புத்தரின் புன்னகையும் அவர் பெற்ற ஞானமும் அவரை அறிந்தவர்களுக்கொரு பிரமிப்பைத் தரத்தக்கது. மூடிய கண்களின் தியான அமைதியும் விரிந்த இதழ்களின் ஓரப் புள்ளி கிளர்த்தும் தத்துவ விசாரமும் விசாலமான அறிவின் அறிவிப்பாக தொங்கிய காதுகளும் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையாக விரிந்த சகஸ்ரகாரச் சக்கரத்தின் புற அடையாளம் போன்ற உச்சிக் கொண்டையும் பார்ப்பவரை ஈர்க்கும் தன்மை கொண்டது. அவரது பூர்வாசிரமப் பெயரும் வரலாறும் நாமனைவரும் அறிந்ததே.
ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட(1922) ‘சித்தார்த்தன்' நாவல் நம் கெளதம புத்தரைப் பற்றியதல்ல. இந்தியாவின் கேரளமாநிலத்தில் தம் மூதாதையரின் வேர் பரவியிருக்க, ஜெர்மனியிலிருந்து கிழக்கிந்திய நாடுகளைச் சுற்றிப் பார்க்க வந்த (1912)ஹெர்மன் ஹெஸ்ஸே இலங்கை வழியாக இந்தியா வந்தபோது புத்தர் வரலாறு கேள்விப் பட்டு தம் மனதுள் தொடர்ந்து 10 வருடங்கள் ஒரு கதைக் கருவையும் அதற்கான கதாநாயகன் நம் புத்தரிலிருந்து மாறுபட்ட வாழ்வின் தேடலில் தன் ஞானத்தை தானே கண்டடையும் உத்தியையும் உருப்போட்டதன் விளைவே ‘சித்தார்த்தன்' என்றொரு புதினம். ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது இந்நாவல். ஆங்கிலத்தில் திரைப்படமாகவும் எடுக்கப் பட்டிருக்கிறது.
150 பக்கங்களுக்குள் மனித வாழ்வை அதன் தத்துவச் சரடை கொண்டுவர முடிந்திருக்கிறது அவருக்கு! பக்கங்களின் எண்ணிக்கையோ பிரம்மாண்டமோ தீர்மானிக்க முடியாத மகோன்னதம் அல்லவா படைத்தலின் உன்னதம்! பிரபஞ்சத்தின் கோடானுகோடி உயிரணுக்களும் சர்வ சாதாரணமாக உருவான இவ்வுலகில் மனித மனதின் அற்புதம் என்றென்றும் வியப்புக்குரியதே.
பிறப்பும் வாழ்வும் மரணமும் அனைத்து உயிர்களும் அடையத்தக்க எளிதானதாக இருப்பினும், பகுத்தறிவால் மனித நிலையடைந்த ஒவ்வொருவருக்கும் ஏதேனுமொரு தருணம் ஞானம் சித்திக்கிறது. அதனைக் கைப்பற்றி வாழ்வின் இரகசியங்களைத் தெளிந்திடும் இடம் அவரவருக்கான கயாவாகவும், வாழ்தலின் வலிமிகு வெம்மைகள் தணியும் தருநிழல் அவரவருக்கான போதிமரமாகவும் அமைந்து விடுகிறது.
இந்நாவலில்