வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)

         வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)

        இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. . முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டதை மகாவில்வம் என்பார்கள். (ஐந்து இலைக்கு மேலமைந்ததை நாம் முன் பதிவில் பார்த்தோம். அதுவும் மகா வில்வமென இராஜ இராஜேஸ்வரி அம்மா சொல்லியிருந்தாங்க )

       கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும். இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும்.

        பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியன ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம்.

        இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம் விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும்.வெட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.

ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயிற்று வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.

இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். மந்தத்தைப் போக்கும்.

பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிர்க்கும்.
பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கைகால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது .

வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.

      பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும்.

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு
புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.

வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.


வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.

இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் தேய்த்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது உடலுறவு கூடாது.

பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும்.


வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.

வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.

வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.

வில்வக் காயை சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும்.

வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.

வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும்.


(தேடத்தேட  இன்னும் வரும்...)


14 கருத்துரைகள்
  1. எத்தனை எத்தனை பலன்கள் - வில்வ மரத்தின் மூலம்.....

    தகவல்கள் தொடரட்டும்... தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  3. ஐந்து இலை கொண்டதை மகாவில்வம் என்பார்கள். (ஐந்து இலைக்கு மேலமைந்ததை நாம் முன் பதிவில் பார்த்தோம். அதுவும் மகா வில்வமென இராஜ இராஜேஸ்வரி அம்மா சொல்லியிருந்தாங்க )---இங்கிருந்து தான் வருகிறேன்!
    வில்வத்தில் 9 மற்றும் 12 இலைகள் உண்டு;இதனை மகாவில்வம் எனக்கூறுவர். தஞ்சைப் பகுதியில் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. @ ச‌ந்திர‌ வ‌ம்ச‌ம்...

    'முன் ப‌திவில்' என்ற‌ இட‌த்தில் அப்ப‌திவின் லிங்க் கொடுத்திருக்க‌ வேண்டும் நான். நேர‌மிருந்தால் ம‌றுப‌டி பார்க்க‌வும்.http://nilaamagal.blogspot.in/2012/02/2.html

    ReplyDelete
  5. ம‌கா வில்வ‌ம் ப‌ற்றியும் ஒரு ப‌திவிட‌ த‌க‌வ‌ல்க‌ள் உள்ள‌து.

    ReplyDelete
  6. உங்களது பின்னூட்டம் தஞ்சை க்ருஷ்ணப்பிரியா கவிதைகளில் படித்து இங்கே வந்தேன்.
    வில்வத்தைப் பற்றி இன்று பிரதோஷ நாள். படிப்பதே என் பாக்கியம்.

    வில்வ மரம் நல்ல முதிர்ந்த பழத்தைப் போட்டு வைத்தால் வரும்.
    ஆனாலும் எத்தனை பாதுகாத்தாலும் வரும் என்று நிச்சயமாகச் சொல்லிட முடியாது.
    ஏதோ ஒரு கால கட்டத்தில் என் மனைவியின் சொந்தக்காரர் ஒருவர் தஞ்சை ஜில்லாவடகுடியிலிருந்து
    கொண்டு வந்து எங்கள் தோட்டத்தில் ( தஞ்சை திருபுரசுந்தரி நகரில்) சின்ன கடுக்கூண்டு பிள்ளையார்
    கோவில் பக்கம் போட்டு விட்டு சென்றார்கள்.

    கடந்த 30 ஆண்டுகளில் இரு பெரிய வில்வ விருக்ஷங்களாகப்பரிணமித்து உள்ளது.
    அதன் கீழே ஒரு சின்ன லிங்கத்தை வைத்து அதற்கு ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள் என்று
    நான் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

    வில்வத்தின் மருத்துவ குணங்கள் பல. வில்வாதி லேகியம் பிரசித்தம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. சிறப்பான தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  8. வில்வமரம் குறித்த தகவல்கள் மிகவும் பிடித்திருந்தது நிலா. வில்வமரத்தின் புகைப்படம் இருந்தால் போடுங்களேன். ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள். ஆங்கில் பெயர் தெரிந்தால் கூகிளில் தேடலாம்.

    ReplyDelete
  9. வில்வமரம் குறித்து அருமையான தகவல்கள்..

    நிறைவான பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. அன்பின் நிலாமகள் - அருமையான பதிவு - வில்வ மரத்தின் மருத்துவக் குணங்களை எடுத்துரைத்தது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. சிவ சிவா ! வில்வத்தின் மருத்துவ குணங்கள் வியக்க வைத்தன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் ந்ன்றியோ நன்றிகள்.

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  13. வில்வம் இலைச்சாறு குடித்தால் மது குடிக்கும் எண்ணமே வாராது மது குடித்தால் வாந்தி மூலமாக வெளியேறி விடும் என வாட்ஸ் அப் பார்த்தேன் அது உண்மை யா?

    ReplyDelete
  14. வில்வ இலை காய்ச்சலை குணப்படுத்துமா?

    ReplyDelete