நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >


         குழந்தைகள் பெற்றுக்கொள்வது வெகு சுலபம் தான். நல்வழியில் வளர்த்தெடுப்பது தான் ...

           நாம் வாங்கிக் குவிக்கும் பொருட்களால் அல்ல... நாம் காட்டும் அன்பினால் தான் குழந்தைகள் சிறந்தவர்களாகிறார்கள்! சதாசர்வ காலமும் குழந்தைகள் மேல் நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் எத்தனை அதிக தடவை இச்சாதனையை நாம் செய்கிறோம் என்பதில் இருக்கிறது நம் குழந்தைகளின் அதீத வளர்ச்சி.

           பிரகாசமான குழந்தைகளுக்கு பெற்றோரே நிரந்த ஆசிரியர்.  கற்றுக் கொள்ள உதவும் வசதிகள், உதவிகள், விமர்சனங்களை செய்யுங்கள். அறிவிற்கும், திறமைகளுக்குமான பயிற்சிக்கும், ஆரோக்கியமான விமர்சனத்திற்கும் குழந்தைக்கு உதவி தேவைப்படும். சிறிய விண்ணப்பங்களையும் மதிக்கவும் பெரிய விஷயங்களை விவாதிக்கவும் வேண்டும். ஒரு விண்ணப்பம் மறுக்கப்பட்டாலும் அவன் நேசிக்கப் படுவதை அவன் அறிய வேண்டும். தன்மதிப்பை ஏற்படுத்தி நல்ல பழக்கங்களை உண்டாக்க வேண்டும். 

      வெற்றி பெறுவதற்காக நமது நாணயத்தை இழப்பதும்,குறுக்குவழிகளைத் தேர்ந்தெடுப்பதும் பயனுள்ளதல்ல. நாம் நமது நற்பண்புகளுக்கு விசுவாசமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டியது நம் பொறுப்பே.


             “சிந்திக்கவும், ஆச்சர்யப்படவும், கனவு காணவும் அவர்களுக்குக் கற்றுத் தாருங்கள். வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளவும் கற்பியுங்கள். புகழ்ச்சியையும் முகஸ்துதியையும் வேறுபடுத்திக் காணவும் கற்பியுங்கள். சூரிய அஸ்தமனத்தின் சந்தோஷத்தை, பகிர்வதன் சந்தோஷத்தைக் கற்பியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நிமிர்ந்து நடக்கக் கற்பியுங்கள்.”
- கலீல் கிப்ரான்.


       இதற்குத் தான் நம் குழந்தைகளிடம் சுய மதிப்பை உண்டாக்க
வேண்டியிருக்கிறது.


           கடினமான பருவ வயதில் கைப்பிடித்து நடத்தி, பெரியவர்களானதும் அவர்கள் வழியில் செல்ல அனுமதிக்க வேண்டும். நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் நம் குழந்தைகள் எப்படி வாழ்வார்கள் என்பதை பெரிதாக முடிவு செய்கிறது.

       ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு  எழுதிய ஒரு கடிதத்தின் சுருக்கம் ஒன்று படிக்கக் கிடைத்தது... உங்கள் பார்வைக்கு இதோ...

“எல்லா மனிதர்களும் நேர்மையானவர்களல்ல; உண்மையானவர்களல்ல என்று அவன் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு போக்கிரிக்கும் ஒரு கதாநாயகன் உண்டு. ஒவ்வொரு சுயநலமான அரசியல்வாதிக்கும் தியாகியான தலைவன் உண்டு. ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் உண்டு என்றும் அவனுக்குக் கற்றுத் தாருங்கள். 

           முடியுமானால் பொறாமையை விட்டு அவனை விலக்குங்கள். அமைதியாக இருப்பதன் இரகசியத்தைக் கற்றுத் தாருங்கள். கொடுமை செய்பவன் விரைவில் காலில் விழுவான் என்று அவன் கற்றுக் கொள்ளட்டும்.


ஏமாற்றுவதை விடத் தோற்பது எவ்வளவோ பெருமையானது என்று அவனுக்குக் கற்றுத் தாருங்கள். 


              எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.


               நளினமானவர்களோடு நளினமாகவும் கடினமானவர்களோடு கடினமாகவும் பழக அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.


கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்று அவனுக்குக் கற்றுத் தாருங்கள். 


            சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும் அதிக இனிமையாகப் பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் கற்றுத் தாருங்கள். 


              தன் தசையையும் மூளையையும் அதிக விலைக்கு விற்கவும், ஆனால் தன் இதயத்திற்கும் ஆன்மாவிற்கும் விலையை நிர்ணயிக்காதிருக்கவும் கற்றுத் தாருங்கள். 


               கூக்குரலிடும் கூட்டத்துக்கு செவிசாய்க்காதிருக்கவும், தான் சரியென்றால் எதிர்த்துச் சண்டையிடவும் கற்றுத் தாருங்கள். மென்மையாகக் கற்றுத் தாருங்கள். ஆனால் கெஞ்ச வேண்டாம். ஏனெனில் தீயில் சோதித்தால்தான் இரும்பு சுடர்விடும்.


பொறுமையின்றி இருக்கும் துணிச்சல் அவனுக்கு இருக்கட்டும். துணிவோடிருக்கும் பொறுமை இருக்கட்டும்.


               தன்னிடம் உன்னத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். ஏனெனில் அப்போதுதான் மனித இனத்தில் அவன் உன்னத நம்பிக்கை வைப்பான்.


          இது பெரிய விண்ணப்பம் தான். ஆனால் உங்களால் என்ன செய்ய முடியுமென்று பாருங்கள். 

  என் மகன் அவ்வளவு உன்னதமானவன்.”
-----------------

       இப்படி எந்த விண்ணப்பமும் தர நாமும்...
             
        உத்திரவாதம் தர
                   இன்றைய அரசின் கல்விக் கொள்கையும்,
                  கல்வி நிறுவனங்களும்,
                 ஆசிரியப் பெருந்தகைகளும்
                                    தயாரில்லை....

       பணம், புகழ், சமூகத்தில் உயரிய இடம்... இதை மனதில் வைத்தே பெரும்பாலோர் ஓட்டம்.

         அரைக் கிணறு (பத்தாம் வகுப்பு) முக்கால் கிணறு (பனிரெண்டாம் வகுப்பு) தாண்ட வேண்டி நம் குழந்தைகள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டுள்ளனர்.

              நம் பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் அவர்களுக்கு சமர்ப்பிப்போம்!


Share on:

இரயிலுக்கு காத்திருந்த
பயணிகள் கூட்டத்தில்
ஓரிடத்தில் நிற்கவொண்ணா பொடிசுகள்
ஓரணியாய் திரண்டு
ஒருவர்பின் ஒருவராக
சட்டை பிடித்து பெட்டி கோர்க்க
ஓடத் தொடங்கிற்று
அங்கொரு கும்மாள இரயில்...

மூட்டை முடிச்சுகளை
கும்பல் மனிதர்களை
மனச்சுமை மறக்க
குட்டித் தூக்கம் போடுபவர்களை
நிறுத்தங்களாக்கி
உற்சாகக் கூவலுடன்
வளைந்து நெளிந்து
ஓடிய அவர்களுடன்
கட்டணமின்றி பின்னோக்கிப் பயணித்தன
வேடிக்கை பார்த்தவர்களின்
'இனி ஒருபோதும் திரும்பாத'
வசந்தப் பொழுதுகளும்.

வந்து நின்ற நிஜ இரயிலில்
அடித்து பிடித்து
அனிச்சையாய் ஏறின
வெற்றுடம்புகள்.
கடந்த காலத்தில் மேய்ந்து கொண்டிருந்த
மனசெல்லாம்
கிளம்பிய வண்டியில் தாவி ஏறி
தத்தம் உடல் புகுந்தன.
இழுத்து விட்ட பெருமூச்சோடு
வேகமெடுத்தது இரயில்.
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ▼  February (2)
      • உன்னத மாணவர்களுக்காக...
      • பயணிகள் கவனிக்கவும்...
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 day ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    2 weeks ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    3 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    6 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    (அ)நீதி அரங்கம்
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    7 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    8 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates