வேம்பு:
சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பமரக் காற்று தொற்று நோய்வராமல் தடுக்கும் வல்லமை பெற்றது.
வெயிலுக்கு ஏற்ற ஒன்றல்லவா... பழத்தை வெட்டி உச்சியில் வைத்து தேய்க்க உன்மத்தம் கூட குறையுமென வேடிக்கையாகக் கூறிக் கேட்டதுண்டு. குளிர்ச்சி மற்றும் கண்ணோய்க்கு நிவாரணியாய் கண்ணில் பிழிந்து கொள்பவர்களைக் கண்டதுண்டு. நகசுற்றுக்கு எலுமிச்சை செறுகியதுண்டா... மகா அவஸ்தை அது!
எலுமிச்சையில் 60 வகைகள் உள்ளனவாம். நாம் அறிந்தது நாட்டு எலுமிச்சை மற்றும் கொடி எலுமிச்சை.