நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

ஒளவியம் மிஞ்சியே அரசியல் நாறுது

ஓட்டு வேட்டையோ கன ஜோரா நடக்குது

ஒவ்வொருவர் பேச்சிலும் கயமை தெரியுது

ஐயா சாமி... இனியிங்கு என்ன இருக்குது?!

ஏமாந்தவன் குடிமகன் நல்லா தெரியுது

எதிர்த்தவன் குடி அழிஞ்சி போகுது

ஊழல் மட்டுமே ஒளிர்ந்து மினுக்குது

உயிர் பயத்தில் உண்மை அஞ்சி நடுங்குது

ஈ எறும்புக்குத்தான் சுதந்திரம் இருக்குது

இல்லாதவன் பாடு திண்டாட்டமாகுது

ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகம் மறக்குது

அறமோ அடுக்குமோ இது?!
Share on:

28 March 2011 21:19


இரா.எட்வின் said...


வணக்கம் நிலா,


இப்படி ஒன்று நடந்திருக்கவே நடந்திருக்காது என்று சொல்வதற்கில்லை. இது நடந்திருக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆசிரியர் என்றால் புனிதர், தெய்வம் மாதிரி (தெய்வம் என்பதே கற்பிதம் ) என்பன போன்ற மிகை மதிப்பீடுகளை எடுத்த எடுப்பிலேயே எறிந்துவிட வேண்டும். தாராள மயமும் உலகமயமும் தேசத்தின் தரைப் பரப்பெங்கும் கும்மாளமாய் குதித்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆசிரியனும் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் ஒரு சராசரி ஊழியனே. நாளைய உலகச் சமூகத்திற்கான மனித சக்த்தியை தயாரித்து தருபவன் என்கிற அளவில் இவன் மற்ற ஊழியர்களிடமிருந்து மிக அதிகமாய் வேறுபட்டு நிற்க வேண்டும் என்று இந்தச் சமூகம் எதிர்பார்ப்பதில் நியாயமிருக்கவே செய்கிறது.


தாராள மயத்தின் கோர விளைவுகளின் உச்சம் இன்னும்கூட கொடூரமாக இருக்கவே செய்யும். கல்வியும் நுகர் பொருளாகிப் போனதன் விளைவுதான் இது. தாராளமயத்தை சம்மட்டி கொண்டு போடும் வரைக்கும் இது தவிர்க்க முடியாததுதான்.

வணக்கம் தோழர்...


தமிழச்சி போன்ற படைப்புலக வெளிச்சங்கள் வியக்கும் படைப்பாளுமை பெற்ற' தங்கள் முதல் வருகைக்கு வந்தனம். ஆசிரியப் பணியை அறப் பணியாகக் கருதி சேவை செய்யும் தங்களைப் போன்ற, சகோதரர் சுகன் போன்ற, எனது தகைசால் ஆசான்கள் பலரையும் போற்றிக் கொண்டாடுவதை ஒருபோதும் கைவிடேன். சாப்பாட்டில் தென்படும் ஒன்றிரண்டு கற்களை சமைப்பவரிடம் அறிவுறுத்துதல் ஒட்டுமொத்த சமையல் சுவையை குற்றம் சாட்டுவது ஆகாது தானே... தோழி மணிமேகலை எனது எண்ணவோட்டத்தை பிரதிபலித்து விட்டார் எனினும் முல்லையும் கீர்த்திக்குட்டியும் நினைவிலிருப்பதால் தங்கள் கருத்துரையால் ஏற்பட்ட எனது சிந்தனை ஓட்டத்தை ஒரு பதிவிடுமளவு பேச உரிமை எடுத்துக் கொள்கிறேன். 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற பரிதவிப்பு தெரிகிறது தங்கள் கருத்துரையில்.


குறிப்பிட்ட சம்பவங்களிரண்டும் கோர்க்கப் பட்டதல்ல... கேள்விப்பட்டது தான். புனைவல்ல... நிஜமே. எங்களின் அனுபவமாயிருந்தால், என்ன செய்யலாமென்று கைபிசைந்து நின்றிருக்க மாட்டோம். என்ன செய்ய முடியுமென்று ஒரு கை பார்த்திருக்கலாம். சம்பந்தப் பட்டவர்களின் நேரடி அறிமுகமில்லை. கேள்விப் பட்டதும் பொய்யில்லை. எழுந்த குமுறல் தான் பதிவானது. மேலும் சட்டப் பூர்வமாய் ஏதேனும் செய்ய முடியுமா என்ற அறிதலுக்காகவும், அறிவுறுத்தலுக்காகவும் தான். ஒரு நல்லாசிரியராக, பாட திட்ட வரைவில் பங்கேற்கும் அளவு பொறுப்பிலிருக்கும் தாங்கள் அப்படியான ஆலோசனைகளை தந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்.


எங்கள் ஊராயிருந்தும், புகழ் வாய்ந்த தனியார் கல்வி நிறுவனமாயிருப்பதும், வெளிப்படையாய் பெயர் கூறுவது வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாமென்ற காரணத்தாலும் தவிர்க்கிறேன். நிறுவனத்துக்கு இதில் சம்பந்தமில்லை. கண்காணிப்பாளர் வெளிப் பள்ளியிலிருந்து வந்தவர். சுய விருப்பத்திலும் ஆணாதிக்க போக்கிலும் (பின்னணியில் என்ன பலமிருக்கிறதோ யாரறிவர்?) செய்தது என்பது புரிகிறது. இதில் ஆணாதிக்கம் எங்கு வந்தது தோழர் ? எனக் கேட்டு விடாதீர்கள். தங்கள் கருத்துரையில் உலக மயமாக்கலும், தனியார் மயமாக்கலும் பற்றி கேட்க எனக்கும் தோன்றியது. தோழர் சொன்னால் எதோ உள்ளரசியலிருக்கும் என விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறேன்.

ஆனால், இந்த சம்பவத்தில் அதே வயது மாணவ மாணவிகளின் கருத்து என்னவென்றால்... பையன்களிடம் ஆசிரியர்களுக்கு உள்ளூர பயமிருக்கிறது. வெளியில் போனால் கூட்டு சேர்ந்து தாக்கப் படுவோமோ என்று... பெண் பிள்ளை என்றால் மிரண்டுவிடும். புகாருக்கும் போராடவும் துணியாது என்ற தைரியம். அறிமுகமற்ற கவசம். அடையாளம் காட்டப் பட மாட்டோம் என்ற நம்பிக்கை. நெருக்கடியான நேரத்தின் பாதுகாப்பு.

கேட்டவுடன் இப்படி நடந்தால் என்ன செய்யலாமென எங்களுக்கு தெரிந்ததை பிள்ளைகளுக்கு எடுத்து சொன்னோம். பதட்டப் படாமல் தேர்வு முடிந்ததும் தலைமைக் கண்காணிப்பாளரையோ, தலைமை ஆசிரியரையோ அணுகி நடந்ததை சொல்லி புகார் செய்யவும்( தேர்வறையில் சக மாணாக்கர்கள் சாட்சிதானே ) பெற்றோரிடம் பகிரவும் செய்யலாம் என்று. சக அலுவலருக்காக அவர்கள் இரக்கப்பட்டு குற்றத்தை திசை திருப்பினாலும் வியப்பதற்கில்லை. பெற்றோர் உணர்வர். அரசுத் தேர்வுக்காக மாணாக்கர்கள் ஒன்றுக்கு இரண்டு ஆண்டுகள் படும் அல்லாட்டதை, கடும் உழைப்பை.

இதுபற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருக்கும் போது, 'ஏன் நேரமில்லை என மறுத்து அந்த அக்கா அவர் கோபத்துக்கு ஆளாகணும்...? வாங்கி தப்பும் தவறுமா பதில் குறித்து தந்துட்டு வேலையைப் பார்க்க வேண்டியது தானே...' என்கிறது ஒரு பொடிசு.

இன்றைய கால கட்டத்தில் கல்வியின் அத்தியாவசியமும் உச்சபட்ச உழைப்பும் பெரும் பணச் செலவும் எல்லாத் தட்டு மக்களுக்கும் தவிர்க்க முடியாத சுமைதான். இந்த இடத்தில் தங்கள் 'உலக மயமாக்கலும் தாராள மயமாக்கலும்' பற்றிப் பொருத்திப் பார்க்கலாமென நினைக்கிறேன்.

பெற்றோரின் அறிவார்ந்த வழிகாட்டல் வாய்க்காத மாணாக்கர்களுக்கும், வகுப்பாசிரியர்களின் நல்லறிவுரைகளும் தனிப்பயிற்சி ஆசிரியர்களின் அக்கறையான அனுபவப் பகிர்தல்களும் பெருந்துணையாய் இருப்பதை நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.

இந்தப் பதிவேற்றும் நேரம் கிடைத்த தகவலின்படி மருத்துவக் கல்வி குறித்த கனவோடு உழைத்த அப்பேதையும், தோள்கொடுத்த பெற்றோரும் இளங்கலை அறிவியல் படிக்க மனச் சமாதானப் படுத்திக் கொண்டு அதற்கு எந்த கல்லூரி சிறந்தது என்ற தேர்வில் இறங்கியுள்ளனராம் ...

இந்த மனப்பான்மையை என்ன செய்யலாம்...?
Share on:
நடந்து முடிந்த பள்ளியிறுதித் தேர்வில் நிகழ்ந்த இரு சம்பவங்கள்...

அதிக சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவனொருவன்... தேர்வறையில் மெயின் ஷீட் எழுதி முடித்து அடிஷனல் ஷீட் வாங்கி எழுதும் மும்முரத்தில் மெயின் ஷீட்டை தன்னருகே வைத்து மேற்கொண்டு எழுதி முடிக்கும் தருவாயில் எல்லாவற்றையும் இணைத்துக் கட்ட விழையும் போதுதான் தனது மெயின் ஷீட் மாயமாய் மறைந்தது தெரிந்து திகைக்கிறான். சற்று நேர அல்லாட்டத்துக்குப் பின் பக்கத்து தேர்வறையில் இருந்து ஆடி அசைந்து வருகிறது அது. கண்காணிப்பாளரின் கயமையில் அவருக்கு வேண்டிய மாணவனுக்காக பயணித்திருக்கிறது அது. இதற்க்கு பக்கத்து அறை கண்காணிப்பாளரும் உடந்தை. வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல. கூட்டணியின் லட்ச்சனமெல்லாம் இப்படித்தான் போல.

மற்றொரு சம்பவத்தில் ஒரு மாணவி... பள்ளியின் மாதாந்திரத் தேர்வுகளில் கூட நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதம் குறையாமல் மதிப்பெண் பெறுபவள். விறுவிறுப்பாக தன் கணிதத் தேர்வெழுதிக் கொண்டிருக்கையில் சாத்தான் பார்வையில் விழுந்தாளவள். மோப்பம் பிடித்து நெருங்கிய அவ்வறையின் கண்காணிப்பாளர், ஒரு வினாத் தாளைக் கொடுத்து ஒற்றை மதிப்பெண் வினாக்கள் நாற்பதையும் குறித்துத் தரச் சொல்லியிருக்கிறார். நேரமில்லையென மறுத்த அவளது தேர்வுத்தாளையும் எழுதுகோலையும் ஆவேசமாகப் பறித்து அவள் கண்ணெதிரிலேயே நாலைந்து பக்கங்களை குறுக்கில் கிழியுமளவு கோடு கிழித்து வீசியிருக்கிறார்... மிஞ்சிய நேரத்தில் அப்பேதையின் எஞ்சிய மனநிலையும் அவளது எதிர்காலம் குறித்த கனவுக் கோட்டைகளும் சின்னாபின்னமாய் சிதைந்திருக்குமல்லவா? என்ன செய்யலாம் இவர்களை...???
Share on:
எழுபதை நெருங்கும் முதியவர் ஒருவர்... ஆரோக்கியமான மனைவி,நல்ல நிலையிலிருக்கும் தன் பிள்ளைகள் மற்றும் பிறர் பார்வையில் குறைவற்ற வாழ்வு வாழ்பவர் திடீரென மனம் துணிந்து தற்கொலையை நாடுகிறார். செய்தியறிந்து சென்று பார்க்கும்போது அறுவை சிகிச்சைக்கு அவசியமான உடல் நலக் குறைவு தந்த பயம் தான் காரணமெனக் கூறப்படுகிறது.

இன்னொருவர்... சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சிகள் மூலம் உடலையும் மனதையும் உறுதியாக வைத்திருப்பவர். காந்திய வழியில் தன் வேலைகளைத் தானே செய்யவும், பிறர்க்கான உபகாரங்களைச் செய்யவும் தயங்காதவர். தள்ளாமை நேரிட்ட முதிர்வயதில் பிறர்க்கு பாரமாகிடக் கூடாதென்ற அதே மனப் பாங்கில் தன் வியாதிகளுக்கு மருந்தெடுக்கவும் மறுத்து இறப்பை எதிர்கொள்கிறார் நெஞ்சுரமோடு.
Share on:
தள்ளாத வயோதிகர்க்கு
நடக்கவும்
பின்தொடரும்
நாயைத் துரத்தவும்
தெருவோர அரளிச் செடியில்
சிவன் தலைக்கு
ரெண்டு பூப்பறிக்கவும்
பிற்பகலில் கண்ணசர விடாம
சேட்டை செய்யும்
பொடிசுகளை விரட்டவும்
தோட்டத்துச் சருகடியில்
நெளியும் பூச்சி பொட்டை
சட்டுன்னு அடிக்கவும்
உட்கார்ந்து எழ
ஒரு பிடிமானமாகவும்
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ▼  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ▼  March (5)
      • அய்யோ
      • இந்த மனப்பான்மையை என்ன செய்யலாம்...?
      • கொலைவாளினை எடடா மிகுகொடியோர் செயலறவே....
      • உடனுறை மருத்துவர்கள்....
      • இடருய்தி
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • திண்டுக்கல் தனபாலன்
    திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஒன்று (1)
    5 days ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    தால லாவண்யம்
    6 days ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதி !!!!!
    1 week ago
  • கீதமஞ்சரி
    புத்தகத் திருவிழாவில் 'சாத்தான்'
    2 weeks ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    கனவுக்கடத்தல்.
    3 months ago
  • அழியாச் சுடர்கள்
    நான் என்ன படிக்கிறேன் ஏன்? சி. சு. செல்லப்பா
    3 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • ரிஷபன்
    ராசா
    1 year ago
  • வண்ணதாசன்
    தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
    2 years ago
  • சமவெளி
    அடிக் கிளைப் பூ.
    2 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
    2 years ago
  • CrUcifiXioN
    FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!
    3 years ago
  • Thanjai Kavithai
    4 years ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    5 years ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    5 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    6 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    6 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    6 years ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    6 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    7 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    9 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    10 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    10 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    11 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates