நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >


தான் பிடிக்கும் கரப்பானை
மசாலா கூட்டுவதுமில்லை;
வறுப்பதுமில்லை; வேக வைப்பதுமில்லை...
உடனே தின்றுவிடுவதுமில்லை புஜ்ஜி.

கவ்வலிலிருந்து விடுவிக்கும்
எதிர்பாரா சுதந்திரத்தில் திகைத்து
இலக்கின்றி ஓடும் கரப்பான்
ஓரெல்லை வரை அனுமதித்து
சட்டென்று கரப்பான் ஓட்டத்தை தன்
முன்னிரு கைகளால்
தடுத்தாட்கொள்ளும்.

உள்ளங்கையடியில் அதன் நெளிவின் குறுகுறுப்பை
ரசித்து அனுபவிக்கும்.
பெரிய மனசுக்காரிபோல் மறுபடியும் ஓட விடும்.
தட்டுத் தடுமாறி பூச்சி ஓடும்.
மறுபடி மறுபடி பிடித்தும் விட்டும் விளையாடி
அலுத்துப் போகும் போது பூச்சியின்
ஆயுள் முடியும். 

Share on:



       ஒரு துணிக்கடை. பண்டிகைக்கு இன்னும் ஒருமாதம் இருக்கும் நேரம். இலேசான கூட்டம் கடையில்.  வெள்ளை கோட் தேடி வந்த மூவர், கடை சிப்பந்தி காண்பித்தவை திருப்தி படாததால் வெளியேறுகின்றனர். வழிமறித்த கடை முதலாளி என்ன தேடி வந்தீங்க? ஏன் எதுவும் வாங்காமல் போறீங்க? என்றார்.
“வெள்ளை கோட்...”
“இருக்கே... ஏ... சரவணா... காட்டுப்பா இவங்களுக்கு...”
“பார்த்தோம்...”
“அப்புறம்?”
“சைஸ் சரியில்லை. அதான்...”
“எல்லா சைசிலும் நம்ம கிட்ட இருக்கே. சொல்லப்போனா இந்த ஊரிலேயே நம்ம கடையில் மட்டும் தான் இதெல்லாம் கிடைக்கும். நீங்க என்னடான்னா... விளம்பரத்துக்கு மயங்கி எங்கியோ போய் காசை கொட்டிட்டு வர்றீங்க”
அவர்கள் கையிலிருந்த பைகளை பார்த்து அவரே ஒரு முடிவுக்கு வந்து விட்டார் போல.
“ஐயோ.. இதுல துணியில்லைங்க. வீட்டிலிருந்து எடுத்து வந்தது. மற்ற பொருட்கள் வாங்கி எடுத்துப் போக.”
“அதெல்லாம் கிடையாது. அங்கே போயிருக்கீங்க, இங்கே போயிருக்கீங்க, எங்க கடையில் வாங்க மட்டும் யோசிக்கிறீங்க. நீங்க எங்க வேணுமானாலும் போய் கேட்டுப் பாருங்க. இருக்காது. கோட்டுக்கு நம்ம கடைக்கு தான் வந்தாகணும்.”
“இரண்டு பைகளிலும் வேறு பொருட்கள் தான் இருக்கு. நாங்களே முதல் வருடம் உங்க கடையில் தான் கோட் வாங்கினோம். எப்பவும் உங்க கடையில் எடுக்கறவங்க தான். இப்ப இருக்கறது அளவு சரியில்லை அதான் போறோம்.”
அருகில் வந்த கடை சிப்பந்தியும் இருந்தவை எல்லாம் காட்டியாயிற்று என்று சொல்ல, சமாளித்துக் கொண்ட முதலாளி, “உங்க சைஸ் என்ன சொல்லுங்க, அடுத்த வாரம் வந்தா ரெடி பண்ணி வைக்கிறோம்.” முட்டுச் சந்தில் முட்டி நின்றது அவரது கோபம்.
அவரின் ஆவேசம் தன் வியாபாரத்தை அதிகரிக்கவா? தன்னிலும் வெற்றியடைந்த பிற வியாபாரி மேல் பொறாமை போர்த்திய ஆணவமா?
வேறு கடையின் பெயர் தாங்கிய பையை தன் கடையினுள் பார்க்கவும் சகிக்காத அவரின் மனப்பாங்கை என்ன சொல்லலாம்? நிமிண்டிக் கொண்டேயிருந்த மனசை சுமந்தலைந்தேன்.
பிறகு, ஜெயமோகனின் ‘விதி சமைப்பவர்கள்' நூலை வாசித்த போது, ஐந்தாவது அத்தியாயம் ‘ஒரு மரம் மூன்று உயிர்கள்'. அதில் சில வரிகள் துணிக்கடைக்காரரை அடையாளம் காட்டியது.
“அகப்பட்ட வாழ்க்கையை முட்டிமோதி வாழ்ந்து முடிப்பவர்கள் தான் பலர். அதில் வெற்றி கொள்ளும் போது அவர்கள் அகங்காரம் கொண்டு எக்களிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் காசு சேர்ந்ததும் அந்த எக்களிப்பு வந்து விடுகிறது. நான் இதில் இரு வகையினரைக் காண்கிறேன்...
ரயில்களில் முதல் வகுப்பில் வரும் புதுப் பணக்காரர்கள் ஒருவகை. இவர்கள் ரயில்களில் பிறரைச் சந்தித்ததுமே அவர்களின் பொருளாதாரப் பின்னணியை விசாரித்துவிட்டு, தன் பணம், சமூகத் தொடர்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லும் சுயததும்பல்களோடு இருப்பார்கள்.
நட்சத்திர விடுதிகளில் சந்திக்க நேரும் நெடுங்காலப் பணக்காரர்கள் இரண்டாம் வகை. நாங்கள் தேவர்கள் என்ற பாவனையில் மிதப்பாக இருப்பார்கள். 
இந்த இருசாரர்களுக்கும் நரகம் என்ற ஒன்று அவர்களின் அருகேயே உள்ளது. அது, அவர்களை விடப் பெரியவர்களைக் காணும் அனுபவம் தான். அவர்கள் அந்த நரகத்தை ஒருகணமேனும் மறக்க முடியாது. இவர்களின் இன்பம் என்பது ஒருவகை அகங்கார நிறைவு மட்டுமே. அந்த நிறைவு சில கணங்கள் கூட நீடிக்காதபடி அவர்களின் அகங்காரம் அடிபட்டுக் கொண்டுமிருக்கும். அவன் எந்தப் புலனின்பத்தையும் அகங்காரம் குறுக்கிடாமல் அனுபவிக்க முடியாது. நல்ல உணவு சாப்பிட்டால் மட்டும் போதாது அவனுக்கு. அது பிறர் எவருக்கும் கிடைக்காத உணவாகவும் இருக்க வேண்டும். 
தன்னைச் சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சிலதருணங்களே முழுமையான இன்பம் தரவல்லது. அந்தத் தருணங்களை அடைய  இந்த மனிதர்களுக்கு அவர்களின் கையில் சுமந்தும் அக்குளில் இடுக்கியும் தலையில் சுருட்டியும் வைத்திருக்கும் சுமைகளே பெரும் தடைகளாகின்றன.”
மன உளைச்சல் தீர்ந்தது ஜெயமோகனை வாசித்ததில்.



Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ▼  2017 (18)
    • ▼  November (2)
      • உயிர் விளையாட்டு
      • அறிதலின் இன்பம்
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • திண்டுக்கல் தனபாலன்
    திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஒன்று (1)
    5 days ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    தால லாவண்யம்
    6 days ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதி !!!!!
    1 week ago
  • கீதமஞ்சரி
    புத்தகத் திருவிழாவில் 'சாத்தான்'
    2 weeks ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    கனவுக்கடத்தல்.
    3 months ago
  • அழியாச் சுடர்கள்
    நான் என்ன படிக்கிறேன் ஏன்? சி. சு. செல்லப்பா
    3 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • ரிஷபன்
    ராசா
    1 year ago
  • வண்ணதாசன்
    தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
    2 years ago
  • சமவெளி
    அடிக் கிளைப் பூ.
    2 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
    2 years ago
  • CrUcifiXioN
    FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!
    3 years ago
  • Thanjai Kavithai
    4 years ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    5 years ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    5 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    6 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    6 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    6 years ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    6 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    7 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    9 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    10 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    10 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    11 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates