நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

நன்றி: நறுமுகை ஜெ ரா.,
              பேரா. வே. நெடுஞ்செழியன்.
Share on:
(தஞ்சையில் நிகழ்ந்த 'எழுத்தாளி - இரண்டாம் சந்திப்'பில் தோழர் குப்பு வீரமணியின் கடித விமர்சனம் ... 'சுழல்' சிறுகதைத் தொகுப்புக்கு...)

       'சுழல்' படித்தேன். சற்றும் படோபமில்லாமல், ஆற்றொழுக்கான நடையில் சமுதாயத்தைப் பகிர்கிறார் நிலாமகள் . அவர் கதை எழுதவேண்டுமென்று எழுதியதாக நான் உணரவில்லை. மாறாக தாம் சந்தித்த அல்லது எதிர்ப்பட்ட சூழலில் பெண்கள் என்னவானார்கள் என்பதையே சொல்கிறார்.

       கதைகேட்ட கதையை முன்னோட்டமாக சொல்லியிருப்பது, கதை சொல்லும் கலை கைவரப் பெற்றவர் என்பதற்கு பொருத்தமான பின்னணி. தேர்ந்த ரசனை, ஒவ்வொன்றையும் நிதானமாகப் பார்த்து மதிப்பிட்டு, பதிவிட்டு, பதனிட்டு, சுவைபட வழங்குகிறார்.

         ஞானியின் ‘சுடும் நிலவு' தொகுதியில் சிறகை விரிக்கும் கூட்டுப் புழுக்கள் படித்திருக்கிறேன். செம்பா, மஹிமா, பாட்டி... செம்பாவை விலாவாரியாகச் சொல்லி, மஹிமாவுக்கு டிட்டோ போட்டுட்டு... போகிறபோக்கில் பாட்டியின் பூர்வ கதையை ‘நச்'சுன்னு பதிவிட்டு... ‘எலேய்... திருந்தவே மாட்டீங்களாடா'ன்னு கேட்கத் தோணியது.

       ஆனால், தொகுப்பில், அந்த செம்பாவும் சீனிப்பயலும் - சுழலில் முன்கதைப் பாத்திரங்களாகிறார்கள். கொண்டாடி, துணைநின்று, வளர்த்தெடுத்து, வழிநடத்தினால்... ‘நாதியத்தவ'ன்னு சொல்லிடற அந்தத் திமிர்.. ‘ஆண்மை அழியவேண்டும்'னு பெரியார் சுட்டியது இதைத்தான். இன்னும் நிறைய,

        என்னைக் கவர்ந்த சமுதாய உணர்வு மிக்க, மனிதத்தின் மீது கொண்ட மாளாத காதல் கொண்ட படைப்புகளாகவே அடையாளம் காண்கிறேன். குழந்தை அடிமை(2) வேலைக்கு எதிராக வலிவு மிக்க குரல். ஆனால் இவ்வளவு இதமாக தவிர்க்கவே முடியாதபடி பதிவு செய்திருக்கிற நேர்த்திக்கு ஒரு சல்யூட்.

       எல்லாக் கதைகளின் பாத்திரப் படைப்புகளும் ஒரு இலட்சியத்தோடு அல்லது ஆசையோடு படைக்கப்பட்டுள்ளன. கேசவன் சார், பவழமல்லி சங்கரி, பெரியப்பா(சிங்கம்), யயாதியின் மகள் தனா( ரொம்ப சரியா யயாதியை அடையாளம் காட்டியிருக்காங்க; கூடவே ஒரு படிப்பினையும்)

       செளம்யாம்மாதான் நிலாமகளா?
“எல்லாப் பாடங்களையும் கசடறக் கற்றுத் தருகிற இன்றைய கல்வித் திட்டம் வாழ்க்கையின் சூட்சுமங்களை, சூத்திரங்களைப் பிரித்துப் போடவும் விடை காணவும் இளம்பிராயத்தினருக்குக் கற்றுத் தருகிறதா?” என்கிற பொறுப்பு மிக்க வினா.

        காதல் பற்றிய தமது கருத்தைத் தெளிவாக தாய்மைக்குரிய பரிவுடன் சுட்டும் பிறிதொரு படைப்பு ‘தவிப்பு'. விருந்தாளித் தாம்பூலமும் கூட படைப்பாளியின் பாத்திரமாகத் தான் இருக்க வேண்டும். பல இடங்களில் சுழலில் இந்தப் பாத்திரம் வருகிறது.

      கடைசிப் பாடம்... நல்ல பாடம். அவசியம். ட்ரையாம்பக்...  நிலாமகள் பாத்திரமாகப் பரிமளிக்கும் இடங்களாக நானுணர்ந்தவற்றில் இந்தப் பாத்திரமும் அடக்கம்.

       நினைவில் நிலைப்பட்டு விட்ட சிலவற்றைப் பகிர்ந்தேன். இந்தத் தொகுப்பு கதை எழுத மட்டும் நினைத்த நம் படைப்பாளியினுடையதல்ல. சமுதாயப் பற்று மிக்க பொறுப்புணர்வுடனான ஒரு பெண்ணின் எழுத்து. இத்தகைய பெண் எழுத்துக்களே இன்றைய தேவை. மற்றபடி கிராமத்தை அவர் காட்டுகிற விதம், ‘போதும் இங்க கிழிச்சது. புறப்படு கிராமத்துக்கு' என்ற மாதிரியிருந்தாலும், அவர் காட்டுற கிராமம்  சிரமம் தான். நேத்து வச்ச நெத்திலிக் கருவாட்டுக் குழம்பை சுடுசோற்றில் ஊற்றிப் பதமாகக் கலந்து பிசைந்து' என்றது போல ஒரு இடம் அடடா...

ட்ரையாம்பக்... ‘கைமீறிப் போன பலதுக்கும் தயாராய் விழியோரம் கட்டி இருக்கும் துளி ஈரம் மிச்ச மீதி மனிதத்தின் சிறு அடையாளமாய். ‘வேறென்ன கிழிக்க  முடியும்?' ‘ அறச்சீற்றம் எழும்பிக் கையாலாகாத் தனத்தின் மேல் ‘பொத்'தென விழுந்து மடிகிறது.

      இப்படி இடங்கள் அவரது படைப்பு ஆளுமை பளிச்சிடும் தருணங்கள். அவரைப் பாராட்டறதா, கொண்டாடறதா, தெரியல. ரொம்ப நாள் பழகினவங்க மாதிரி உணர்ந்தேன்.

நன்றி: ரொட்டேரியன் திரு. குப்பு வீரமணி, தஞ்சை.
Share on:
அழைப்பு வடிவமைப்பு: QUENCH PROFESSIONALS
நன்றி: கிருஷ்ணப்ரியா

Share on:
நிலாமகள் கவிதைகள்
________________________
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

    ' இலகுவானதெல்லாம்  இலேசானதல்ல ' என்ற கவிதைத் தொகுப்பு நிலாமகளின் [ நெய்வேலி ] இரண்டாவது தொகுப்பு. இவர் தன்
சிறுகதைகளையும் தொகுப்பாகத் தந்துள்ளார். இவர் கவிதைகள் கல்கி , யுகமாயினி , காக்கைச் சிறகினிலே , அனுபவம் , நிவேதிதா ,
சங்கு , புதிய ' ழ ' , போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.

   பெண் , தாய்மை அடைந்த பின் சந்திக்கும் கஷ்டத்தைக் கருக்பொருளாகக் கொண்டது 

       ' கொடுந்துயர் ' என்னும் கவிதை. இதில் பிரச்சனையின் வெப்பமே கவிதையை இயக்கும் சக்தியாகியுள்ளது. தாய்ப்பாலை மறக்கச் செய்வது எந்தப் பெண்ணுக்கும் கொடுந்துயரம்தான்.

     கன்றை இழந்த ஆனால் பால் தரும் செவலைப் பசுவின் நிலையும் , அதற்கு நேர் எதிரான தாயின் நிலையும் ஒப்பிடப்படும் தளம் நம்மைச்
சிந்திக்க வைக்கிறது.

கன்றிழந்த தாய்ப் பசுவுக்கு
பால் சுரப்பு நிற்க
மாத்திரை தேடுவதில்லையே நாம்...!
கிடைத்த வரை இலாபமென
உடல் நோவும்
உயிர் நோவும்
சக உயிர்க்கும் சமம் தானே...!
   
------- எல்லோருக்கும் ஒன்றை இக்கவிதை கவனப்படுத்துகிறது. அதுவே வாசகன் மனத்தைக் கனக்கச் செய்துவிடுகிறது.
   
       குழந்தை தூங்குவதே அழகு. அக்காட்சியை இன்னும் அழகுபடுத்துகிறார் நிலாமகள்.

அவள் கைகளுக்குள்
தலையணை உருவில் நான் !
   ------ என்ற வரிகளில் தாய்ப்பாசம் ததும்புகிறது.
    
     ' அசைதலின் பெருவலி ' - சோகத்தை அழுத்தமாப் பதிவு செய்துள்ளது.

தோட்டத்தில்
கிளை பரப்பி நிற்கும்
மாமரப் பொந்தில்
உச்சிப் பொழுதின்
வெம்மையடங்கக் கரையும்
ஒற்றைக் குயிலின் மென் சோகம்....
     
-------' கரையும் ' என்றாலே போதும். ' வெம்மையடங்க ' என்பதால் அணியழகு சேர்ந்துவிட்டது. கவிதையில் அடுத்து வரும் வரிகள் ,
சாவு வீட்டின் ஒற்றை விசும்பலைச் சொல்லி , அத்தோடு மற்றவரின் சோகத்தையும் இணைக்கிறது. அடுத்து வரும் முத்தாய்ப்பு
கவித்துவத்தை உருவாக்குகிறது.

அசைவற்ற மர இலைகளில்
கசிந்து பரவுகிறதென்
வன் சோகம்
    
 ---------- மனத்தின் சோகத்தை மர இலைகளில் இடமாற்றம் செய்வது அசாதாரண பொருட்செறிவை ஏற்படுத்துகிறது இத்தொகுப்பில் இது
முக்கியமானதொரு கவிதை. ' இலைகளால் பேசும் பெருமரம் ' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார் நிலாமகள். இயற்கை
நேசத்தில் இவர் லயிக்கும் புள்ளிகள் கவிதைகளாகின்றன
    
     ' செவிக்குணவு '  --- கவிதை , திருவிழாக் கூட்டத்தில் ஊதல் விற்பவனின் நிலை பற்றிப் பேசுகிறது. பிறர் காதுகளைப் பற்றிக்
கவலைப் படாமல் ஊதல் ஊதுவது குழந்தைகள் இயல்பு.

உயர்ந் தோங்கிய
அவனது குழலொலி
எட்டும் செவிகளைப்
பிரகாசமாக்குகிறது

' கேட்டவுடன் மகிழ்தல் ' என்பதைச் செவிகளில் ஏற்படும் பிரகாசம் என்பது வித்தியாசமான அழகான வெளிப்பாடு !
   
      ' திரிபு ' என்ற கவிதை வித்தியாசமான கருப்பொருள் கொண்டது. ஒரு வீடு தகர்த்துப் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. அவ்வீட்டில் பிறந்த
ஒருவர் அதைச் சென்று பார்க்கிறார். பசுமை நினைவுகள் மலர்கின்றன. அந்த நினைவுகள் யதார்த்தப் போக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அப்பதிவுகளில் காட்சிப்படுத்துதல் நன்றாக அமைந்துள்ளது.

நிலை வாசல் இருபுறமும்
உயர்ந்து பரந்திருக்கும் கல் திண்டு வைத்த
திண்ணைகள் மேல்
உட்கார்ந்தால் ஆடை மீறி ஊடுருவும் குளுமை
   
------ என்ற தொடக்கமே களை கட்டச் செய்துவிடுகிறது.

கொல்லைத் தாழ்வாரத்து
நெல் ஊற வைக்கும் தொட்டியருகே
அம்மாவிடமிருந்து முதன்முதல் நான்
தரை தொட்ட இடம் பார்க்க...
   
 ------ இப்படி வீட்டின் முக்கிய இடங்கள் சுட்டப்படுகின்றன.

தகர்த்துப் புதுப்பிக்கும்முன் 
மற்றுமொரு முறை போயிருக்கலாம்
    
------- என்ற ஏக்கத்தோடு கவிதை முடிகிறது. இது ஒரு நல்ல யதார்த்தக் கவிதையாகும்.
    
     ' பயணத்தடை '  -- பேச்சு நடையில் அமைந்துள்ளது. ஒரு  மூதாட்டியின் , மரணத்திற்காகக் காத்திருத்தல் பற்றிப் பேசுகிறது. மூதாட்டி தன் பிள்ளைகளைக் கவனிக்கச் சரியான ஆள் இல்லையே எனக் கண்ணீர் வடிக்கிறாள். உயிர் பிரிய மறுக்கிறது. 

      குழந்தையைத் தெய்வமாகப் பார்க்கும் செயல் ஒன்றைப் பதிவு செய்கிறது ' இங்குமிருக்கிறார்.. ' என்ற கவிதை ! கோயிலில் பக்தர்கள் வரிசையில் இது நடக்கிறது.

" அர்ச்சனை நமக்கெல்லாம் செய்ய மாட்டாங்களாம்மா ? " என்று கேட்கிறது ஒரு குழந்தை.

என் கையிலிருந்த பூக்களை
அந்த மழலையின் தலைமேல் தூவிவிட்டு
வரிசை விட்டு வெளியேறினேன்
திருப்தியுடன்
    
------- குழந்தைமையில் இறைமை தரிசனம் வித்தியாசமான அணுகுமுறை. நன்றாகவே இருக்கிறது.
   
     ' இருப்பு நிலைக் குறிப்பு ' கவிதையின் கருப்பொருள் என்ன்வென்று தெளிவாக இல்லை. ஒரு மருத்துவரிடம் ஒருவர் தன் அவஸ்தைகளைப் பட்டியலிடுகிறார். மருத்துவர் மௌனமாகிறார்.

துள்ளும் கன்றைக்
கயிறு கொண்டு கட்டுதல்போல்
எங்களிருவர் நாவை
இழுத்துக் கட்டியது
எல்லாவற்றையும் விஞ்சிய
இறைச் செயல்
     
-------- ' இறைச் செயல் ' என்று சுட்டப்படுவது எது ? நோய்மையா ? விடை தெரியவில்லை.
     
     படம் வரையும் ஆர்வமுள்ள ஒரு குறும்புக் குழந்தையைப் பற்றிப் பேசுகிறது ' குழந்தைகளெல்லாம் குழந்தைகளல்ல '  கவிதை !

     நிலாமகள் கவிதைகள் சராசரிக்கு மேல் உள்ளன. கவிதைகளில் கருப்பொருள் தேர்வு நன்றாக இருக்கிறது. திருப்தியளிக்கிறது.
வெளியீட்டு முறையில் இன்னும் சில படிகள் முன்னேற்றம் தேவை. சிந்தனையைச் சற்றே தீவிரப்படுத்தினால் மொழியின் அடியாழங்களில்
படிந்து கிடக்கும் கவித்துவம் நிச்சயம் தட்டுப்படும். [ வெளியீடு : ஊருணி வாசகர் வட்டம் சென்னை - 600 092 பக்கங்கள் 80 விலை ரூ 70     
செல் 81 48 19 42 72 ]

[ இக்கட்டுரை திண்ணை.காம். இதழில் ஆகஸ்ட்-9, 2015 பிரசுரம் செய்யப் பட்டு உள்ளது. ] 

நன்றி:
திரு ஸ்ரீரங்கம் சௌரிராஜனுக்கும் 
திரு. ரிஷபனுக்கும்....

Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ▼  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ▼  August (4)
      • இன்னொரு அழைப்பு...
      • எந்தப் பாத்திரம் இவரின் சொந்தப் பாத்திரம்?
      • வாய்ப்பிருந்தால் வருக... ! விமர்சன அ...
      • மொழியின் அடியாழங்களைத் துழாவியபடி...
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • திண்டுக்கல் தனபாலன்
    திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஒன்று (1)
    5 days ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    தால லாவண்யம்
    6 days ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதி !!!!!
    1 week ago
  • கீதமஞ்சரி
    புத்தகத் திருவிழாவில் 'சாத்தான்'
    2 weeks ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    கனவுக்கடத்தல்.
    3 months ago
  • அழியாச் சுடர்கள்
    நான் என்ன படிக்கிறேன் ஏன்? சி. சு. செல்லப்பா
    3 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • ரிஷபன்
    ராசா
    1 year ago
  • வண்ணதாசன்
    தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
    2 years ago
  • சமவெளி
    அடிக் கிளைப் பூ.
    2 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
    2 years ago
  • CrUcifiXioN
    FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!
    3 years ago
  • Thanjai Kavithai
    4 years ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    5 years ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    5 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    6 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    6 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    6 years ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    6 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    7 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    9 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    10 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    10 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    11 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates