நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >



 தந்தை கரம்பிடித்து தள்ளாடி நடைபழகி
வந்தவொரு சிறுபெண்ணை வழிமறித்துக் கேட்டேன்யான்.
“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றலே-உந்தன்நாளின் பெரும்பொழுதில் மனவிருப்போடிருப்பது
அப்பாவிடமா? அம்மாவிடமா?"
“அப்பாவிடம்தான்!” என ஒற்றைச் சொல்லைச் சிறகாக்கி
கொவ்வை இதழ்விரி குறுநகை தெறிக்க-தன்
ஒளிர்விழிகளால் புன்னகைத்து
எனைக் கடந்தாள்; மனங்கிளர்ந்தாள்-ஆம் ஆம்!!

அப்பாவின் கம்பீரம் மகளின் பிரம்மிப்பு
அப்பாவின் புன்னகைதான் மகளின் பூரிப்பு
அப்பாவின்  பண்பாடு மகளுக்கு வழிகாட்டி
அப்பாவின் குணமெல்லாம் மரபணுவாய் மகளிடம்.

தந்தைகரம்பற்றி தள்ளாடி நடந்தமகள்
பிந்தைவாழ் கடலில் பெருநீச்சல் பழகிட
சிந்தை பொலிவுற செந்தமிழ்க் கல்விபெற
தள்ளிவாழ முதற்சூழல் மேற்கல்வி, விடுதிவாசம்
பிரிதலும் கூடலும் அன்புபெருக்கிற்று இருவருக்கும்.

வளர்ந்த மகளுக்கு வாழ்க்கைத் துணை தேடும் பெருவிழைவில்
நாள்பார்த்து கோள் பார்த்து நல்லனவெல்லாம் தேர்ந்து
தான்பார்த்த வாலிபனை ஊர்கூட்டி மணமுடித்து
இணைந்தவர்கள் வைத்த அடி ஏழில்
தன்பிறவிப் பயன் துய்த்து
விழிகசிய தழுதழுத்து விடைபெறும் தன்குலமகளை
வழியனுப்ப மொழியற்று
தலையசைக்கும் தருணமதில் தளர்வுற்று
உயிர்சோரும் தகப்பன்களின்
உணர்வதை உணர்த்திட
உணர்-வதையையுணர்த்திட
எம்மொழியிலுமோர் சொல்லில்லை!
எம் மொழியிலும் ஓர் சொல்லில்லையே!!

இதுநாளும் தன் ஆதாரமான மகள்
இன்னொருவன் மனைக்குத் தாரமாக அலங்கரிக்க
இன்னுமவள் தளிர்நடைக்காரிதான் எனக்கென்னும்-
இன்னுமவள் தளிர்நடைக்காரிதான் என எண்ணும் தந்தைமனம்
பின்னாளில் அவளுமோர் தாய்மைப் பேறடைய
மறுபடியும் மகளுக்கோர் வாய்ப்பு வரும்
தந்தை கரம் பிடித்து தள்ளாடி நடைபயில.

பத்துமாதங்கள் பொத்திப் பொத்தி பாதுகாத்த
கர்ப்பிணியின் மடியிறங்கி  மகவுபெறும் நாளும் வர
மகவீன்ற தன்மனைவிக்காய் மகப்பேறு அறைவெளியே
தவித்தலைந்த பழங்கால- பழம் கால நினைவுகளோடு
தள்ளாடித் தள்ளாடி தனித்தலையும் தகப்பனின் மனக்கிடங்கில்
உள்ளோடிக் கிடக்கும் வாட்டம் ஒருகோடி...

வெள்ளப் பெருக்கெடுத்த மதகுடைந்து பீறிட்டாற்போல்
 செல்லமகள்பெற்ற சிறுமகவைப் பரவசமாய் சிரம்தாழ்த்திக்  கையேந்தி
கேசத்துப் பொய்-மையோடு பூரிப்பைக் காட்டிட
வாய்நிறைந்த பல்லோடிருந்த அப்பாவின் கம்பீரம்
மெல்லக் குழைந்து தாத்தாவான கணம்
அடடா...வெகு அற்புதம்... அழகின் உயர் உன்னதம்.

தந்தைகரம் பிடித்து தள்ளாடி நடைபழகி
வந்தவொரு சிறுபெண்ணை மறித்துயான் கேட்டாற்போல்
எனைமறித்துக் கேட்கின்றனர் கெளசல்யாக்களும் திவ்யாக்களும்.

காதலித்துக் கைபிடித்த காரணம் பொறாது எங்கள்
வாழ்விணையை வசந்தத்தை ஆள்வைத்து அடித்து மாய்த்த
கொடும் சாதிவெறியில் மனம் பிழன்றயெம் பெற்றோரை
தள்ளி வைத்தோம் அடியோடு. இனியெங்கள் தந்தை யார்?
தந்தைகரம் பிடித்து தள்ளாடி நடைபழகி
வந்தவொரு சிறுபெண்ணை மறித்துயான் கேட்டாற்போல்
எனைமறித்துக் கேட்கின்றனர் கெளசல்யாக்களும் திவ்யாக்களும்.

எல்லோருக்கும் தந்தையே எம் இறையே
மகள்களின் கடவுளான தந்தைகள் சாத்தானாகிப் போனது ஏன் ?!

குறிப்பு: கவியரங்கத்தில் எழுதி வாசித்த  எனது கவிதை.
நன்றி: கண்ணதாசன் பிறந்தநாள் விழா, 
              'இலக்கியச் சங்கமம்', நெய்வேலி.











Share on:

 

ஒரு வயதில் காது குத்துவது வழக்கம்

அப்பாவைப் பெற்ற தாத்தா போய்ச் சேர்ந்தார்

மூன்றாவது வயதில் குத்துவோமென்று இருந்தனர்.


அம்மாவைப் பெற்ற பாட்டி

சிவபதவியடைய

துளையில்லாக் காதுகளை

அமுக்கும் தோடு அலங்கரித்தது.


புதுவீட்டு கிரகப் பிரவேசத்தோடு

காது குத்தல் சிலாக்கியம் என

மனை தேடித் தேடி அலுத்து

கட்டிய வீடும் அமையாமல்

காரணங்கள் பெருகி

ஒன்பதில் தான் குதிர்ந்தது 

பத்திரிகை அடித்து, மண்டபம் பிடித்து

ரெண்டு வேளை விருந்தொடு

தம்பி பெண் காதணி விழா.


காலை உணவில் பூரி கட்டாயம்

மதிய உணவுக்கு முன் ப்ரெஷ் ஜுஸ் ஜில்லென்று

மதிய விருந்து முடிவில் ஐஸ்க்ரீம் அவசியம்

அப்பாவும் அம்மாவும் திட்டமிட்டனர்.


‘எண்ணெய்ப் பண்டம் செரிக்காது என்பாய்

குளிர்பானம் சளிபிடிக்கும் என்பாய்

ஐஸ்க்ரீம் சாக்லெட் எல்லாம் பல்லுக்கு கேடென்பாய்

வரப்போகும் உறவுக்கும் நட்புக்கும் 

இதெல்லாம் ஒண்ணும் பண்ணாதா?'

நானும் அதெல்லாம் அன்னைக்கு சாப்பிடலாமா?

தொணதொணக்கிறாள் விழா நாயகி.


ஒரு சிணுங்கலில்லை; அழுகையில்லை

முகம் கூட சுருக்கவில்லை

பத்தர் வேலை முடித்தபின்

பட்டுப்பாவாடையுதறி

மாமா மடியிலிருந்து எழுந்தவள்

வந்த விருந்தினர்கள் சூழ

புகைப்படக்காரர் சொன்னபடி 

கேட்டு ஒய்யாரமாக ஒத்துழைத்தாள்.


‘அப்பா, நீ சொன்னபடி அழவேயில்லை நான்'

‘நல்ல பொண்ணு!'

பெருமை பொங்க சொன்ன அப்பா

தழுவி உச்சி  முகர்ந்தார்.


மதிய விருந்து முடியும் வேளையில்

அம்மாவின் தோழி தன்னுடன் செல்ஃபி எடுக்க அழைக்க

கையிலெடுத்த ஐஸ்க்ரீமை வைத்துச் சென்றாள்.

பந்தி முடிந்த அவசரத்தில் 

இலையோடு குப்பைக்குப் போனது அது.


தேடிவந்தவள் தேம்பியழுகிறாள் வெகுநேரம்

மிச்சமிருக்கும் அவளது குழந்தைமை 

கண்ணீராய் பெருகியோடுகிறது...

அதன் உள்நீரோட்டமாய் காதுவலியும் இருக்கலாம்.

ஆற்றவியலாமல் தவிக்கின்றனர் அம்மாவும் அப்பாவும். 


Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ▼  2018 (9)
    • ▼  June (2)
      • மகள்களின் கடவுள்
      • வலியின் திரிபு
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • ரிஷபன்
  • ஹரணி பக்கங்கள்.......
  • ஊமைக்கனவுகள்
  • திண்டுக்கல் தனபாலன்
  • VAI. GOPALAKRISHNAN
  • சைக்கிள்
  • சிவகுமாரன் கவிதைகள்
  • நசிகேத வெண்பா
  • முத்துச்சிதறல்
  • CrUcifiXioN
  • வந்தேமாதரம்
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
  • சமவெளி
  • கோவை2தில்லி
  • வானவில் மனிதன்
  • கலர் சட்டை நாத்திகன்
  • வண்ணதாசன்
  • கீதமஞ்சரி
  • அடர் கருப்பு
  • அழியாச் சுடர்கள்
  • இன்னுமொரு கோணம்
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
  • அக்ஷ்ய பாத்ரம்
  • Thanjai Kavithai
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates