"மரம் மாதிரி நிக்கிறியே
மடப்பயலே..."
கோபம் வந்தால் அப்பாவின் வாயிலிருந்து
கட்டாயம் புறப்படும் வசை இது.
பல்லைக் கடித்து கண்களை உருட்டி
தலையில் தலையில் அடித்துக் கொள்வார்.
காலம் போன காலத்தில்
நோய் தின்றது அப்பாவின் வலதுகாலை...
முதலில் சுண்டுவிரல்
தொடர்ந்து
அடியடியாய் அடியடியாய்
அறுத்துதெறிந்து
முடிவில் முழுக்காலும் ஆனது
ஒரு கட்டைக் காலாக.
சிலகாலம் சென்று
உயிர் கழிந்த உடம்பும் கட்டையாக.
எரியூட்டித் திரும்பிய முன்னிரவில்
விளக்கு மாட ஒளியில்
துக்கம் தூண்டியது அனைவருக்கும் ...
அவரது எரியூட்டப்படாத கட்டைக் கால்.
கரும காரியம் முடிந்தவுடன்
கட்டைக் காலில் மண் நிரப்பி
ஒரு பூச்செடி நட்டான் மடப்பயல்
உயிர்த்துச் சிரித்தார் அப்பா.
மடப்பயலே..."
கோபம் வந்தால் அப்பாவின் வாயிலிருந்து
கட்டாயம் புறப்படும் வசை இது.
பல்லைக் கடித்து கண்களை உருட்டி
தலையில் தலையில் அடித்துக் கொள்வார்.
காலம் போன காலத்தில்
நோய் தின்றது அப்பாவின் வலதுகாலை...
முதலில் சுண்டுவிரல்
தொடர்ந்து
அடியடியாய் அடியடியாய்
அறுத்துதெறிந்து
முடிவில் முழுக்காலும் ஆனது
ஒரு கட்டைக் காலாக.
சிலகாலம் சென்று
உயிர் கழிந்த உடம்பும் கட்டையாக.
எரியூட்டித் திரும்பிய முன்னிரவில்
விளக்கு மாட ஒளியில்
துக்கம் தூண்டியது அனைவருக்கும் ...
அவரது எரியூட்டப்படாத கட்டைக் கால்.
கரும காரியம் முடிந்தவுடன்
கட்டைக் காலில் மண் நிரப்பி
ஒரு பூச்செடி நட்டான் மடப்பயல்
உயிர்த்துச் சிரித்தார் அப்பா.