நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >



ஆசிரியர்: ‘மரபின் மைந்தன்' முத்தையா
வெளியீடு: விஜயா பதிப்பகம்
விலை: ரூ. 30/-
பக்கங்கள்: 120

       சின்ன சின்ன வாக்கியங்களில் பெரிய பெரிய செய்திகள்... கையடக்க நூலில் கடலளவு வழிகாட்டல்கள்...
            'நமது நம்பிக்கை' சுய  முன்னேற்ற மாத இதழ்  ஆசிரியரான திரு.மரபின் மைந்தன் அவர்கள் ('ரசனை' இலக்கிய இதழும்) தன்  எழுத்துக்களால் எல்லோருக்கும் ஊக்கம் அளிப்பவர்.  தமிழகம் நன்கறிந்த படைப்பாளரான இவர் உலக நாடுகளை வலம்  வரும் பேச்சாளர். சமயத் தமிழ் , சமகால இலக்கியம் அனைத்திலும் ஆளுமை மிக்க சிந்தனையாளர்  விளம்பரவியல் ஆலோசகர் நிறுவனங்களுக்கு பயிற்சி தரும் வல்லுநர் வெற்றித் தமிழர் பேரவையின் பொதுச்  செயலாளர் ஈஷாவின்  தமிழாக்க நூல்களில் பெரும் பங்கு வகிப்பவர் .(சமீபத்தில் ... 'ஞானத்தின் பிரம்மாண்டம்'!)

இனி 'ஒரு கப் உற்சாகம்'   உங்களுக்கும் ....


நன்றி சொல்லுங்கள்...

        செயல்படத்தூண்டும் சவால்களுக்கு
சாதிக்கத் தூண்டும் பகைவர்களுக்கு
சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு

கவனக்குறையை உணர்த்தும் தோல்விகளுக்கு
வைராக்கியம் வளர்த்த அவமானங்களுக்கு
பாராட்டும்படி வளரச் செய்த பரிகாசங்களுக்கு

எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு
எப்போதும் வழிகாட்டும் எழுத்துகளுக்கு
எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு

நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு
புத்துணர்வு கொடுக்கும் விடியலுக்கு
வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு

... அப்படியானால் நீங்கள் ஜெயிப்பீர்கள்!

         உங்கள் மனநிறைவுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் உழைக்கிறீர்களா?
விமர்சனங்களுக்கு அஞ்சாமல் உறுதியாய் இயங்குகிறீர்களா?
சுயமாக நிதானமாக முடிவெடுக்கிறீர்களா?

பதட்டமில்லாமல் செயல்படத் தெரியுமா?
கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றுவீர்களா?
தோல்விகளுக்குப் பின்னும் துடிப்புடன் எழுகிறீர்களா?
உங்களால் முடியுமென்று உறுதியாய் நம்புகிறீர்களா?

... அப்படியானால் நீங்கள் ஜெயிப்பீர்கள்!

நிரந்தரமான மகிழ்ச்சி...

துணிவான முடிவுகளில் இருக்கிறது
பணிவான வார்த்தைகளில் இருக்கிறது
கணிவான அணுகுமுறையில் இருக்கிறது
பரிவான உதவிகளில் இருக்கிறது

கனவுகளை வரையறுப்பதில் இருக்கிறது
இலட்சியத்தை செயல்படுத்துவதில் இருக்கிறது
இழப்புகளை ஈடுகட்டுவதில் இருக்கிறது
கணிசமாக சேமிப்பதில் இருக்கிறது

புரிந்து கொள்ளுங்கள்...

தோல்வி வந்தால் பொறுமை அவசியம்
வெற்றி வந்தால் பணிவு அவசியம்
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்

வாழ்வில் எளிமை விரயங்கள் தடுக்கும்
பேச்சில் இனிமை பிரிவுகள் தடுக்கும்
நேரத்தின் அருமை தோல்விகள் தடுக்கும்
வேலையில் திறமை வெற்றியைக் கொடுக்கும்


சோதனைச் சூறாவளியில்...

 அன்புள்ள உறவுகளில் ஆறுதல் தேடுங்கள்
அச்சம்தான் நம் எதிரி- அச்சத்தை உதறுங்கள்
எதிர்ப்பவர் நம் மனிதர்தான் - முடிந்தவரை மோதுங்கள்
எண்ணமே வாழ்வாகும் - நல்லதை எண்ணுங்கள்
நிச்சயம் தீர்வுண்டு - நிதானமாய் தேடுங்கள்

நீங்கள் விரும்பினால்...

பகைவர்களை மிகநல்ல நண்பர்கள் ஆக்கலாம்
பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்
எத்தனை இழந்தாலும் இழந்த பொருள் மீட்கலாம்
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்
வியர்வை செலவழித்து வெற்றிகள் குவிக்கலாம்
மவுனத்தை பதிலாக்கி விமர்சனங்களை வீழ்த்தலாம்
வெற்றியிலே தேங்காமல் அடுத்த செயல் ஆற்றலாம்

எதிர்ப்புகள் என்பவை...

 எதிர்ப்பதை தவிர எதுவும் செய்யாது
கத்தும், குலைக்கும், கடிக்க வராது
சத்தம் இருக்கும், சாதிக்காது
பயத்தைக் கொடுக்கும், பாதிக்காது
வளர்ச்சிக்கு வரமாய் வாழ்கின்ற சாபம்
வெற்றிக்கு வேண்டிய கட்டாய பாடம்

இன்னும் கொஞ்சம்...

 புன்னகை செய்யுங்கள்; பரிவாய் பேசுங்கள்
திட்டமிடுங்கள்; புதுமைகள் செய்யுங்கள்
விழிப்பாய் இருங்கள்; விட்டுக் கொடுங்கள்
நம்பிக்கை கொடுங்கள்; பெறுங்கள்

நிலையான நிம்மதி...

 வேண்டாத நட்பை விலக்குவதில்
வேண்டாத குணங்களை மாற்றுவதில்
சரியான அளவு உழைப்பதில்
சீரான அளவு உண்பதில்
அமைதி தவழும் இல்லங்களில்
உதவி செய்யும் நேரங்களில்
நேர்மையாய் செயல்படும் பொழுதுகளில்
புரிந்து கொள்ளும் உறவுகளில்
வரவுக்கேற்ற செலவுகளில்

அப்ப நீங்க...?

 இன்று பலர் தங்கள் வலிமைகளை உணர்வார்கள்
இன்று பலர் புதிய முயற்சிகளில் இறங்குவார்கள்
இன்று பலர் சுய விமர்சனத்தில் தெளிவடைவார்கள்
இன்று பலர் யாருக்காவது உதவுவார்கள்
இன்று பலர் தங்கள் இலட்சியங்களைத் தொடுவார்கள்
இன்று பலர் புதிய உற்சாகம் பெறுவார்கள்.

*****இனிய புத்தாண்டு
மற்றும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்*******


Share on:
தனுர்பூசை   தீபாராதனை காண
கோயில் வாசல் வரை
நீண்டிருந்தது கூட்டம்

சிலைமேல் பூக்கள் அர்ச்சிக்கப் பட்டன
மந்திர உச்சாடனங்கள்  காதுகளை நிறைத்தன
காத்துக் கிடப்பதில் கால்கள் நொந்துபோய் 
'சாமிக்கு  என்னம்மா செய்யறாங்க?'
தாயை கேட்டது  ஒரு நடைபருவக் குழந்தை

'அர்ச்சனை செய்யறாங்க' என்று
வாய் மூடி கரம் குவித்தார் அத்தாய்.
'நமக்கெல்லாம் செய்யமாட்டாங்களாம்மா ?'
தொடுத்தது தன் அடுத்த கணையை பொதுவில்...

என் கையிலிருந்த பூக்களை
அந்த மழலையின்  தலை மேல் தூவிவிட்டு
வரிசை விட்டு வெளியேறினேன்
திருப்தியுடன் .




Share on:

பேருந்துப் பயணத்தில்
முன்னிருக்கைக் குழந்தை
தாயின் தோளில் உறங்குகிறது.

அதன் தலையில்
குட்டிக் குட்டி இரட்டைச் சிண்டு
மதுவின் ‘அந்த'ப் ப்ராயத்தை
மனசில் திரையிடுகிறது.

பக்கத்து இருக்கையில்
ஒரு துறுதுறுக் குழந்தை...

தன்னை கவனிப்போரை
பெருமிதமாய் வளைய வரும் தன்
சுழல்கண்கள் படபடக்க
தன் மழலைக் குரலில்
சுற்றியிருப்போர் செவிகளை நிறைக்கிறது.

சிபியின் சின்னவயசு மழலைமொழி
சிம்மாசனமிடுகிறது மனசில்.

ஆளுக்கொரு தொலைவில்
தொலைதூரத்திலிருக்கும்
சிபியும் மதுவும்
அக்குழந்தைகள் இருவருமாய் மாற
அவ்விரு தாயாய் நானொருத்தியே.

***********************

பசியென்னும் பெரும்பிணிக்கு
மருந்தெனவேனும் நினைத்து
விழுங்கி வை கண்ணே
கிடைக்கும் உணவை
கொஞ்சமாவது.

நுனி நாவின் ருசியரும்புகளை
தொடவேண்டாம்...
நீ வாயிலிடும் கவளங்கள்.
நடுநாவில் வைத்து
‘மடக்'கென உள்தள்.
தொண்டையடைத்தால்
நிதானித்து நீரருந்து.

வீடு வரும்வரை
விரதமிரு.
விரும்பியதையெல்லாம்
ரசித்து ருசித்து சாப்பிட.

யாகத் தீயிலிட்ட ஆகுதிகள்
தேவர்களை அடைவது போல்
உங்களிருவர்க்காகவுமாய்
உண்டு கழிக்கிறோம் நாட்களை...
நாங்கள்.
வயிற்றில் சுமந்த நாள் கடந்தும்
மனசில் சுமக்கிறோம்.

*********************************

பிள்ளைகள் வீட்டிலில்லாத
வெறுமையை
ஊருக்கே பறைசாற்றும்படி
இளநீர் வியாபாரியின்
கிண்கிணி ஒலிக்கிறது
வாசலில் விடாப்பிடியாய்.

கொடுக்க நீயும்
வாங்க நானும் இருக்க
குடிக்க வேண்டியவர்கள்
இங்கில்லையே இப்போது.
போயேன் புண்ணியவானே...
பிரிவின் கொடுந்துன்பம்
எனைத் தீண்டிடாமல்
உன் மணிநாவடக்கி.

*********************************
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2012 (35)
    • ▼  December (3)
      • ஒரு கப் உற்சாகம்
      • இங்குமிருக்கிறார் ...
      • பிரிவின் கொடுந்துன்பம்
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • திண்டுக்கல் தனபாலன்
    திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஒன்று (1)
    5 days ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    தால லாவண்யம்
    6 days ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதி !!!!!
    1 week ago
  • கீதமஞ்சரி
    புத்தகத் திருவிழாவில் 'சாத்தான்'
    2 weeks ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    கனவுக்கடத்தல்.
    3 months ago
  • அழியாச் சுடர்கள்
    நான் என்ன படிக்கிறேன் ஏன்? சி. சு. செல்லப்பா
    3 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • ரிஷபன்
    ராசா
    1 year ago
  • வண்ணதாசன்
    தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
    2 years ago
  • சமவெளி
    அடிக் கிளைப் பூ.
    2 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
    2 years ago
  • CrUcifiXioN
    FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!
    3 years ago
  • Thanjai Kavithai
    4 years ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    5 years ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    5 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    6 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    6 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    6 years ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    6 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    7 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    9 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    10 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    10 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    11 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates