நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

நன்றி:
http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html

விதவிதமான வினாயகர் உருவங்கள்
சிரிக்கும் புத்தர் சிலைகள்
குபேர பொம்மைகள்
கொஞ்சும் சதங்கைகள்
வண்ணவண்ண மணித்திரள்கள்
இலைகள், பூக்கள், கனிக்கூட்டங்கள்
உலகின் ஒட்டுமொத்த
போன்சாய் உருவங்களாக
சாவிக்கொத்துகளின் ஆதிக்கங்கள்.

கோர்க்கப்படும் சாவிகளுக்கு
அணைவாய் இருக்க போட்டா போட்டிகள்
ஒவ்வொருவர் கையிருப்பிலும்
அவரவர் ஆளுகைக்கு உட்பட்டவற்றின்
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரணாய்
விதவிதமான பூட்டுகளின் திறப்பான்கள்

ஒரே வளையதிலிருப்பினும்
வெவ்வேறு மதிப்புகள் ஒவ்வொன்றுக்கும்
வீட்டுக்கு ஒரு பூட்டு
ஒவ்வொரு அறைக்கதவுக்கும் ஒவ்வொன்று
வாகனங்களுக்குத் தனித்தனி
சொந்த வியாபாரத் தலங்களுக்கும் அப்படியே
வேலையிடத்தின் பதவிக்குத் தக்கன
வங்கிகளில் வாயில்காப்போனிடம்
வாசல் கதவுக்கென்றால்
மேலதிகாரிக்கு அலுவலக மேசை மற்றும்
பெட்டக அறைத் திறப்பான்...

எல்லா சாவிகளுக்கும் போலிகள் உண்டு
உரிமையாளரிடம் மட்டுமல்ல
கண்ணி வைத்து திருடும் கயவர்களிடமும்.
கணினியுகத்தில் பாஸ்வேர்டுகளும்
அதையுடைக்கும் எத்தர்களும் ...

அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதவராக
அனைவருமிருந்தால் பூட்டுதானெதற்கு?
சாவியுமெதற்கு??

பிரபஞ்சத்தின் ஐந்தறிவு வரை ஜீவராசிகளுக்கு
பூட்டுமில்லை; சாவியுமில்லை; சாவிக்கொத்துகளுமில்லை!
Share on:
நன்றி: http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html


தட்டுசுற்றா உடுத்தியிருக்கும்  செல்லம்மா-உன்
தலைச்சுமையா இருப்பதுவும் என்னம்மா
கோணக் கொண்டைக்காரி
கொள்ளைச் சிரிப்புக்காரி
கைவளை கலகலக்க
கட்டுடல் பளபளக்க
என் கண்ணைப் பறிக்குறடி கண்ணம்மா
உன் காலுக்கு செருப்பா நான் வரட்டுமா?

முதல் குண்டு கூழ்ப்பானை
அதுக்கு மேல மோர்ப்பானை
மூணாவதா நெல்லுச்சோறு
நெத்திலிக் குழம்பு அடுத்ததில
மிச்சத்துல வகையான வெஞ்சனம்
தலைக்கு மேல சுமக்கறது சொல்லிட்டேன்
மனசுக்குள்ள இருக்குறத சொல்லட்டா?

உச்சியில ஏறி உள்ளங்காலைக் கொதிப்பேத்தும்
ஒத்தைக் கண்ணன் சாயட்டும் மேற்கே
உழவும் பறம்படியும் முடிஞ்சிடும் அங்கே
பொழுதடங்க வந்துடுவோம் நாங்க
புடிச்சிருந்தா பொண்ணு கேட்டு
வீடுதேடி வாங்க
இப்ப வழிய விட்டு ஓரமாப் போங்க.
Share on:


விரிந்த தன் இலைகளில் பச்சையம் வற்றி
செம்மைதூக்கலான
மஞ்சள் நிறமடர்ந்த
வாதாம் மரத்தின் திலக வடிவ இலைகள்
தடக் தடக் என
இரவும் பகலும் உதிர்ந்தபடி இருக்க
மரத்தடியில்
கிளைபடர்ந்த தூரம் வரை
மண்மூடிக் கிடக்கும் இலைமெத்தையில்
ஒய்யாரமாய் அமர்ந்து
விருந்தாகிறாய்
என் புகைப்படக் கருவிக்கு.
வெற்றுக் கிளைகளின் இடைவெளியில்
எட்டிப்பார்க்கும் கதிரவனால்
ஒளி பிரகாசிக்கும் உன் வதனம்
இனி துளிர்த்துப் பூத்துக் காய்த்துக் கனியாகும்
வாதாம் பழ நிறத்தை நினைவூட்டி
வனப்புடையதாக்கியது புகைப்படத்தை.




Share on:
பட உதவி: http://venkatnagaraj.blogspot.com/
நூறுநாள் வேலையில் தூர்வாரிய ஏரி இது
கிடக்கும் சொற்ப நீரை
இயந்திரம் கொண்டு உறிஞ்சியே
கருகும் பயிரைக் காப்பாற்றப் பார்க்கிறோம்

அப்பன் பாட்டன் காலத்தில்
முப்போக வெள்ளாமை.
வண்டிமாடுகள் ஓய்ச்சலின்றி
வீட்டுக்கும் வயலுக்குமாக
நடைபோட்டபடி இருந்தன

வாய்க்கால் பாசனமற்று வானமும் கருமியானதில்
பஞ்சம் தலைமீற ஏர்மாடுகள் விற்று உயிர்வாழ்ந்தோம்
அப்புறம் வண்டியிழுக்கும் காளைகளும்விலைபோயின

எஞ்சிய வண்டியிது
தம் பயண அனுபவங்களை
சக்கரங்கள் கடையாணிகளுடன் கதைத்துப் பொழுதோட்டும்.
உளுத்துப் போகும்முன் அடுப்புக்கு விறகாகும்.

கஞ்சிக்கு வழியற்றும்
கெளரவம் பார்த்து
ஏதோவொரு விதையை பூமியில் விசிறிவிட்டு
சாவு வரும் பாதை தேடி
தவிக்கும் உழவன் வாழ்வை
பாழும் தெய்வமும் பார்த்து இரங்கவில்லை
ஆளும் அரசுக்கும் ஆயிரம் சொந்தவேலை. 
Share on:
பட உதவி: வெங்கட் நாகராஜ் 
உடைக்குப் பொருத்தமாய்
வளையல், நகப்பூச்சு, கொண்டையூசி
எல்லாம் அழகுதான்.
உன் வெள்ளைப் பல்லிலும்
பஞ்சு முட்டாய் தின்று படிந்த
பக்கி ரோஸ் கலர் பிரமாதமென்றேன்
நாணிக் கவிழ்கிறாய் தோழியின் தோளில்.  


Share on:


எங்க பாட்டி சொல்வாங்க, (ஆமாப்பா... நமக்கும் வயசாகிப் போச்சு)‘அஞ்சும் மூணும் சரியா இருந்தா அறியாப் பிள்ளையும் கறி சமைக்கும்'.

சொலவடைகளும் பழமொழிகளும் சரளமாக பேச்சிடையே சொல்வது அவரது பழக்கம். பலவற்றுக்கு விளக்கம் கிடைக்கும்.

‘அப்படீன்னா?' அறியாப் பருவக் கேள்வி.

‘போடறத போட்டு செய்யற விதமா செஞ்சா தான் சமையல் மணக்கும்; ருசிக்கும்.'

‘அது சரி. அந்த அஞ்சும் மூணும் என்னென்ன?'
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • அகவெளிப் பயணத்தின் வழித்துணை
             ‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம்  ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ▼  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ▼  February (6)
      • ஆறாம் அறிவின் பாதகம்
      • சிருங்காரி
      • பழமாகிறாய் நீ ... மரமாகிறேன் நான்!
      • பேசி மாளாப் பொழுது
      • முகிலில் மறைந்த நிலா
      • அஞ்சும் மூணும் ...
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

போக...வர...

  • அக்ஷ்ய பாத்ரம்
    அந்த நீல மாபிள் கண்களும் அவலச் சுவையும் நம் தத்துவப் பரிஹாரங்களும்....
    4 days ago
  • முத்துச்சிதறல்
    எண்ணங்கள்!!!
    1 week ago
  • திண்டுக்கல் தனபாலன்
    வெங்கோலனும் மூடர் கூடமும்...
    3 weeks ago
  • கீதமஞ்சரி
    தோட்டத்துக் கவிதைகள்
    4 weeks ago
  • ரிஷபன்
    2 months ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    காட்டுக்குள்ளே
    4 months ago
  • வண்ணதாசன்
    தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
    4 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    5 months ago
  • அழியாச் சுடர்கள்
    மாபெருங் காவியம் - மௌனி
    8 months ago
  • சமவெளி
    அடிக் கிளைப் பூ.
    10 months ago
  • VAI. GOPALAKRISHNAN
    22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
    11 months ago
  • CrUcifiXioN
    FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!
    1 year ago
  • Thanjai Kavithai
    2 years ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    3 years ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    3 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    4 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    4 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    4 years ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    4 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    5 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    7 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    8 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    8 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    9 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates