அம்மணிக் கெழவிக்கு
எமன் ஓலையனுப்பி
ஏழெட்டு நாளாச்சு
கிளம்பற வழியாயில்ல கெழவி.
ஊர் சுத்தி திரியிற ஒத்த மவன்...
கண்ணாலம் கட்டாத கோயில் காளை
கிழவி தலைமாட்டுல நிக்க
அசலூரில் வாக்கப்பட்ட பெத்த மவள்
சேதி கேட்டு ஓடி வந்து
ஆச்சு மூணு நாளு
கெடக்கற வீட்டு மேல
கெழவிக்குப் பிடிப்போன்னு
ஈசான்ய மூலைய பேர்த்து
தண்ணியில கரைச்சு
ரெண்டு சங்கு புகட்டியாச்சு
நண்டும் சிண்டுமா
புள்ளைங்களோட தவிக்கவிட்டு
கண்ணாலமான அஞ்சாறு வருசத்துல
கண்ணை மூடுன கட்டுனவன் - அந்தக்
‘கட்டையில போனவன்'
அரூபமா கெழவிகிட்ட நின்னு
வலுக்கட்டாயமா இழுக்கறான் தன்னோட...
மசியல கெழவி
‘பாசக்'கயிறு பலமும் கொறைவில்ல
காத்திருந்து காத்திருந்து
ஊரு ஒறவுக்கு அலுத்தும் போச்சு
கெழவியாண்ட வந்த
பங்காளி மவனொருத்தன்
“நாங்க பார்த்துக்கறோம்
உம் புள்ளிங்கள...”
கூவினான் கெழவி காதுல.
வாயடைச்சிருந்த கெழவிக்கு
வார்த்தைங்க கண்ணால கசியுது
“உங்க பவிசு தெரிஞ்சுதானே
தவிக்குது மனசு!”
எமன் ஓலையனுப்பி
ஏழெட்டு நாளாச்சு
கிளம்பற வழியாயில்ல கெழவி.
ஊர் சுத்தி திரியிற ஒத்த மவன்...
கண்ணாலம் கட்டாத கோயில் காளை
கிழவி தலைமாட்டுல நிக்க
அசலூரில் வாக்கப்பட்ட பெத்த மவள்
சேதி கேட்டு ஓடி வந்து
ஆச்சு மூணு நாளு
கெடக்கற வீட்டு மேல
கெழவிக்குப் பிடிப்போன்னு
ஈசான்ய மூலைய பேர்த்து
தண்ணியில கரைச்சு
ரெண்டு சங்கு புகட்டியாச்சு
நண்டும் சிண்டுமா
புள்ளைங்களோட தவிக்கவிட்டு
கண்ணாலமான அஞ்சாறு வருசத்துல
கண்ணை மூடுன கட்டுனவன் - அந்தக்
‘கட்டையில போனவன்'
அரூபமா கெழவிகிட்ட நின்னு
வலுக்கட்டாயமா இழுக்கறான் தன்னோட...
மசியல கெழவி
‘பாசக்'கயிறு பலமும் கொறைவில்ல
காத்திருந்து காத்திருந்து
ஊரு ஒறவுக்கு அலுத்தும் போச்சு
கெழவியாண்ட வந்த
பங்காளி மவனொருத்தன்
“நாங்க பார்த்துக்கறோம்
உம் புள்ளிங்கள...”
கூவினான் கெழவி காதுல.
வாயடைச்சிருந்த கெழவிக்கு
வார்த்தைங்க கண்ணால கசியுது
“உங்க பவிசு தெரிஞ்சுதானே
தவிக்குது மனசு!”
நன்றி: 'காக்கை சிறகினிலே ' - மே'12