நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >



அனைவருக்குமான கொண்டாட்டமாக ஆங்கிலப் புத்தாண்டு துவக்கம்!

ஆன்மீக அன்பர்களுக்கோ வைகுண்ட ஏகாதசி!

எங்க வீடருகே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெகு உற்சாகமாக இருக்கிறார்.

புல் டோசர் வைத்து நிரவப்பட்ட தெருவின் புதுப் பொலிவு.

புது வண்ணத்தில் கோயில் சுவர்.

தெரு வியாபாரிகள் காலையில் இருந்தே தத்தமது கடை விரிக்க இடங்களை தயார் செய்தபடி இருக்கின்றனர். தின்பண்டங்கள், பெண் குழந்தைகளுக்கான அலங்காரப் பொருட்கள், அவல் பொரி கடலை தள்ளுவண்டிகள், பலவகைக் காய்கறிக் கடைகள், பூசை பொருட்கள், சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள்,   வண்ணக் கோலப் பொடிப் பொதிகள், என ஒரு தற்காலிக அங்காடி உருவாகிக் கொண்டிருக்கின்றது. 

அரை ஆண்டு விடுமுறையில் உடனிருக்கும் அவர்களின் பொடிசுகள் அங்குமிங்கும் ஓட்டம். ஒரு குட்டிப் பையன் பலூன்களை ஊதிக் கட்டிக் கொண்டிருந்த தன் தகப்பனிடம் வேண்டிப் பெற்ற ஒரு மஞ்சள் நிற பலூனை  நீளமானதொரு நூலில் பிணைத்து விளையாடுகிறான். காற்றின் ஓட்டத்தில் பலூனை கீழே விடாமல் தட்டி விளையாடுவதில் இருக்கிறது அவனது கவனம்.

அருகில் ஒரு தள்ளுவண்டியில் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் செய்யத் தேவையான பொருட்கள். காவலுக்கு இன்னொரு பொடியன். இரு பொடியன்களுக்கும் ஆனதொரு இனிய ஒப்பந்தப் படி சிப்ஸ் கடைப் பையனுக்கு  பலூன் விளையாட்டுக்கு வாய்ப்பு வருகிறது . (இவனது அப்பா சிப்ஸ் பொரிக்கத் தொடங்கியதும் தனக்குத் தின்னத் தரும்  சிப்ஸில் பலூன் பையனுக்கும் ஒரு பங்கு)

பலூன் பையன் தள்ளு வண்டியிடம் நின்றாலும் கண்களும் மனசும் தன் பலூன் மேல் தான்.

சிப்ஸ் காரர் பையன் விளையாடும் ஆர்வத்தில் பலூனை ஓங்கித் தட்ட உயர எழும்பிய பலூனை காற்றும் தன்பங்குக்கு அடித்து ஆடுகிறது. பின் தொடர்கிறான் சிறுவன். இரு பொடியன்களையும் திகைப்பூட்டி அருகாமை வேலி மேல் செல்கிறது பலூன். பதறி ஓடும் இருவரையும் ஆசுவாசப் படுத்தும்படி  வேலியினருகில் இருந்த குத்துச் செடியில் தவ்வியது முட்களுக்கு தப்பிய பலூன்.

தாவிப் பிடித்தவன் சொல்கிறான், 'செடி காப்பாத்திடுச்சு டா... செடி காப்பாத்திடுச்சு!'

நம்மையும் காப்பாற்ற இந்த பூமித் தாய் தன் மடி வளர்க்கும் தாவர இனங்கள் பலவற்றைப் பொதித்து  வர இருக்கின்றன இனிவரும் சில பதிவுகள். அவற்றின் தாத்பர்யம் உணவே மருந்தாக. மருந்தே உணவாக.

நலம் பெருக வருக புத்தாண்டே!




Share on:
சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தேன். ஊரென்றால் பிறந்த ஊர். குறியாமங்கலம்.

அரசர்கள் காலத்தில் அந்தணர்களுக்கு தானமளிக்கப்பட்ட வகையில் (சதுர்வேதி மங்கலம்) 'குறிக்கப் படாமலே விடப்பட்ட ஊர்' என்ற பொருள் பொதிந்ததோ பெயர்க்காரணம்.... தெரியவில்லை.

புவனகிரியிலிருந்து ஐயப்பன் கோயிலை வளைந்து நெளிந்து சென்றால் இடைப்படும் பெரிய வாய்க்காலைப் பிடித்துக் கொண்டே செல்ல வேண்டியது தான்.  வலப் பக்கம் வாய்க்கால். இடப் பக்கம் வயல்வெளி. கரை புரளும் நீரோட்டமும் பச்சைப் பசேல் நெல் வயல்களும் பயணத்தை சுகமாக்கும்.
Share on:



ஒவ்வொரு பண்டிகைக்கும் நிவேதனம் செய்து உண்ண வேண்டியவை என்றொரு பட்டியல் நம்மிடம் உண்டு.

இன்றைய கார்த்திகை தீபத் திருவிழாவில் பிரதான இடம் வகிக்கிறது அவல் பொரி. அகல் விளக்குகளும் வண்ணக் கோல மாவுப் பொடிகளும் தெருவெங்கும் கூவிச் செல்லும் சிறு தெருவியாபாரிகள் ஓய்வெடுக்க இரவாகிவிடும். கையிருப்பை விற்குமட்டும் நாலு தெரு சுற்றியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

கடைத்தெருவுக்கு சென்றாலும் நெற்பொரியும், அவல்பொரியும், வெல்லமும், வாழையிலையும், விதவிதமான வடிவங்களில் அகல் விளக்குகளும், வாழைத் தார்களும் தப்படிக்கு ஒன்றாக குவித்து வைக்கப் பட்டு மும்முரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. சரஸ்வதி பூஜையில் முன்னணியில் நின்ற அரிசிப் பொரி இன்று கேட்பாரற்று பட்டாணிக் கடைகளில் ஒரு ஓரமாக ஒதுங்கி இருக்கிறது. வருடமெல்லாம் தேவைப்படும் பூக்காரர்களுக்கும் தனிக் கொண்டாட்டம் தான்.

கெட்டி அவல் பக்குவமாய் தணலில் பொரிக்கப்பட்டு தன்னளவில் பெரிதாகி உள்ளுக்குள் கனமற்றிருப்பது, மனிதன் தன் ஆணவம் கண்மம் மாயை போன்றவற்றை அனுபவ அடுப்பில் அறிவெனும் பெருநெருப்பில் புடமிட்டு மனசும் உடம்பும் கனமற்று இருக்க விழைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது.

அந்தப் பொரியுடன்  வெல்லப்பாகு, தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய், எள் எனப் பலவற்றையும் சேர்த்து சுவைகூட்டியபிறகே இறைவனுக்கு படைக்கிறோம். இத்தனையும் சேர்த்து உருண்டையாக்கி அதன் மதிப்பை கூட்டவும் முடிகிற நமக்கு ஒற்றுமையின் மகிமை புரிய வேண்டும். மனிதனும் சக உயிர்கள் மேல் அன்பு, கருணை, இரக்கம், ஈகை போன்றவற்றைக் கைக் கொண்டு உன்னத நிலையடைய முனைய வேண்டுமல்லவா!

தீப ஒளி பரவட்டும் உலகெங்கும் தீமையழித்து...!
தீப ஒளி பரவட்டும் மனசெங்கும் மேன்மையளித்து...!!


Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2014 (24)
    • ▼  December (3)
      • செடி காப்பாத்திடுச்சு...!!
      • 'விளையும் பயிர்'
      • பொரி
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • அக்ஷ்ய பாத்ரம்
    இயற்கையின் காட்சியும் கோலமும் - வசந்த காலத்தின் வண்ண மலர்கள் - 2 -
    9 hours ago
  • திண்டுக்கல் தனபாலன்
    திருக்குறள் உயிர்மெய்யெழுத்து அதிகாரங்கள் : 16 தவிர (பகுதி 2)
    5 days ago
  • முத்துச்சிதறல்
    எங்கே போகின்றன மருத்துவமனைகள்?
    1 week ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    மாபாவி
    2 months ago
  • கீதமஞ்சரி
    ஒரு தேயிலை மரத்தின் புலம்பல்
    4 months ago
  • அழியாச் சுடர்கள்
    தபால்கார அப்துல்காதர் - எம். எஸ். கல்யாணசுந்தரம்
    7 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    2 years ago
  • ரிஷபன்
    ராசா
    2 years ago
  • வண்ணதாசன்
    தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
    2 years ago
  • சமவெளி
    அடிக் கிளைப் பூ.
    3 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
    3 years ago
  • CrUcifiXioN
    FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!
    4 years ago
  • Thanjai Kavithai
    5 years ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    6 years ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    6 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    6 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    6 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    7 years ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    7 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    7 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    9 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    10 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    11 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    12 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates