நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

         வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)

        இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. . முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டதை மகாவில்வம் என்பார்கள். (ஐந்து இலைக்கு மேலமைந்ததை நாம் முன் பதிவில் பார்த்தோம். அதுவும் மகா வில்வமென இராஜ இராஜேஸ்வரி அம்மா சொல்லியிருந்தாங்க )

       கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும். இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும்.

        பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியன ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம்.

        இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம்.  விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும்.வெட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.

ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயிற்று வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.

இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். மந்தத்தைப் போக்கும்.

பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிர்க்கும்.
பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது .

வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.

      பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும்.

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு
புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.

வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.


வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.

இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் தேய்த்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது உடலுறவு கூடாது.

பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும்.


வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.

வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.

வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.

வில்வக் காயை சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும்.

வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.

வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும்.


(தேடத்தேட  இன்னும் வரும்...)


Share on:
அலை - தொலைபேசிகளற்ற
அந்தக் காலப் பிரிவெல்லாம்
கடிதங்களால் ஆற்றியிருந்தன

தகவல் பரிமாறத்
தாமதமானாலும்
தோன்றும் போதெல்லாம்
தடவிப் பார்த்து
படித்துப் படித்து
பழுப்பேறிய அத்தாள்கள்
கடவுளைக் காட்சிப் படுத்தும்
கோயில் சிலைகளாய்
தொலைவிலிருப்போரை
நெருக்கமாக்கியது.

பொருள்வயிற் பிரிந்த
போர்நிமித்தம் பிரிந்த
சங்கத் தலைவர்களை
காவியத் தலைவிகள்
வழிமீது வைத்தவிழி வாங்காமல்
காத்திருந்தனர்
பசலையேறிய மேனியொடு.

பெற்ற பிள்ளைகளை
கண்காணா தூரத்தில்
அறிவுக்கண் திறக்க அனுப்பிவிட்டு
விடுதியின் வரவேற்பறையில்
விரல்விடும் எண்ணிக்கையில்
இருக்கும் தொலைபேசிகளின்
தொடர்பெல்லைக்குள்
நுழைய முயன்று சோரும்
பெற்றோருக்கும்

சாப்பாட்டு இடைவேளையில்
செவிக்குணவாய்
தாய் - தந்தையின் குரலுக்குக்
கால்கடுக்கக் காத்திருக்கும்
பிள்ளைகளுக்கும்
சமர்ப்பணமாகும் இக்கவிதை
சறுக்கிக் கிடக்கிறது
அவர்களின்
கடக்கும் உணவிடைவேளை நேரத்தில்
சிதறிய பருக்கைகளின் பிசுபிசுப்பில்.

விடுதியின்
ஒட்டுமொத்த மாணாக்கருக்கும்
ரட்சகனாகும்
அச் சில இணைப்புகள்
பிரிவின் தகிப்பால்
கொதிகொதித்துக் கிடக்கின்றன
அந்திமுதிர் இரவிலும்...

சமன்படுத்தும் மென்தென்றலாய்
இணைப்பு கிடைத்த மறுகணம்
அலையழித்த கரையோர காலடித் தடங்களாய்
குதூகலம் நிறைந்து கும்மாளிக்கும் மனசில்
மறுநொடியே குற்றவுணர்வெழும்...
காத்திருக்கும், கைசோரும்
பிற பெற்றோரை எண்ணி.

முப்பது நிமிட அல்லாட்டம்
மூன்று நிமிடப் பேச்சாகி
காதில் பரவும் பிள்ளைகுரல்
மனம்தழுவி
பிரிவின் ரணங்களுக்கு மருந்திடும்.

காத்திருக்கும்
இருபக்கப் பேசிகளும்
அடுத்த அழைப்புக்காக!
Share on:

அருவி நீர்:
          உடல் வன்மையை உண்டாக்கும். இரத்த பித்த நோயை அகற்றும். பெண்களின் வெள்ளைப் போக்கை நிறுத்தும்.

ஆற்று நீர்:
            வாத பித்த நோய்களைச் சமனப்படுத்தும். நாவறட்சியை நீக்கும். விந்தைப் பெருக்கும்.

கங்கை நீர்:
            உடல் எரிச்சல், நாவறட்சி, குன்மம், இளைப்பு, உள்சூடு, ஈளை, மிகு பித்தம் போன்றவற்றை நீக்கும்.

தாமிரபரணி நீர்:
           கண் புகைச்சல், காய்ச்சல், எலும்புருக்கி, ஈளை நோய்களை அகற்றும்

காவிரி நீர்:
           இருமல், வயிற்றுப் பொருமல், இரைப்பு, சளிக்கட்டு, நீர்க்குற்றம், நாவறட்சி ஆகியவற்றை விலக்கும்.

கோதாவரி நீர்:
              பல்வகைச் சொறிகளை நீக்கும். உடலில் மினுமினுப்பை ஊட்டும்.

வைகை நீர்:
            சோகை, கரப்பான், உடல் எரிச்சல், உதறுகால், விந்துக்குறை ஆகியவற்றை அகற்றும்.

நர்மதை நீர்:
           காய்ச்சல், விக்கல், வாந்தி, காமாலை, வயிற்றுப் பொருமல், கைகால் எரிச்சல், பெருமூச்சு, அயர்ச்சி ஆகியவற்றை நீக்கும்.

ஊற்று நீர்:
           பித்தம், மிகு வறட்சி ஆகியவற்றை விலக்கும்.

ஏரி நீர்:
            வாயுவை உண்டாக்கும்,

உப்பு நீர்:
            குடல் நோய், ஓடு வாயு ஆகியவற்றை குணப்படுத்தும்.

ஓடை நீர்:
           நாவறட்சியை உண்டாக்கும். உடல் வளமையைக் குறைக்கும்.
குளத்து நீர்:
          வாத நோய் மிகச் செய்யும். நீர் ஊற்றுப் போக்குள்ள குளமாக இருப்பின் உடல்நலத்துக்கு மிக நல்லது.

அல்லிக்குளத்து நீர்:
           விந்தைக் கெடுக்கும். அஜீரணக் கழிச்சலை தோற்றுவிக்கும். புண், சொறி முதலியவற்றை உண்டாக்கும்.

தாமரைக் குளத்து நீர்:
           வாத, பித்தக் கலப்புக் கோளாறுகளை உண்டாக்கும். தாடை நோயைத் தோற்றுவிக்கும். காய்ச்சல் உண்டாக்கும்.

சருகு ஊறிய நீர்:
            காய்ச்சலைத் தோற்றுவிக்கும்.

கடல்நீர்:
             உடல் குடைச்சல், இரத்தக் குன்மம், பெருநோய், வயிற்று நோய், பெரு வயிறு, நுரையீரல் தொடர்பான நோய்களை விலக்கும்.
 கடல் நீரைக் காய்ச்சி அருந்தினால் மல,நீர்க்கட்டு, உடல் கடுப்பு, நாக்குப் பிடிப்பு, சோர்வு, பல் நோய் முதலியவற்றை விலக்கும்.

காடி நீர்:
           மருந்தின் குணங்களைக் கெடுக்கும். அஜீரணம், சோகை, பித்த மயக்கம் ஆகியவற்றை நீக்கும்.

பாசி நீர்:
           பாசிநீரைக் குடித்தால் உடலில் தடிப்புகள் தோன்றும். குடல் கோளாறுகள் உண்டாகும். பலவிதமான சரும நோய்கள் தோன்றும்.

பனி நீர்:
            மிகு மூத்திரம், கண் படலம், உடல் வறட்சி, ஈளை, கழிச்சல், சொறி, கரப்பான் ஆகியவற்றை நீக்கும்.

நண்டுக்குழி நீர்:
            உடல் வெப்பம், எரிச்சல், மிகு நாவறட்சி, வாந்தி ஆகியவற்றைக் குணமாக்கும்.

பாறை நீர்:
             உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். காய்ச்சலை உண்டாக்கும்.
சுக்கான் பாறை நீர்:
 கோழைக் கட்டு, சளி, சிறுநீர்க்கடுப்பு போன்ற குறைபாடுகளை உண்டாக்கும்.

கரும்பாறை நீர்:
           அறிவாற்றலைப் பெருக்கும். உடல் வனப்பை அதிகமாக்கும். மயக்கம், விடாக் காய்ச்சல், பித்தக் காய்ச்சல் ஆகியவற்றையும் நீக்கி உடலை நலமாக்கும்.

வயல் நீர்:
            உடல் சூடு மிகுந்தாலும் சமப்படுத்தும். தளர்ந்த உடலை முறுக்கேற்றும். காய்ச்சல் வேகத்தைக் குறைக்கும்.

வெந்நீர்:
             வெந்நீரை உணவு உண்டவுடன் அருந்தினால் சீக்கிரம் செரிமானமாகும். நெற்றி நோய், சீதக்கட்டு ஆகியவற்றையும் விலக்கும்.
            வெந்நீரை ஆற வைத்துக் குடித்தால் கீல் பிடிப்பு, மார்புச் சளி, காது குத்தல், கண்ணோய், மயக்கம், பித்த நோய், விக்கல், நாவறட்சி போன்றவற்றைக் குணமாக்கும்.
            கொதிக்க விடாது பதமாகச் சுட வைத்த நீர் குளிர் நடுக்கம், பலவகைக் கழிச்சல், மிகு காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

நன்றி: பதார்த்தகுண சிந்தாமணி.

(அது சரி... மணல் கொள்ளை , ஆற்றுப் படுகைகளில் நில ஆக்கிரமிப்பு, அண்டை மாநிலக் கெடுபிடிகள், பன்னாட்டு குடிபானங்களின் அட்டகாசங்கள் இதெல்லாம் பதார்த்த குண சிந்தாமணி படைத்தவர் அறியாதவை அல்லவா...?!)

         பதார்த்த குண சிந்தாமணியை எழுதியவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான தேரையர் என்றழைக்கப்படும் இராமத்தேவர் .

           இவர் மருத்துவ ஆராய்ச்சிகளில்  தேர்ந்தவர். அகத்தியரின் சீடர். பின்னாளில் தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் இவர் என்றும் சொல்லப்படுகிறது.

         ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் உள்ள மருத்துவ குணங்களையும் எந்தெந்த கால கட்டத்தில் எந்தெந்த உணவுப் பொருள்களை உண்ணவேண்டும் , எதைஎதை சாப்பிட்டால் நோய் வராது என விரிவாக பதார்த்த குண சிந்தாமணி விளக்குகிறது.

         இவரின் பிற நூல்கள் ... மணி வெண்பா, மருந்து பாதம், ஞான போதம், நீர்க்குறி நூல், தைலவர்க்க சுருக்கம், வைத்தியர் மகா வெண்பா.
பொதிகை சார்ந்த தோரண மலையில் (கேரளம்) தேரையர் சமாதி அடைந்ததாக அறிகிறோம்.

 
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ▼  October (3)
      • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
      • பசித்த வயிறு... செவிக்குணவு!
      • நீரின்றி அமையாது உலகு
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 day ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    2 weeks ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    3 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    6 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    (அ)நீதி அரங்கம்
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    7 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    8 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates