நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி - 4


     
         1330 குறட்பாக்களும் 71 எழுத்துக்களில் தொடங்குகின்றன; 47 எழுத்துக்களில் முடிகின்றன என கடந்த பதிவில் பார்த்தோம்.

       இதிலும் நுட்பமாக ஆராய்ந்தால், க, கு, கை, சி, சு, தி, தீ, து, பு, ம, வா, வி, வை ஆகிய 13 எழுத்துக்களில் மட்டுமே தொடங்கும் குறட்பாக்களும் முடியும் குறட்பாக்களும் காணக் கிடைக்கிறது.

       அதே போல், ஞா(484), பீ(475), போ(693), மை(838), மோ(90) இவ்வெழுத்தில் தொடங்கும் குறட்பா ஒவ்வொன்று மட்டுமே உள்ளது. அடைப்புக் குறிக்குள் உள்ளது குறளின் வரிசையெண்.

        முதலெழுத்தும் முடிவெழுத்தும் ஒன்றாய் அமைந்த குறட்பாக்கள் 6 உள்ளது. நான்கு பொருட்பாலிலும்(391, 544, 604, 1025), இரண்டு காமத்துப் பாலிலும் (1187, 1218)இடம் பெற்றுள்ளன.

கடைசிச் சீர்:
1330 குறட்பாக்களும் 327 சீர்களில் முடிகின்றன.
உலகு, எனின், வார், மாட்டு, அற்று, விடும், பிற, துணை, இல், உடைத்து, படும், கடை, பெறின், வரும், தவர், இனிது, தரும், சிறப்பு, அன்று, இன்று, பயன், உண்டு, நட்பு, கெடும், விடல், செயின், அறிந்து, கண், பவர், அவர், செருக்கு, அகத்து, எனல், உள, இடத்து, பவர்க்கு, நகும், பலர், சுடும், மிகும் ஆகிய 40 சீர்கள் கடைசிச் சீர்களாக முப்பாலிலும் இடம் பெற்றுள்ளன.

        ஏறு, அரசு, ஒளி, தக, செவி, அரண், இறைக்கு, நூல், நிலை, கயிறு, களிறு, தெளிவு, சோர்வு, நன்கு, வெளிறு, முறை, குடி, கோல், தொக்கு, நேர், வேந்து, பெயல், அரம், ஒற்று, மறை, மற்று, உழை, மேல், அமைச்சு, கடன், பணிந்து, பண்பு, தூது, முகம், செறிவு, இழுக்கு, நாடு, உறுப்பு, ஐந்து, சென்று, படைக்கு, எஃகு, எடுத்து, காப்பு, கொளின், துப்பு, பகைக்கு, செறின், தனக்கு, நணித்து, எளிது, சுளி, சூது, பசித்து, உயர்ந்து, பணிவு, வியந்து, தூண், சால்பு, வழக்கு, ஒப்பு, இருள், பிறர், நிரப்பு, கீழ், கலன், இலர் ஆகிய 67 சீர்கள் கடைசிச் சீர்களாக பொருட்பாலில் மட்டும் இடம் பெற்றுள்ளன.

        கட்டு, துகில், பீடு, தந்து, நீர், குறிப்பு, பறை, மீன், மதி, பழம், இடம், குணம், ஊர், வலி, மடல், புணை, துயர், மருண்டு, இழந்து, புணர்வு, தவறு, வளை, பிரிவு, தீ, உளேன், இலேன், இரா, பசப்பு, கணி, அளி, வரல், நினைந்து, நொந்து, உரைத்து, நுதல், கண்டு, விரல், மார்பு, உப்பு, கதவு ஆகிய 40 சீர்கள் கடைசிச் சீர்களாக காமத்துப் பாலில் மட்டும் இடம் பெற்றுள்ளன.

        ‘இல்' ஈற்றுச் சீராக 44 இடங்களில் வருகிறது.
‘படும்' 42 இடங்களிலும்,
‘தரும்' 37 இடங்களிலும்,
‘கெடும்' 38 இடங்களிலும்,
‘உலகு' 25 இடங்களிலும்,
‘செயல்' 22 இடங்களிலும்,
‘தலை' 21 இடங்களிலும்,
‘கொளல்' 20 இடங்களிலும் ஈற்றுச் சீராக வந்துள்ளன.

நூலாசிரியர் அ.ஆறுமுகம் அவர்களின் குறிப்புப்படி, அவரது இளமைப் பருவத்தில் திருக்குறள் பயிலும் ஆர்வம் இருப்பினும், தனது ஆசிரியர் பணிக்காலத்தில் திருக்குறள் பதின்கவனகர்- நினைவுக்கலையேந்தல் பெ.இராமையா அவர்களது தொடர்பும், பல நிகழ்ச்சிகளுக்கு அவருடன் செல்லும் வாய்ப்புமே பெரும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. புறக்கண்ணை இழந்த திரு. இராமையா அவர்கள் இத்தகைய ஆற்றலைப் பெற்றிருக்கும் போது இருகண்களும் உள்ள நாம் இதனைப் பெற முடியாதா என்ற எண்ணமே உறுதிக்கான அடிப்படையாகி இருக்கிறது. திரு. அ.ஆறுமுகம் தனது 40 வயதில் ஐந்து மாதங்களுக்குள் திருக்குறள் முழுமையும் நினைவில் நிறுத்த் வெற்றிபெற்ற பட்டறிவே இந்நூலெழுதத் துணைநின்றிருக்கிறது.

        “எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்” (666)




நூற் பெயர்: திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி
ஆசிரியர்:   அ. ஆறுமுகம்,

வெளியீடு: 
பாவேந்தர் பதிப்பகம், ‘சீரகம்', திருமழபாடி, திருச்சி-621 851.

கொசுறு:




Share on:
http://nilaamagal.blogspot.in/2013/07/blog-post_10.html

http://nilaamagal.blogspot.in/2013/07/blog-post.html

திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி- 3

எட்டாம் படி:
உங்களுடைய திருக்குறள் கையேட்டில் திருக்குறள் முதற்சீரும் இறுதிச் சீரும் எழுதியுள்ளீர்கள். அவற்றிலிருந்து ‘அ' முதல் ஒவ்வொரு எழுத்திலும் தொடங்கும் குறட்பாக்கள் எத்தனை என தனித்தனியே கணக்கிடுங்கள். அவ்வாறே முடியும் எழுத்தையும் கணக்கிடுங்கள். தொடங்கும் எழுத்தும் முடியும் எழுத்தும் ஒன்றாகவே உள்ள குறட்பாக்கள் எத்தனையெனக் கணக்கிடுங்கள்.
திருக்குறள் நூலில் கொடுக்கப்பட்டுள்ள அகரவரிசையைப் பார்க்க வேண்டாம். நம் உழைப்பினால் பெறும் ஆற்றல் தான் எப்போதும் நிலைத்து நிற்கும். எழுத்தை வைத்துக் கணக்கிடுவது போல் சொல்லை வைத்துக் கணக்கிடுவதும் நமது நினைவாற்றலை மிகுதிப் படுத்தும். சான்றாக, ‘உலகு' என முடியும் குறட்பாக்கள், ‘படும்' என முடியும் குறட்பாக்கள் போன்று முடிகின்ற சொற்களை வைத்துக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

       1330 குறட்பாக்களும் 71 எழுத்துக்களில் தொடங்குகின்றன. 47 எழுத்துக்களில் முடிகின்றன.

திருக்குறட்பாக்கள் தொடங்கும் எழுத்துக்கள்: 

அ- 157, ஆ- 23, இ- 113, ஈ-8, உ- 81, ஊ- 21, எ- 45, ஏ- 9, ஐ- 4, ஒ-40, ஓ-6

க- 77, கா-28, கு-28, கூ-8, கெ-7, கே-7, கை-3, கொ-18, கோ-2

ச-3, சா-5, சி-18, சீ-4, சு-5, சூ-3, செ-37, சொ-7,

ஞா-1,

த-35, தா-9, தி- 6, தீ- 6, து-21, தூ-4, தெ-9, தே-5, தொ-10, தோ-1,

ந-54, நா-16, நி-18, நீ-4, நு-5, நூ-1, நெ-9, நோ-7,

ப-62, பா-3, பி-15, பீ-1, பு-20, பெ-19, பே-9, பொ-26, போ-1

ம-59, மா-4, மி-4, மு-20, மே-2, மை-1, மோ-1,

யா-10,

வ-28, வா-12, வி-28, வீ-6, வெ-4, வே-12, வை-2

மொத்தம்= 1330

திருக்குறட்பாக்கள் முடியும் எழுத்துக்கள்:

க-1, கு-97, கை-7,  சி-1, சு-20, சை-2,

ட-1, டி-6, டு-39, டை-27,  ணி-3, ணை-13, ண்-29,

தி-3, தீ-1, து-160, பு-58,  ம-1, ம்-181,  ய்-9,

ரா-2, ரி-3, ரு-6, ரை-2, ர்-127,

ல-2, லி-1, லை-25, ல்-152, வா-2, வி-1, வு-31, வை-4,

ழி-10, ழை-4, ழ்-6, ள-6, ளி-5, ளை-2, ள்-24,

ற-12, றி-3, று-101, றை-11, னி-1, னை-10, ன்-115

மொத்தம்=1330

ஒன்பதாம் படி:
இப்படியாக திருக்குறள் முழுவதையும் பல்வேறு வகைகளில் பகுத்து நினைவில் வைத்துக் கொண்டபின், திருக்குறள் வாழ்வியலுரையை அடிப்படையாகக் கொண்டு குறளுக்குரிய பொருளை ஒருமுறை படித்தாலே மனதில் பதிந்து விடும். குறளைக் கூறியவுடன் பொருள் தானே நினைவுக்கு வருமளவு பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சியினால் பொருள் கூறினால் குறள் கூறவும், குறள் கூறினால் பொருள் கூறவும் இயலும்!

பத்தாம் படி:
பொருளுடன் திருக்குறள் முழுமையும் அறிந்தாயிற்று. இனி, திருக்குறளில் பயின்று வரும் உவமைகள் அணிகள் இவற்றையும் தெரிந்து வைத்திருந்தால் இலக்கண அடிப்படையில் கேட்டாலும் பதில் தரலாம். இதற்கு சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான “திருக்குறள் அணிநலம்” என்ற நூல் பயனாகும்.
இவ்வாறு பல்லாற்றானும் ஓதி உணர்ந்த திருக்குறள் நெறியை வாழ்வியல் நெறியாக ஏற்றுப் பின்பற்றுதல் மிக நன்று! சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியை வள்ளுவர் வழியில் நீக்கலாம்! யாதொன்றும் தீமையில்லா வாய்மையினை பின்பற்றலாம்! கசடறக் கற்றபின் அதற்குத் தக நின்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம்!

வயது ஒரு தடையில்லை:

        ஒவ்வொரு நாளும் காலை மாலை அரை மணி நேரம் ஒதுக்கினாலே போதும், முறையான பயனைப் பெறலாம். நம் பயண நேரங்களில் மனதுள் உருப்போட்டவற்றை நினைவூட்டி பயிற்சி பெறலாம். இளையோர் மட்டுமின்றி எவ்வயதினரும் முயன்றால் முடியாதது ஏது?!

இதனால் என்ன பயன்?

         வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் தீர்க்க திருவள்ளுவர் தோன்றாத் துணையாவார் நமக்கு. மன உறுதியும் நல்லியல்புகளும் வளரும். எத்தகைய கருத்துகளையும் நினைவில் இருத்தும் வலிமை வளர்கிறது. திருக்குறள் வழி நடக்க வேண்டுமென்ற உறுதி ஏற்பட்டு அவ்வாறே செயல்படவும் தூண்டுகிறது. பிற இலக்கியங்களை எளிதில் புரிந்து கொள்ளவும் நினைவில் இருத்திக் கொள்ளவும் துணை புரிகிறது.

(இன்னூலின் எஞ்சிய சிறப்புத் தகவல்கள் அடுத்த பதிவில்)

நூற் பெயர்: திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி
ஆசிரியர்:   அ. ஆறுமுகம்,

வெளியீடு: 
பாவேந்தர் பதிப்பகம், ‘சீரகம்', திருமழபாடி, திருச்சி-621 851.

Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ▼  August (2)
      • நமக்கும் கிடைக்கும்
      • தொடக்கமும், முடிவும்...
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 day ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    2 weeks ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    3 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    6 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    (அ)நீதி அரங்கம்
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    7 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    8 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates