூக்கிக் குளவியும்
    3 months ago
  • திண்டுக்கல் தனபாலன்
    முத்துப்பல் சிரிப்பென்னவோ...
    8 months ago
  • அழியாச் சுடர்கள்
    சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் - ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம்
    8 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    10 months ago
  • ரிஷபன்
    ராசா
    1 year ago
  • வண்ணதாசன்
    தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
    1 year ago
  • சமவெளி
    அடிக் கிளைப் பூ.
    2 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
    2 years ago
  • CrUcifiXioN
    FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!
    2 years ago
  • Thanjai Kavithai
    4 years ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    5 years ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    5 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    5 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    5 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    5 years ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    5 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    6 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    8 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    9 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    10 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    11 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates