நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

கவிதை அப்பாவுக்கொரு செல்ல மகளின் கவிதாஞ்சலி... 
      மரபுக் கவிதை மயங்கிய பொழுதில் புதுக்கணித சூத்திரமாய் புதுக்கவிதைப் பூங்காவில் பூத்திட்ட புதுமைக் கவி...
        எண்பதுகளில் மட்டுமல்ல, என்றென்றும் நம் நினைவில் இனித்திடும் ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' படைத்த எழுச்சிக் கவி...
 களம்பல கண்டவர், கவிதைத் திறத்தால் உளம்பல வென்றவர், உயர்வாய்த் தளம்பல கண்டவர், பதிப்புக் கலைக்கு முகமென நின்றவர், சாகாத வானம், சரியாத பேரிமயம், நேர்(மை)க் கோடாய் நின்ற நெருப்பு, சிவகங்கைக் கொரு சிறப்பு... கவிஞர் மீரா!(நன்றி: ‘ஆனந்தஜோதி'-மார்ச்,2012, பேரா. இரா.பாஸ்கரன்)
         
       இப்பூவுலகில் வாழப்பிறந்த அனைவரும் ஏதேனுமொருநாள் புறப்பட்ட இடத்துக்கு போய்ச்சேர வேண்டியுள்ளது உலக நியதி. 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி  கவிஞர் மீராவை காலன் களவாண்டு சென்றான். அவரை மைய அச்சாய்க் கொண்டு சுழன்ற இலக்கிய உலகும், இல்லற உறவுகளும் செய்வதறியாமல் பதைத்து பரிதவித்தனர். அழுதும் அரற்றியும், அவர் பெருமைகளைப் பேசிப் புளங்ககித்தும், நினைவெழும்போதெல்லாம் நின்று கலங்கியும் ஆற்றவொண்ணா வேதனையில் ஆழ்ந்தனர்.
         
       எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது எத்துணை சத்தியமோ அத்தகையதே ஆண் குழந்தைக்கு அம்மா மேல் அதீத பிரியமும் பெண் குழந்தைக்கு அப்பா மேல் அளவற்ற பாசமும் வேர்விட்டிருப்பது.
       
       
கவிஞர் செல்மா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் 

மீராவின் செல்ல மகள் ‘செல்மா' என்று தந்தையால் சீராட்டப்பட்ட கண்மணியும் இதற்கு விதிவிலக்கல்ல.
Share on:
பண்டிகைகளில் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது பழகிப் போனதொரு சம்பிரதாயம் ஆகிவிட்டது . கிருஷ்ண ஜெயந்திக்கும், விநாயக சதுர்த்திக்கும், விஜய தசமிக்கும் கூட வாழ்த்து சொல்லிக்கொள்ளும் கூத்தும் பார்க்க முடிகிறது.

சமீபத்திய ஓணத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே 'சொல்லிடணும், சொல்லிடணும்' என்றிருந்தும் என்னால் ஓணம் முடிந்து மூன்று நாள் கடந்து தான் சொல்ல வாய்த்தது ஒருவருக்கு... அவர்... நம் கிருஷ்ணப்ரியா!!

தொலைபேசி மணி ஒலித்து தேய்ந்தது. சில மணித் துளிகளில் அவரே தொடர்புக்கு வந்தார். 
"ஒரு வாரமா உங்க நினைவுதான்... மகள் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் பற்றி ... மலர்க் கோலமிடுதலில் அவங்க அணி வெற்றி பெற்றது பற்றி, சக தோழிகளின் 'திருவாதிரைக் களி' ஆட்டம் பற்றி எல்லாம் கேள்விப் பட்டபோது, உங்க நூல் வெளியீட்டு விழாவுக்காக உங்க வீட்டுக்கு வந்து தங்கியிருந்த போது உறவினர்களுடன் 'திருவாதிரைக் களி' பாடி ஆடிக் காண்பித்ததெல்லாம் நினைத்துக் கொண்டேன்... 
பண்டிகையெல்லாம் நல்லாப் போச்சா?"

"நீங்க லேட்டா சொல்றதுக்கு வருத்தப் பட வேண்டாம். ரெண்டு மாசத்துக்கு முன்பே சொந்த ஊருக்கு பண்டிகைக்குப் போக ட்ரெய்ன் டிக்கெட் புக் பண்ணியும் நான் மட்டும் நண்பர் ஜே.டி.ஆர். மகள் திருமணத்துக்காக சென்னையும், கணவர், மகன்கள் மட்டும் சொந்த ஊருக்கும் போகும்படி ஆச்சு."

"அடடா... பண்டிகையும் அதுவுமா குடும்பத்தோடு இல்லாம... ஓணச் சாப்பாட்டை வேற மிஸ் பண்ணியிருக்கீங்க "

"கல்யாணப் பொண்ணுக்கு ரொம்ப சந்தோஷம் ... அவ விருப்பத்தை தட்ட முடியாமத் தான், டிக்கெட் கேன்சல் பண்ணாம 'இன்னொரு நாள் கல்யாணம் விசாரிச்சுக்கலாம்' என்ற மனோஜ் கிட்ட 'நான் கல்யாணத்துக்கு போறேன்'ன்னு அறிவிச்சுட்டேன்." 

("தனக்கு சரியென்று பட்டதை சொல்லவும் செய்யவும்  தயங்காதவராச்சே நீங்க...!")

"காலைல கல்யாண வீட்டில் டிபன் சாப்பிட்டு பஸ் ஏறின நான், இரவு  வரை காய்ந்து வந்து சேர்ந்தேன் நிலா. வித்தியாசமான பண்டிகை அனுபவம் இந்தமுறை எனக்கு. ஆனா, வீட்டில் அம்மா எனக்காக அவியல், பாயாசம், மற்ற ஐட்டமெல்லாம் எடுத்து வைத்திருந்தாங்க. எடுத்துட்டு வந்து தனியா எங்க வீட்டில் உட்கார்ந்து இரவு சாப்பிட்டேன்."

"வருஷ பண்டிகை ஆச்சே... சார் சொன்ன மாதிரி சேர்ந்து கொண்டாடி இருக்கலாம் தானே...?"

"பண்டிகை அடுத்த வருஷமும் வரும்... அந்தப் பொண்ணு கல்யாணத்துல இப்பதானே கலந்துக்க முடியும்...?!" 

"அது சரி! உங்க தெளிவு எனக்கு ரொம்பப்  பிடிக்கும் ப்ரியா!"





ஆமா... இந்தப் படத்துல மனோஜ் எங்களுக்கு 'ஹாய்' சொல்றாரா? இல்லை... உங்களுக்கு கொம்பு வைக்கிறாரா?

 ரெண்டு பேரும் இந்தப் படத்தில் 8-10 வயசுக் குழந்தைகளாக இருக்கீங்க... அச்சு அசலா!

உங்க கவிழ்ந்த முகத்தில் இத்தனை வெட்கத்தை, உடல்மொழியின் பெருமிதத்தை ரசிக்கிறேன் ப்ரியா...
                                   


                                 வாழ்க! வளமுடன்.. நலமுடன்!! 
                             விஷ்ணு, விஜய் உடன்!!!

( ப்ரியா... நீங்க சொன்னமாதிரி ஒரு பதிவு தேத்திட்டேனா.... உங்க வீட்டுப் பசுவை எங்க தென்னை மரத்தில் கட்டியாச்சு. ஆனா, நம்ம உரையாடலில் ஒரு நல்ல கதைக்கரு இருக்குப்பா... அது உங்க சாய்ஸ்... ஓகே?!)
Share on:
திருமதி.கோமளா பத்மநாபன் , M .A ., M.Ed.
(எனதினிய ஆசிரியர்களுள் முதன்மையாய்  இவர்.பின்னொரு நாளில் இவர் பற்றிய நினைவுகளை 'அசை' போடுவேன் உங்களுடன்)

குலனரு டெய்வங் கொள்கை மேன்மை

                                 கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
                                 நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
                                 உலகிய லறிவோ டுயர்குண மினையவும்
                                அமைபவ னூலுரை யாசிரி யன்னே. (26)
                                                 
                                                                        -பவணந்தியார், நன்னூல்.
தெளிவுரை: 
       நற்குடிப் பிறப்பு, அருள், இறைவழிபாடு என்ற இவற்றால் அடைந்த மேன்மையும், பல நூல்களில் பழகிய தெளிவும், நூலின் பொருளை மாணாக்கர் எளிதில் உணரும் வண்ணம் எடுத்துச் சொல்லும் வன்மையும், நிலம், மலை, துலாக்கோல், மலர் போன்ற குணங்களும், உலக நடையை அறியும் அறிவும், இவை போன்ற உயர்ந்த குணங்கள் பிறவும் நிரம்ப உடையவர் ஆசிரியர் எனப்படுவர்.

(நிலத்தின் மாண்பு)
தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே. (27)

தெளிவுரை:
     மற்றவரால் அறியப்படாத வடிவத்தின் பெருமையும், தன் மேல் பொருந்திய சுமையால் கலங்காத வன்மையும், தன்னைச் சார்ந்த மக்கள் தோண்டுவது போன்ற குற்றங்களைச் செய்தாலும் பொறுக்கும் பொறுமையும்,பருவ காலத்தில் உழவர் செய்யும் முயற்சியின் அளவுக்கு ஏற்ப பயனைத் தருதலும் நல்ல நிலத்தின் சிறந்த குணங்களாகும்.

 (மலையின் மாண்பு)
     அளக்க லாகா வளவும் பொருளும்
      துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
      வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே. (28)

தெளிவுரை:
     அளவிட முடியாத வடிவத்தின் அளவும், அளவிட முடியாத பலவகைப் பொருளும், எத்தனை வன்மையுடையவராலும் அசைக்கப்படாத வடிவத்தின் நிலையம், நெடுந்தொலைவில் உள்ளவராலும் காணப்படும் உயர்வும், மழை பெய்யாமல் வறண்ட காலத்திலும் தன்னைச் சேர்ந்த உயிர்களுக்கு நீர் வளத்தைக் கொடுக்கும் கொடையும் மலைக்குப் பொருந்திய குணங்களாகும்.

     (நிறைகோல் மாண்பு)
      ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
      மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே. (29)

தெளிவுரை:
     நிறுக்கப்பட்ட பொருளின் அளவை ஐயம் நீங்கக் காட்டுதல், உண்மை பெற இரு தட்டுகளுக்கும் நடுவாக நிற்றல் ஆகியவை துலாக்கோலின் குணங்களாம்.

      (மலரின் மாண்பு)
       மங்கல மாகி யின்றி யமையா
       தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
       பொழுதின் முகமலர் வுடையது பூவே. (30)

தெளிவுரை:
      நல்வினைகளுக்கு உரிய பொருளாகி, ஏதொன்றும் தான் இன்றி முடியாததாகி, கண்டவர் அனைவரும் மகிழ்ந்து தன்னைச் சூடிக் கொள்ள மென்மையான குணம் உடையதாகிப் பூப்பதற்கு உரிய காலத்திலே முகம் விரிதலை உடையது பூவாகும்.

       அகத்தியம், தொல்காப்பியத்துக்கு அடுத்ததாய் எழுந்தது பவனந்தியாரின் நன்னூல். மேலிரண்டினும் எளிமையாய் உள்ளதுமாம்.  800 ஆண்டுகளுக்கு முன் சொன்ன ஆசிரியர் இலக்கணம் பொருந்த நம்மை அறிவேற்றும ஆசிரியர்களை வாழ்த்தி வணங்குவோம்!

Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ▼  September (3)
      • மீள்வாசிப்பில் ஒரு மறு மதிப்பீடு
      • ஓணப் பூவில் எஞ்சிய நறுமணம்
      • நல்லாசிரியர்!
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • திண்டுக்கல் தனபாலன்
    திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஒன்று (1)
    5 days ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    தால லாவண்யம்
    6 days ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதி !!!!!
    1 week ago
  • கீதமஞ்சரி
    புத்தகத் திருவிழாவில் 'சாத்தான்'
    2 weeks ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    கனவுக்கடத்தல்.
    3 months ago
  • அழியாச் சுடர்கள்
    நான் என்ன படிக்கிறேன் ஏன்? சி. சு. செல்லப்பா
    3 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • ரிஷபன்
    ராசா
    1 year ago
  • வண்ணதாசன்
    தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
    2 years ago
  • சமவெளி
    அடிக் கிளைப் பூ.
    2 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
    2 years ago
  • CrUcifiXioN
    FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!
    3 years ago
  • Thanjai Kavithai
    4 years ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    5 years ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    5 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    6 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    6 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    6 years ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    6 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    7 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    9 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    10 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    10 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    11 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates