நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.
வகையினம் >
வகையினம் >
கலாசாரப் பொருளாதாரச் சீரழிவுகள் சாமான்யன் வாழ்வை அசாதாரணமாக்கி, சிரமத்துக்குள்ளாக்கி விட்ட காலம் இது. சாதியம், வறுமை, பொருளாதாரப் பாகுபாடு போன்றவை ஆவேசம் கிளப்பியபடி... கைக்கும் வாய்க்கும் எட்டாமல் கழுத்தை நெரிக்கும் வாழ்க்கைச் சுமையில் கவிதையாவது கழுதையாவது...
பனித்துளி தாங்கிய பூக்களைப் போல் காதல் தாங்கிய மனம் பேரழகாகிறது. அதனால்தானோ கவியெழுதப் பழகிய பெரும்பாலோர் தத்தமது அனுபவக் காதலை தொகுப்பாக்கத் தவறுவது இல்லை. அவரவர் கைப்பக்குவத்துக்குப் பிரத்யேக ருசி இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நமது இன்பங்களின் சாவியாகவும், சில துன்பங்களின் பூட்டாகவும் காதலே காரணமாவது வியப்புக்குரியது.
பிரெஞ்ச் அரசின் இலக்கியத்துக்கான ‘ஷெவாலியே' விருதை 1998-ம் ஆண்டு பெற்ற சிறந்த மலையாளப் படைப்பாளி எம்.முகுந்தன். இவரது தேசிய சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘தெய்வத்திண்டெ விக்ருதிகள்' நாவலின் தமிழாக்கமே இப்புதினம்.
கண்ணை அழுத்தும்
காலைத் தூக்கம்
கிளம்பும் பொழுதை
நெருக்கடி ஆக்க
சுடுசொல் கிளப்பும்
கண்ணில் மழையை...
பலநாள் பயின்றும்
பந்தயக் கோப்பையை
தோற்றவன் கண்களில்
கோடை மழை...
வென்றவன் கண்களில்
மகிழ்வெல்லாம் மழையாய்.
நெருங்கிய உறவோ
இனிய நட்போ
மரணம் தழுவிய தகவல் தெரிய
மழைபோல் கண்ணீர்
மனசை ஆற்றும்.
பிரமச்சரியம்
இல்லறம் தாண்டி
வானப் பிரஸ்தன் ஆகும் ஆவலில்
ஆன்மீகத் தேடலில் அமிழும் மனசில்
எல்லா உயிரிலும் இறை உண்டென்ற
உண்மைத் தூவாணம்
நம்மை மென்மையாய்
நனைக்கும் தருணம்
வெளியே இல்லை மழை...
மனவெளியில் நல்ல மழை!
காலைத் தூக்கம்
கிளம்பும் பொழுதை
நெருக்கடி ஆக்க
சுடுசொல் கிளப்பும்
கண்ணில் மழையை...
பலநாள் பயின்றும்
பந்தயக் கோப்பையை
தோற்றவன் கண்களில்
கோடை மழை...
வென்றவன் கண்களில்
மகிழ்வெல்லாம் மழையாய்.
நெருங்கிய உறவோ
இனிய நட்போ
மரணம் தழுவிய தகவல் தெரிய
மழைபோல் கண்ணீர்
மனசை ஆற்றும்.
பிரமச்சரியம்
இல்லறம் தாண்டி
வானப் பிரஸ்தன் ஆகும் ஆவலில்
ஆன்மீகத் தேடலில் அமிழும் மனசில்
எல்லா உயிரிலும் இறை உண்டென்ற
உண்மைத் தூவாணம்
நம்மை மென்மையாய்
நனைக்கும் தருணம்
வெளியே இல்லை மழை...
மனவெளியில் நல்ல மழை!
எப்போதும் போல் எழுந்ததும் அடுக்களைப் பிரவேசம் எனக்கு. மாமரக் காற்று முகம் வருடியது சாளரம் வழியே... ஊறிக்கிடந்த ‘பத்துப்' பாத்திரங்களை ‘ஒருகை' (இரண்டு கைகளாலும் தான்) பார்த்தேன். தலைக்கு மேல் பலகையில் கவிழ்ந்து கிடந்தன உபயோகம் குறைந்த பித்தளை அண்டா குண்டான்கள். தோட்டத்து அணில்களின் தற்காலிகக் குடியிருப்புகள் அவை. மகப்பேறுக்குத் தாய்வீடு போல.
நானற்ற பொழுதுகளில் சர்வ சுதந்திரம் அவற்றுக்கு. நானிருக்கும் சமயங்களில் வாத்தியார் உள்ள வகுப்பறையாய் கப்சிப். தினம் குறிப்பிட்ட நேரங்களில் தனக்கும் குட்டிக்குமாய் உணவு தேடிக் கொள்ள தாய் அணில் வெளிச் செல்லும். கீச்சிட்டுக் குரல் கொடுக்கவும், மெதுவாக ஏறி இறங்கவும் கற்றுத் தேர்ந்தது நாளடைவில் குட்டி அணில். அம்மாக்காரி இல்லாத போது, பைய இறங்கி வந்து, என்னுடன் கதைத்துக் கொண்டும், ஒளிந்து விளையாடிக் கொண்டும் இருக்கத் தொடங்கியது. பாதுகாப்பான இடைவெளியில் எங்கள் நட்பு தொடர்ந்தது.
இன்று தாமதமாக எழுந்ததில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தேன். ஐந்தரைக்கு காபி+காலை சிற்றுண்டி கட்டிக் கொடுத்து இவரை வேலைக்கனுப்பணும். ஆறரை மணிக்குள் மகன் கிளம்பியாக வேண்டும். எட்டுக்கெல்லாம் மகளும் கிளம்பி விடுவாள். இவர்களிருவருக்கும் மதிய சாப்பாடும் சேர்த்து செய்யணும். இடைவெளியில் நானும் மாமியாரும் டீயும் குடித்து விடுவோம்.
இவரும் மகனும் அடுத்தடுத்துக் கிளம்பிப் போயாச்சு. வழியனுப்பிக் கதவு மூடி, மகளின் மதிய சாப்பாட்டிற்கான மீத வேலைகளுக்காக மறுபடி நுழைந்தேன் அடுக்களையினுள்.
கீச் கீச் என்றது அண்டாவின் மேல் ஏறி நின்று. அம்மாக்காரியும் போயாச்சு போல. ‘வா வா... எழுந்தாச்சா' என்றவாறு, மகளுக்குப் பிடித்தமான காயைக் கழுவி நறுக்கத் துவங்கினேன். ‘கீச் கீச்...' சப்தம் மீண்டும் கேட்க, அனிச்சையாகக் கண்கள் அண்டாவைத் துழாவியது. அணிலைக் காணோம்... சரிதான்... ஆட்டம் தொடங்கியாச்சு... சுற்றுமுற்றும் பார்க்கவும், என்னைத் தவிக்க விடாமல் அலமாரி மளிகை டப்பாக்களிடையே மூக்கை நீட்டி மறுபடி கத்தியது. ‘இறங்கிட்டியா...' கேட்டபடி குக்கரைத் திறந்து சாதத்தை பாத்திரம் மாற்றி ஆறவிட்டேன். பொரியல் இறக்கும் நேரம், மறுபடி சத்தம். இப்போது ஃப்ரிஜ் மேல் நின்று ஆட்டம். ஓட்டத்துக்கும் ஆட்டத்துக்கும் ஈடு கொடுத்துச் சுழன்றாடும் அதன் வாலின் வசீகரம், ‘வேலையெல்லாம் கிடக்கட்டும்... என்னை எடுத்துக் கொஞ்சமாட்டாயா' என்பது போலொரு அழகு.
ஹ்ம்ம்...எட்டுமணிக்காரியிடம் யார் மாட்டி விழிப்பது... கவனத்தை வேலையில் செலுத்தினேன். சிறிது நேரம் சென்று எங்கிருக்கிறதென நோட்டம் விட்டேன். அருகாமை சுவரில் மாட்டியிருந்த மாமனார் படச் சட்டத்தில் தொங்கிய சந்தன மாலையில் இலாவகமாக தொற்றிக்கொண்டு அவரிடம் ஏதேதோ சம்பாஷிக்கத் தொடங்கியிருந்தது.
‘நான் ரெடிம்மா... சாப்பாடும், தலை சீவலும் தான் பாக்கி...' என்றவாறு உள்நுழைந்த மகள், மின் விசிறியைச் சுழல விட்டு சாப்பாட்டு மேசையிலமர்ந்தாள்.
பாய்ந்து மின் விசிறி இயக்கத்தை நிறுத்தியபடி சொன்னேன். ‘குட்டி அணில் கீழே இறங்கியிருக்கு... மாட்டிடப் போகுது
'‘இவ்வளவு நேரம் அது கூடத் தான் பேசிட்டிருந்தியா...?! குருவி, அணில், பாத்திர பண்டம்ன்னு விசித்திரமான நட்பு வட்டம்மா உன்னுது...' எழுந்து மறுபடி மின் விசிறியைப் போட்டாள்.
‘ஐய்யோ, இன்னைக்கு மட்டும் ஹாலில் போய் சாப்பிடேன்...' மாமனாருடன் குலாவிக்கொண்டிருந்த அதைத் திரும்பிப் பார்த்தபடியே கெஞ்சினேன்.
‘இன்னைக்குதான்... இதனால்தான்னு அதுக்கு விதியிருந்தா நம்மால மாத்திடவா முடியும்...' இயல்பாக எடுத்துப் பரிமாறிக் கொண்டு சாப்பிடத் துவங்கினாள்.
சம்பந்தமில்லாத எந்த உயிரும் துச்சமாகி விடுகிறது மனித மனதுக்கு!
அவள் சாப்பிடுவதற்குள், மதிய சாப்பாட்டுப் பையை தயார் செய்தேன். எட்டாக ஐந்து நிமிடங்களிருந்தன. அதற்குள் தலை வாரி விடலாம்... இது எங்கிருக்கிறதென ஆராய்ந்தேன். போட்டோவுக்குப் பின் நுழைந்து நகர்ந்து கொண்டிருந்தது.
நீண்ட பின்னலை மடக்கிக் கட்டி ரிப்பனில் பூப் போடும் போது அடுக்களைப் பக்கம் ஓடியது மூஞ்சூறு. எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் இடம்பெறாத ஏராளமான உறுப்பினர்களுள் ஒன்று.
(மற்றதெல்லாம் தெரியணுமா உங்களுக்கு... பிள்ளையார் எறும்பு, சிவப்பெறும்பு, கறுப்பெறும்பு, முசுடு வகையறா, பல்லி, கரப்பான் பூச்சி, பாச்சை, சமயங்களில் பூரான், மழைக்காலங்களில் மரவட்டை, அட்டை, கம்பளிப் பூச்சி, வண்டு வகையறா ஒரு ஐம்பது... மூச்சு வாங்குது, நிறுத்திக்கிறேன். கதையைப் பார்ப்போம்.)
மூஞ்சூறு ஓடியதும் மாற்றி மாற்றி கீச் மூச் சப்தம். சரி... குட்டிப் பையன் பயந்துட்டான் மூஞ்சுறுவைப் பாத்துன்னு நெனைச்சுக்கிறேன்.
ஷீவை மாட்டி, சைக்கிளை எடுத்து வெளியே வெச்சாச்சு. ‘லன்ச் பேக்... லன்ச் பேக்...' பறக்கிறாள் மகள். ‘தோ... தோ... ‘ஓடினேன் உள்ளே. அடுக்களை சாளரம் வழியே தாவியோடுகிறது சனியன் பிடிச்ச பூனை.
( எப்போதாவது வருமென்பதும், எனக்கு சுத்தமாக ஆகாதென்பதும் உறுப்பினர் லிஸ்டில் சேர்க்காத காரணம்)
அந்த அவசரத்திலும் ச்சூ... ச்சூ என விரட்டுகிறேன். சுழன்று வளைந்து அதனுடன் ஓடும் வால் வெறுப்பேற்றுகிறது.
தெரு வரை சென்று மகளை வழியனுப்பி விட்டுக் கதவு மூடி, அப்பாடா...இனி அணில் குட்டியுடன் கதைபேசிக் களைப்பாறலாமென ஆயாசத்தோடு உள்நுழைந்து, ‘அப்புறம்... சொல்லு...' என்றவாறு பாத்திரங்களை ஒழித்துப் போ...
என்ன... பதிலில்லை...
‘ட்ரையாம் பக்...' (அதன் செல்லப் பெயர்) ‘ட்ரையாம் பக்'....
திருட்டுப் பூனை... மூஞ்சுறுவுக்கு குறி வைத்து...
திகைப்பும் துக்கமும் சுனாமியாய் எழுந்து என்னை அழுத்துகிறது. நினைவலைகள் ஈழப் போரில் பலியான ஒரு பாவமும் அறியாத செஞ்சோலைக் குழந்தைகளை மீடெடுக்கின்றன.
கைமீறிப் போன பலத்துக்கும் தயாராய் விழியோரம் கட்டி நிற்கும் துளி ஈரம், மிச்ச மீதி மனிதத்தின் சிறு அடையாளமாய்...
"வேறென்ன கிழிக்க முடியும்?" அறச்சீற்றம் எழும்பி எனது கையாலாகாதத்தனத்தின் மேல் 'பொத்' என விழுந்து மடிகிறது.
நானற்ற பொழுதுகளில் சர்வ சுதந்திரம் அவற்றுக்கு. நானிருக்கும் சமயங்களில் வாத்தியார் உள்ள வகுப்பறையாய் கப்சிப். தினம் குறிப்பிட்ட நேரங்களில் தனக்கும் குட்டிக்குமாய் உணவு தேடிக் கொள்ள தாய் அணில் வெளிச் செல்லும். கீச்சிட்டுக் குரல் கொடுக்கவும், மெதுவாக ஏறி இறங்கவும் கற்றுத் தேர்ந்தது நாளடைவில் குட்டி அணில். அம்மாக்காரி இல்லாத போது, பைய இறங்கி வந்து, என்னுடன் கதைத்துக் கொண்டும், ஒளிந்து விளையாடிக் கொண்டும் இருக்கத் தொடங்கியது. பாதுகாப்பான இடைவெளியில் எங்கள் நட்பு தொடர்ந்தது.
இன்று தாமதமாக எழுந்ததில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தேன். ஐந்தரைக்கு காபி+காலை சிற்றுண்டி கட்டிக் கொடுத்து இவரை வேலைக்கனுப்பணும். ஆறரை மணிக்குள் மகன் கிளம்பியாக வேண்டும். எட்டுக்கெல்லாம் மகளும் கிளம்பி விடுவாள். இவர்களிருவருக்கும் மதிய சாப்பாடும் சேர்த்து செய்யணும். இடைவெளியில் நானும் மாமியாரும் டீயும் குடித்து விடுவோம்.
இவரும் மகனும் அடுத்தடுத்துக் கிளம்பிப் போயாச்சு. வழியனுப்பிக் கதவு மூடி, மகளின் மதிய சாப்பாட்டிற்கான மீத வேலைகளுக்காக மறுபடி நுழைந்தேன் அடுக்களையினுள்.
கீச் கீச் என்றது அண்டாவின் மேல் ஏறி நின்று. அம்மாக்காரியும் போயாச்சு போல. ‘வா வா... எழுந்தாச்சா' என்றவாறு, மகளுக்குப் பிடித்தமான காயைக் கழுவி நறுக்கத் துவங்கினேன். ‘கீச் கீச்...' சப்தம் மீண்டும் கேட்க, அனிச்சையாகக் கண்கள் அண்டாவைத் துழாவியது. அணிலைக் காணோம்... சரிதான்... ஆட்டம் தொடங்கியாச்சு... சுற்றுமுற்றும் பார்க்கவும், என்னைத் தவிக்க விடாமல் அலமாரி மளிகை டப்பாக்களிடையே மூக்கை நீட்டி மறுபடி கத்தியது. ‘இறங்கிட்டியா...' கேட்டபடி குக்கரைத் திறந்து சாதத்தை பாத்திரம் மாற்றி ஆறவிட்டேன். பொரியல் இறக்கும் நேரம், மறுபடி சத்தம். இப்போது ஃப்ரிஜ் மேல் நின்று ஆட்டம். ஓட்டத்துக்கும் ஆட்டத்துக்கும் ஈடு கொடுத்துச் சுழன்றாடும் அதன் வாலின் வசீகரம், ‘வேலையெல்லாம் கிடக்கட்டும்... என்னை எடுத்துக் கொஞ்சமாட்டாயா' என்பது போலொரு அழகு.
ஹ்ம்ம்...எட்டுமணிக்காரியிடம் யார் மாட்டி விழிப்பது... கவனத்தை வேலையில் செலுத்தினேன். சிறிது நேரம் சென்று எங்கிருக்கிறதென நோட்டம் விட்டேன். அருகாமை சுவரில் மாட்டியிருந்த மாமனார் படச் சட்டத்தில் தொங்கிய சந்தன மாலையில் இலாவகமாக தொற்றிக்கொண்டு அவரிடம் ஏதேதோ சம்பாஷிக்கத் தொடங்கியிருந்தது.
‘நான் ரெடிம்மா... சாப்பாடும், தலை சீவலும் தான் பாக்கி...' என்றவாறு உள்நுழைந்த மகள், மின் விசிறியைச் சுழல விட்டு சாப்பாட்டு மேசையிலமர்ந்தாள்.
பாய்ந்து மின் விசிறி இயக்கத்தை நிறுத்தியபடி சொன்னேன். ‘குட்டி அணில் கீழே இறங்கியிருக்கு... மாட்டிடப் போகுது
'‘இவ்வளவு நேரம் அது கூடத் தான் பேசிட்டிருந்தியா...?! குருவி, அணில், பாத்திர பண்டம்ன்னு விசித்திரமான நட்பு வட்டம்மா உன்னுது...' எழுந்து மறுபடி மின் விசிறியைப் போட்டாள்.
‘ஐய்யோ, இன்னைக்கு மட்டும் ஹாலில் போய் சாப்பிடேன்...' மாமனாருடன் குலாவிக்கொண்டிருந்த அதைத் திரும்பிப் பார்த்தபடியே கெஞ்சினேன்.
‘இன்னைக்குதான்... இதனால்தான்னு அதுக்கு விதியிருந்தா நம்மால மாத்திடவா முடியும்...' இயல்பாக எடுத்துப் பரிமாறிக் கொண்டு சாப்பிடத் துவங்கினாள்.
சம்பந்தமில்லாத எந்த உயிரும் துச்சமாகி விடுகிறது மனித மனதுக்கு!
அவள் சாப்பிடுவதற்குள், மதிய சாப்பாட்டுப் பையை தயார் செய்தேன். எட்டாக ஐந்து நிமிடங்களிருந்தன. அதற்குள் தலை வாரி விடலாம்... இது எங்கிருக்கிறதென ஆராய்ந்தேன். போட்டோவுக்குப் பின் நுழைந்து நகர்ந்து கொண்டிருந்தது.
நீண்ட பின்னலை மடக்கிக் கட்டி ரிப்பனில் பூப் போடும் போது அடுக்களைப் பக்கம் ஓடியது மூஞ்சூறு. எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் இடம்பெறாத ஏராளமான உறுப்பினர்களுள் ஒன்று.
(மற்றதெல்லாம் தெரியணுமா உங்களுக்கு... பிள்ளையார் எறும்பு, சிவப்பெறும்பு, கறுப்பெறும்பு, முசுடு வகையறா, பல்லி, கரப்பான் பூச்சி, பாச்சை, சமயங்களில் பூரான், மழைக்காலங்களில் மரவட்டை, அட்டை, கம்பளிப் பூச்சி, வண்டு வகையறா ஒரு ஐம்பது... மூச்சு வாங்குது, நிறுத்திக்கிறேன். கதையைப் பார்ப்போம்.)
மூஞ்சூறு ஓடியதும் மாற்றி மாற்றி கீச் மூச் சப்தம். சரி... குட்டிப் பையன் பயந்துட்டான் மூஞ்சுறுவைப் பாத்துன்னு நெனைச்சுக்கிறேன்.
ஷீவை மாட்டி, சைக்கிளை எடுத்து வெளியே வெச்சாச்சு. ‘லன்ச் பேக்... லன்ச் பேக்...' பறக்கிறாள் மகள். ‘தோ... தோ... ‘ஓடினேன் உள்ளே. அடுக்களை சாளரம் வழியே தாவியோடுகிறது சனியன் பிடிச்ச பூனை.
( எப்போதாவது வருமென்பதும், எனக்கு சுத்தமாக ஆகாதென்பதும் உறுப்பினர் லிஸ்டில் சேர்க்காத காரணம்)
அந்த அவசரத்திலும் ச்சூ... ச்சூ என விரட்டுகிறேன். சுழன்று வளைந்து அதனுடன் ஓடும் வால் வெறுப்பேற்றுகிறது.
தெரு வரை சென்று மகளை வழியனுப்பி விட்டுக் கதவு மூடி, அப்பாடா...இனி அணில் குட்டியுடன் கதைபேசிக் களைப்பாறலாமென ஆயாசத்தோடு உள்நுழைந்து, ‘அப்புறம்... சொல்லு...' என்றவாறு பாத்திரங்களை ஒழித்துப் போ...
என்ன... பதிலில்லை...
‘ட்ரையாம் பக்...' (அதன் செல்லப் பெயர்) ‘ட்ரையாம் பக்'....
திருட்டுப் பூனை... மூஞ்சுறுவுக்கு குறி வைத்து...
திகைப்பும் துக்கமும் சுனாமியாய் எழுந்து என்னை அழுத்துகிறது. நினைவலைகள் ஈழப் போரில் பலியான ஒரு பாவமும் அறியாத செஞ்சோலைக் குழந்தைகளை மீடெடுக்கின்றன.
கைமீறிப் போன பலத்துக்கும் தயாராய் விழியோரம் கட்டி நிற்கும் துளி ஈரம், மிச்ச மீதி மனிதத்தின் சிறு அடையாளமாய்...
"வேறென்ன கிழிக்க முடியும்?" அறச்சீற்றம் எழும்பி எனது கையாலாகாதத்தனத்தின் மேல் 'பொத்' என விழுந்து மடிகிறது.
-
கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
-
உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.

நிலாமகள்
View My Complete ProfileFollowers

Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
-
வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
-
நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
-
மலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
-
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
-
குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
-
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2: htt...
-
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
-
'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...
-
வேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
Blog Archive
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்7 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?7 years ago
-
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.11 years ago
-
கலர் சட்டை: 112 years ago
-
நூற்பயன், நன்றி12 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?13 years ago
-