கவிதை அப்பாவுக்கொரு செல்ல மகளின் கவிதாஞ்சலி...
மரபுக் கவிதை மயங்கிய பொழுதில் புதுக்கணித சூத்திரமாய் புதுக்கவிதைப் பூங்காவில் பூத்திட்ட புதுமைக் கவி...
எண்பதுகளில் மட்டுமல்ல, என்றென்றும் நம் நினைவில் இனித்திடும் ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' படைத்த எழுச்சிக் கவி...
களம்பல கண்டவர், கவிதைத் திறத்தால் உளம்பல வென்றவர், உயர்வாய்த் தளம்பல கண்டவர், பதிப்புக் கலைக்கு முகமென நின்றவர், சாகாத வானம், சரியாத பேரிமயம், நேர்(மை)க் கோடாய் நின்ற நெருப்பு, சிவகங்கைக் கொரு சிறப்பு... கவிஞர் மீரா!(நன்றி: ‘ஆனந்தஜோதி'-மார்ச்,2012, பேரா. இரா.பாஸ்கரன்)
களம்பல கண்டவர், கவிதைத் திறத்தால் உளம்பல வென்றவர், உயர்வாய்த் தளம்பல கண்டவர், பதிப்புக் கலைக்கு முகமென நின்றவர், சாகாத வானம், சரியாத பேரிமயம், நேர்(மை)க் கோடாய் நின்ற நெருப்பு, சிவகங்கைக் கொரு சிறப்பு... கவிஞர் மீரா!(நன்றி: ‘ஆனந்தஜோதி'-மார்ச்,2012, பேரா. இரா.பாஸ்கரன்)
இப்பூவுலகில் வாழப்பிறந்த அனைவரும் ஏதேனுமொருநாள் புறப்பட்ட இடத்துக்கு போய்ச்சேர வேண்டியுள்ளது உலக நியதி. 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி கவிஞர் மீராவை காலன் களவாண்டு சென்றான். அவரை மைய அச்சாய்க் கொண்டு சுழன்ற இலக்கிய உலகும், இல்லற உறவுகளும் செய்வதறியாமல் பதைத்து பரிதவித்தனர். அழுதும் அரற்றியும், அவர் பெருமைகளைப் பேசிப் புளங்ககித்தும், நினைவெழும்போதெல்லாம் நின்று கலங்கியும் ஆற்றவொண்ணா வேதனையில் ஆழ்ந்தனர்.
எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது எத்துணை சத்தியமோ அத்தகையதே ஆண் குழந்தைக்கு அம்மா மேல் அதீத பிரியமும் பெண் குழந்தைக்கு அப்பா மேல் அளவற்ற பாசமும் வேர்விட்டிருப்பது.