நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

      நேற்று (23.09.2014) கடலூர் அரசு காதுகேளாதோர்  வாய்பேசாதோர்  பள்ளி சென்றோம்.
(Cuddalore deaf and dumb school) தொடர்பு எண் : 04142-221744

ஆசிரியர் மாணவர்களுடன் என் மகளும் (தலைமை ஆசிரியை அருகில்)

மதியம் அவர்களுக்கு உணவளித்து அவர்களோடு உண்டு, பேசி மகிழ்ந்து கழிந்த பொழுது நினைவில் நெடுநாள் நிற்கும்.

பாருங்க... இந்தப் பெண் வளர்ந்து நிற்கும் அழகை...!

அன்று

இன்று .

தத்தம் உடற்குறையை பொருட்படுத்தாது சத்தம் அவசியமற்ற உடல்மொழியால் அவர்கள் சம்பாஷிக்கும் உற்சாகம், சதா சர்வகாலமும் பேசவும் கேட்கவுமாயிருக்கும் நம்மையும் சட்டென பற்றிக் கொள்கிறது. மகிழ்வென்பது கிடைப்பதில் திருப்தியுடனிருப்பதில் தானே...

அங்கிருக்கும் ஆசிரியர்களும் உணவு மற்றும் பராமரிப்புப் பணியிலிருப்பவர்களும் போற்றத் தக்கவர்கள். வேலையை வேலையாக மட்டும் செய்யாமல் காருண்யத்தோடும் செய்ய வாய்ப்பு பெற்றவர்கள்.

Share on:
     
        சில நாட்களுக்கு முன் மனோ மேம் எனது பதிவிடுதலின் மந்தத் தன்மையை நீக்கும் விதமாக ஒரு தொடர்  பதிவுக்கு அழைத்தாங்க. ஓட முடியாதவன் ஊக்க மருந்து சாப்பிட்ட கதையா நானும் முயற்சி செய்தேன். இதில் கேள்வியும் நானே; பதிலும் நானே. தோழமைப் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பெரியமனசு பண்ணி மன்னிச்சுடுங்க.

தோழமையின் உன்னதம்?

முறையாய் வரும் உறவினைக் காட்டிலும் இயல்பாய் வளரும் தோழமையின் நிலைப்பாடு மிகுதி.

தோழமையின் உன்மத்தம்?

வளரிளம் பருவத்தில் மனசை நிறைக்கும் நட்பின் மீதான அபரிமித நம்பிக்கை; பிரேமை; குதூகலம்.

நட்பின் உரிமைக்கு எல்லை எது?
Share on:



இரண்டு நாட்களுக்கு முன் நண்பரின் மகள், செய்யுள் இலக்கணத்தில் அசைபிரித்து அலகிடுதல் பற்றி சொல்லித் தரச் சொன்னாள். பத்தாம் வகுப்பு பாடத்தில் மட்டுமே இன்னும் இருக்கக் கூடிய ஒரு பகுதி அது.

'நேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா ; .' என மனதில் அதற்கான வாய்ப்பாடுகள் எழும்பின. கூடவே அதைக் கற்பித்த ஆசிரியரும் நினைவில் பிரகாசித்தார்.

பத்தாம் வகுப்புத்  தமிழாசிரியர் கிருஷ்ண மூர்த்தி  சார்  ...

நாங்க பத்தாவது வந்தபோது பள்ளிக்கு புதிதாக மாற்றலில் வந்தவர். கண்ணியமான வேட்டி சட்டையில் கருத்த நெடிய உருவம். (தமிழாசிரியர்கள் வேட்டி  தான்  அணிந்தனர்.இன்றும்  எங்கள் குழந்தைகள் படித்த பள்ளியிலும்!) முகத்தில் எப்போதும் சிறு கண்டிப்பு தெரியும். கம்பீரமான விடுவிடுவென்ற நடை. (பின்னாளில் ஒரு சாலை விபத்தில் கால் அடிபட்டு  சாய்ந்த நிதான நடையில் அவரைப் பார்த்து கலங்கிப் போனோம்.)

தமிழ் மேல் சுவை கூட்டியவர்  அவர் தான். மனப்பாட செய்யுள் தவிர பிற பாடங்களை நாங்கள்  புரிந்து படிக்கவும் நினைவில் நிறுத்தவும் அவர் வெகுவாக பிரயாசைப் படுவார். எங்களின் தமிழ் மன்றத் தேர்வுச் சான்றிதழ்களெல்லாம்  அவரின் ஊக்குவிப்பே.

எங்கிருந்தாலும் நல்லாயிருப்பீங்க சார்... எங்க பிரார்த்தனைகளும் அதுதான்! உங்கள் நல்லாசியில் எங்கள் அறிவு துலங்கட்டும்!!

விரல் பிடித்து எழுதப் பழக்கிய முதல் ஆசிரியரிலிருந்து படிப்படியாக வாழ்வின் பாதையில் கற்பித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்! 
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ▼  September (3)
      • ஒலித்துக் கொண்டேயிருக்கும் 'அவர்களின்' குரல்....
      • தோழமைக்காக ஒரு தொடர்பதிவு...
      • வாழ்த்துங்கள்; வளர்கிறோம்!
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • திண்டுக்கல் தனபாலன்
    திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஒன்று (1)
    5 days ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    தால லாவண்யம்
    6 days ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதி !!!!!
    1 week ago
  • கீதமஞ்சரி
    புத்தகத் திருவிழாவில் 'சாத்தான்'
    2 weeks ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    கனவுக்கடத்தல்.
    3 months ago
  • அழியாச் சுடர்கள்
    நான் என்ன படிக்கிறேன் ஏன்? சி. சு. செல்லப்பா
    3 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • ரிஷபன்
    ராசா
    1 year ago
  • வண்ணதாசன்
    தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
    2 years ago
  • சமவெளி
    அடிக் கிளைப் பூ.
    2 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
    2 years ago
  • CrUcifiXioN
    FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!
    3 years ago
  • Thanjai Kavithai
    4 years ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    5 years ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    5 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    6 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    6 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    6 years ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    6 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    7 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    9 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    10 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    10 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    11 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates