நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

செந்தமிழ்ச்சாரலின் சொந்தங்களுக்கு கவிஞர் சக்தி அருளானந்தம்

'நான் படிச்சாச்சு... நீங்க?' பகுதியில் 

#இலகுவானதெல்லாம்_இலேசானதல்ல கவிதைத் தொகுப்பின் நயம் பாராட்டல்....

நெய்வேலியைச் சேர்ந்த நிலாமகள் சௌந்தர சுகன் இதழ் வழி அறிமுகமானவர்.சுகன் இதழின் விழா ஒன்றில் கட்டுரை வாசிக்க மேடையேறியபோது நேரில் அறிமுகம்.பிறகு தனலட்சுமி பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சேலம் வந்தபோது நட்பு நெருக்கமானது.பறத்தல்,பறத்தல் நிமித்தம் நிலாவின் முதல் கவிதைத் தொகுப்பு. இது இவரின் இரண்டாவது தொகுப்பு.

முதல் தொகுப்பை அணுகும் போதும், இரண்டாம் தொகுப்பை அணுகும் போதும் நாம் கொள்ளும் மன நிலை வேறு வேறு
தவழும் குழந்தை எழுந்து நிற்க முயற்சி செய்வது, ஒன்றிரண்டு அடிகள் எடுத்து வைப்பது நம்மைக் கொண்டாட வைத்துவிடுகிறது.ஆனால் இரண்டாம் தொகுப்பு என்னும் போது ஒரு கவிஞருக்கு ஒருவித எதிர்பார்ப்புச் சுமையை ஏற்றிவிடுகிறது.

"முந்தையதில் பல புரிதல்களும்,தெளிதல்களும்,பக்குவங்களும் சாத்தியமாக்கியிருக்கிறது.இவ்வேளையில்" இது நிலாமகளின் இரண்டாம் தொகுப்பின் முன்னுரையிலிருந்து.எனவே அந்தப் புரிதல்,தெளிதல்,பக்குவம் கவிதைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

கவிதையின் வடிவம் எளிமையாக இருந்தாலும் அதன் உள்ளடக்கம்,அது பேசும் விசயம் எளிமையானதல்ல என்கிற புரிதலுக்கு வருகிறோம். அதைப்போல இந்தத் தொகுப்பு 'இலகுவானதெல்லாம் லேசானதல்ல என்கிறது.
'எதிரிலிருக்கிறாய் நீ
ஊர்தியின் எரிபொருளாகவா
பாய்மரத் துடுப்பாகவா
பஞ்ச பூதங்களிலுமா
தேடுமென்னுள்ளேயா?'

நிலாமகள் எதைத் தேடுகிறார்?தேடுவதை அடைந்தாரா?
அவர் தேடல் முடியவில்லை
"இன்னும் இன்னும்
எத்தனை பிரதட்சயம்
இருக்கிறதோ இறைவசம்!!"

கண்ணுக்கெட்டாத தொலைவு செல்லவேண்டியிருக்கிறது இந்தப் பயணிக்கு.பயணியைக் கடந்து செல்கின்றனர் பலர்.
"காற்றாக சிலர்
கல் நெஞ்சினராக சிலர்
நிழலாக சிலர்
பெருவெளியாக சிலர்
கால் இடறும் நெருஞ்சியாக சிலர்..."
சக பயணிகள் எத்தகையவர்களாக இருந்தாலும்,இந்தப் பயணி பலருக்கும் நிழலாக,குடையாக,உயிர்ப்புடன் இருப்பதுடன்
"வழி நெடுக
மரங்களும் கற்களும் இருக்குமென "
நம்பித் தொடர்கிறார் தன் நீள் பயணத்தை.

வாழ்க்கையின் மீதான,சக மனிதர்களின் மீதான நம்பிக்கையை நிலாமகள் இழக்கவில்லை. தாண்டவமாடிய 'தானே' புயலுக்குப் பின்னும்
"எல்லாம் கடந்தும்
எம் தோட்டத்தில்
தப்பிப் பிழைத்த
செம்பருத்திச் செடியின்
ஒக்றைப்பூ"

கவிஞருக்கு பெரும் பெரும் எதிர்பார்ப்புகளின்றி சிறிய விசயங்களே போதுமானதாயிருக்கிறது.அதிலேயே அவரும் நிறைவு கொள்கிறார்.அதை இந்தத் தொகுப்பின் முன்னிலையிலும் வண்ணதாசனின் மேற்கோளை எடுத்தாண்டிருக்கிறார்.
"#இப்படித்_தான்_இருக்கிறேன்_நான்_இப்படி_இருப்பது_போதும்_எனக்கு".
-வண்ணதாசன்.

'வரவேற்பறையை
தன் வாசத்தால் நிரப்பப்
போதுமானதாயிருக்கிறது
தோட்டத்தில் அரும்பிய
ஐந்தாறு மல்லிகைகளுக்கு"

'யாசி'என்றொரு கவிதை .கேளுங்கள் தரப்படும் என்பதற்கேற்ப யார் யார் என்னென்ன கேட்டார்கள்,என்னென்ன பெற்றார்கள் என்று பட்டியலிடுபவர்
'உன் நேசத்தை யாசிக்குமெனக்கு
புறக்கணிப்பை வழங்குகிறாய்'
என்கிறார் புண்பட்ட மனதுடன்.நேசத்தை யாசிக்கும் இவருக்கு வழங்கப்பட்டதோ புறக்கணிப்பு. புறக்கணிப்பை வழங்குபவருக்கு எதிராக இவர் ஏந்தும் ஆயுதம் அன்பு.
'நீ யோசித்ததுண்டா
அன்பெனும் ஆயுதம் பற்றி?!'
இப்படி அன்பை ஆயுதமாக ஏந்துவதற்கான காரணம் மீண்டும் அன்பு மலருமென்ற நம்பிக்கை.
'நினைவுப் பானை புரண்டெழுந்து
வெந்து தணிகிறது
கடந்தகாலத்துப் பிரியங்களின் ஊர்வலம்
துளிர்க்குமொரு காலமென
நம்பிக்கையில் நகர்கிறது காலம்"

பட்டியலிடும் இன்னொரு கவிதையுண்டு.நிலவின் பயன்பாட்டை நிலா இப்படி சொல்கிறார்.
விளையாட்டு பொம்மை,ஆற்றுவிக்கும் மருந்து,இயற்கையின் வெளிச்சம், அபலையின் வழித்துணை, தணிவிக்கும் தண்ணொளி,ஜொலிக்கும் பெருநட்சத்திரம்...முடிப்பு தான் இதை வேறொன்றாக மாற்றிவிடுகிறது.
'நிலவுக்கும் உண்டு
அரிதாரம் தேவையற்ற
பல அவதாரங்கள் '
'நிலவுக்கும்' என்னும் போது வேறு எது எதற்கு என்று மனம் தேடலைத் துவங்குகிறது.

நிலாமகளின் நுட்ப உணர்வு நுணுக்கமான பலவற்றை அனுமானிக்கிறது.
'பள்ளித் தண்டவாளத் துண்டில்
உள்ளுறைந்திருக்கும்
இரயில்களின் தடதடப்பும்
விழுந்து மாய்ந்த உயிர்களின்
இறுதி ஓலமும் கேட்கிறது'

ஒற்றைக் குயிலின் மென் சோகக் குரல் அவர் மனதுக்குள் உறைந்திருக்கும் வன் சோகத்தை
'அடியாழத்தில்
அமிழ்ந்துபோன
பலப்பலத் துயரங்களை அறுத்து அறுத்து
மேலெழப் போதுமானதாயிருக்கிறது'

நிலாமகள் கவிதைகளில் வெளிப்படும் இன்னொரு அம்சம் தாய்மை. கல்வி நிமித்தம் அவரைப் பிரிந்து சென்றிருக்கும் குழந்தைகள் மீதான பரிவு பசித்துக் கிடக்கும் ஊதல் காரனின் பசியை நினைத்து தாயினும் சாலப்பரிந்து உருகுகிறது.
'இன்றிரவு உறங்கலாம்
அவனும்
நிறைந்த வயிறுடன்'
-செவிக்குணவு

மென்மையாய் நகரும் நிலாவின் கவியுலகம்
'தம்மை
தகர்த்தவர்க்கும்
சிதைத்தவர்க்கும்
மிதித்தவர்க்கும்
உறுதுணையாய் இறுதிவரை..
மணலாயிரு'
என்று போதிப்பவர்க்குள்ளும் இருக்கும் வன்மம் வெளிப்படுகிறது.
'திறந்திருந்த உடற்பரப்பில்
சுருக்கென கடித்து-தன்
விடமேற்றிய சிறு குளவி...
ஏற்றிய கடுகடுப்பு குளவி பல்லியிடம் சிக்கியதும் ஏற்படும் குதூகலம்..வன்மம் தவிர்த்த வாழ்வரிதா? என்கிற  கேள்வியை நமக்குள்ளும் கவிஞருக்குள்ளும் எழுப்புகிறது.

வாழ்த்துகள் நிலா.

வெளியீடு
************
ஊருணி வாசகர் வட்டம்,
22/105,பாஸ்கர் காலனி,
3வது தெரு,விருகம்பாக்கம்,
சென்னை-600 092.

பேச:81481 94272
89393 87296

விலை₹70/-

நன்றி :
முகநூல்
கவிஞர் சக்தி அருளானந்தம்
https://m.facebook.com/story.php?story_fbid=618953895103916&id=100009679339172

Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ▼  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ▼  February (1)
      • தோழர் சக்தி படிச்சாச்சு...! நீங்க?
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 day ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    2 weeks ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    3 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    6 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    (அ)நீதி அரங்கம்
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    7 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    8 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates