நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >



மகிழ்வாயிருக்க
பெரும்பணம் வேண்டியிருக்கு
‘போதுமென்ற மன'மற்ற நமக்கு
சக மனிதர்களுள்
புலம்பிக் கொள்ள
இருப்பதைத் தாண்டி எவ்வளவோ உண்டு
எட்டாத உயரம் ...
இல்லாத வசதி,  இத்யாதி, இத்யாதி.

கிடைத்ததைக் கொண்டு மகிழும் கலையை
புஜ்ஜி போதிக்கிறது
தன் விளையாட்டுப் பொருட்களால்.

பழசாகிப் போன ஹேண்ட் மசாஜ் பால்
நுனி பிய்ந்த இன்ச் டேப்
தீர்ந்து போன செலோடேப் உருளை
சின்னச் சின்ன காகிதத் துண்டுகள்
காய்ந்து போன பசை டப்பா
பார்சல் பிரித்த பேக்கிங் நாடா
தேவை தீர்ந்த கழுத்துப் பட்டை
குச்சிகளற்ற தீப்பெட்டி
இன்னும் இன்னும் நீளும் பட்டியல்
புஜ்ஜியின் பெரிய மனசைக் காட்டும்.






Share on:


       இந்த தடவை அதிரசத்துக்கு பாகு வைக்கும் போது  உடனிருந்த மகளிடம் பிசுக்கு பதம், கம்பி பதம், ரெண்டு கம்பி பதம்  எல்லாம் காட்டி, எது எதற்கு எப்படி பாகு வைக்க வேண்டுமென்று விளக்கம் சொன்னேன்.
     தோழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடையில் வாங்கிய அதிரச மாவு கெட்டியாக இருப்பதாகவும் எளிதாக தட்ட என்ன செய்யலாமென்றார்.             கொஞ்சம்  பால் தெளித்து பிசைந்து தட்டிப்  பாருங்க சரியா வரலைன்னா தோசை மாவு பதத்துக்கு கரைச்சு குழி பணியார சட்டியில் ஊற்றி அப்பம் போல் எடுத்திடலாம் என யோசனை சொன்னேன்.
      மறுநாள் பேசிய போது சொன்னார்...
     அதிரசமாவே தட்டிட்டேன்.
     ஆனா ... பதம் புரிபடும் போது மாவு தீர்ந்துடுச்சு.
அவ்வளவு தான் என்றார்.
      அதிரசம் செய்யப் பழக  இன்னொரு பாக்கெட் மாவு கிடைக்கும். நம் அந்திமத்தில் புரிபடும் வாழ்வை நீட்டிக்க ....?!





Share on:



வீட்டினர் அனைவரிடமும்
சமத்துவம் கொண்டாடும்  புஜ்ஜிக்கு
கட்சியுமில்லை கூட்டணியுமில்லை
வெறுப்பவரையும் சலிப்பவரையும்
தன் பளபளக்கும் கண்களால்
அண்ணாந்து  பார்த்து கருணை சம்பாதித்துவிடும்.
எல்லோர்  மனசிலும்
தனக்கான கனிவை சுரக்கச் செய்யும்
வலிமை பெற்ற ஈர விழிகள்!

திட்டினாலும் விரட்டினாலும்
உடனுக்குடன் மறந்து
குழையவும் இழையவும் முடிகிறது புஜ்ஜியால்
அவமதிப்போ சுடுசொல்லோ
வைத்து மறுக மனமற்றது.

எதிரியைக் கடித்துக் குதறவும்
அன்பை அறிவிக்க நம்மைக் கவ்வவுமாக
பற்களையும் நகங்களையும்
கையாளும் சாதுர்யம் 
படைப்பின் விந்தை !

Share on:

எங்கள் குடும்ப அட்டையில்
பெயர் சேர்க்கப்படாமல்
ஆதார் அடையாளம் தேவையற்று
குட்டிப்பூனை
வந்த மறுநாள் பெயர் சூட்டு வைபவம்

கூப்பிட வசதியா பெயரொன்னு சொல்லும்மா
என்றான் சிபி.
‘ஜுஜு'என்றேன் குத்துமதிப்பாக
அரை மனசாய் ஏற்றான்

மறுநாள் இவரிடம்
‘பெயரொன்னு சொல்லுங்க இதுக்கு' என்றேன்
‘புஸ்ஸி' என்றிருக்கட்டுமா? என்றார்.

கும்பகோணத்தை ‘கும்மோணம்' என்றும்
விருத்தாசலத்தை ‘விருத்தாலம்' என்றும்
சிதம்பரத்தை ‘சேம்பரம்' என்றும்
புவனகிரியை ‘போனேரி' என்றும்
வாய் வசதிக்கு மாற்றியதுபோல்
செல்ல விளிப்பில் அதை புஜ்ஜி ஆக்கினேன்.

ஏகமனதாய் எல்லோரும் ஏற்க
பாட்டி மட்டும் ‘குட்டி' என்பார்.
புஜ்ஜி என்றழைத்தால் ‘ம்ம்ம்...' எனவும்
புஜ்ஜி... புஜ்ஜி... என்று கூவினால்
எங்கிருந்தாலும் வந்து நிற்கவும்
புரிந்தது அதற்கு.

வீட்டுக்கு விருந்தினருடன் வந்த சிறுபையன்
பூனைக்குட்டியின் பெயர் புஜ்ஜி என்றறிந்ததும்
‘டோரா புஜ்ஜி!' என்றான்.

மனிதப் பெயர்களோடு
செல்லப் பிராணிகள் திரியும் காலத்தில்
ஒரு குரங்குக் கதாபாத்திரத்தின் பெயர்
எங்க பூனைக்குட்டிக்கு இருக்கட்டுமே...!



Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • “மின்மினிகளால் ஒரு கடிதம்”- அப்துல் ரஹ்மான்
    *விளக்காக எரித்தல் விட்டிலாக எரிதல் வேறென்ன இருக்கிறது காதலில்? ^^^^^^^^^^^^^^^ *நான் தவளை என் கிணறு நீ இது என் பெருமை. ^^^^^^^^^^^^...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ▼  2017 (18)
    • ►  November (2)
    • ▼  October (4)
      • ‘புதியன விரும்பு'
      • பதம்
      • கசியும் விழிகள்
      • பெயர் பிறந்த கதை
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • கீதமஞ்சரி
    மலைகளுக்கு நடுவில் மனம் மயக்கும் சோலை
    1 week ago
  • CrUcifiXioN
    Vintage collections
    2 months ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    நியுசிலாந்து - 1 - புற்கள், மரங்கள், மாடுகள், மலைகள் மற்றும் சில மனிதர்கள்....
    2 months ago
  • முத்துச்சிதறல்
    துபாயில் ஏவுகணைகள்!!
    4 months ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    சீட்டுக்கவி
    11 months ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    1 year ago
  • ஹரணி பக்கங்கள்.......
    2 years ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    6 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    6 years ago
  • Thanjai Kavithai
    8 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    8 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    8 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    9 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    9 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    9 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    9 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    10 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    10 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    10 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    10 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    12 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    13 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    14 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    15 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates