நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.
வகையினம் >
வகையினம் >

அழுகிய தக்காளிகள், காய்கறித் தோல்கள்,
உரித்தெரிந்த தேங்காய் நார்கள்,
விட்டெறிந்த முற்றல்கள், சொத்தைகள்,
வியாபாரிகளின் பசிதின்ற
பஜ்ஜி, போண்டா மடித்த காகிதக் குப்பைகள்
உடைந்து கிடக்கும் பழமடுக்கிய குழித் தட்டுகள்
ஏலம் போன வாழைப்பழங்களின் வெற்றுத் தார்கள்
கிழங்குகளை போர்த்தி வந்த இலைதழைக் குவியல்கள்
சணல் பிய்ந்து துண்டான கோணிகள்
கரும்புச் சக்கைகள்
கருவாட்டு மிச்சங்கள்
நொறுங்கிக் கிடந்த ஓட்டை வளையல்கள்
நகரின் ஒரு வாரத் தேவைக்கு
விலைபோன காய்கறிகள்
குளிர் சாதன பெட்டிகளில்
சவ்வுத் தாள்களுள் சத்தமின்றிப் பதுங்க
சந்தை முடிந்த மறுநாள்
மிச்சம்மீதி எச்சங்களை
கூட்டிப் பெருக்கிக் கொளுத்துகிற
துப்புறவாளனின் பசியாற்றுவதென்னவோ
பழங்கஞ்சியும் உப்பு நாரத்தையும் தான்!
உரித்தெரிந்த தேங்காய் நார்கள்,
விட்டெறிந்த முற்றல்கள், சொத்தைகள்,
வியாபாரிகளின் பசிதின்ற
பஜ்ஜி, போண்டா மடித்த காகிதக் குப்பைகள்
உடைந்து கிடக்கும் பழமடுக்கிய குழித் தட்டுகள்
ஏலம் போன வாழைப்பழங்களின் வெற்றுத் தார்கள்
கிழங்குகளை போர்த்தி வந்த இலைதழைக் குவியல்கள்
சணல் பிய்ந்து துண்டான கோணிகள்
கரும்புச் சக்கைகள்
கருவாட்டு மிச்சங்கள்
நொறுங்கிக் கிடந்த ஓட்டை வளையல்கள்
நகரின் ஒரு வாரத் தேவைக்கு
விலைபோன காய்கறிகள்
குளிர் சாதன பெட்டிகளில்
சவ்வுத் தாள்களுள் சத்தமின்றிப் பதுங்க
சந்தை முடிந்த மறுநாள்
மிச்சம்மீதி எச்சங்களை
கூட்டிப் பெருக்கிக் கொளுத்துகிற
துப்புறவாளனின் பசியாற்றுவதென்னவோ
பழங்கஞ்சியும் உப்பு நாரத்தையும் தான்!

எழுந்தவுடன் பெருக்கி
ஈரத்துணியால் தரை துடைத்து
தெருவடைத்துக் கோலமிட்டு
துவக்கி வைத்தாள் அம்மா காலைப் பொழுதை
தேய்த்து தேய்த்து துடைத்த
தன் காலணிகள் பளபளப்பை
தள்ளி நின்று ரசித்திருந்தார்
இராணுவத்திலிருந்து மீண்டிருந்த அப்பா.
காற்றடித்து எண்ணெய் போட்டு
முன்னும் பின்னுமாக மாய்ந்து மாய்ந்து
துடைத்து வைத்த வாகனம்
காத்திருக்கு வெளிக்கிளம்ப
இவ்வீட்டு வாண்டுப் பையனோடு
கல்லூரிப் பேருந்து
தெருமுனை திரும்பும் வரை
கண்ணாடியே கதியாக
நெளிந்து வளைந்து சீவிக் கலைத்து
ஒப்பனைகள் பலசெய்து
கற்பனையில் மிதந்திருப்பான் பெரியவன்
எட்டாச்சு ஒன்பதாச்சு எல்லாரும் போயாச்சு
பத்தோடும் அழுக்கோடும்
அம்மா மல்லுக்கட்டி நிற்க
திறந்தவுடன் பறந்துவிடும்
எத்தனிப்பில்
சிறகுகளைக் கோதிக்கொண்டிருக்கின்றன
கூண்டுக் கதவருகில் குருவிகள்...
ஈரத்துணியால் தரை துடைத்து
தெருவடைத்துக் கோலமிட்டு
துவக்கி வைத்தாள் அம்மா காலைப் பொழுதை
தேய்த்து தேய்த்து துடைத்த
தன் காலணிகள் பளபளப்பை
தள்ளி நின்று ரசித்திருந்தார்
இராணுவத்திலிருந்து மீண்டிருந்த அப்பா.
காற்றடித்து எண்ணெய் போட்டு
முன்னும் பின்னுமாக மாய்ந்து மாய்ந்து
துடைத்து வைத்த வாகனம்
காத்திருக்கு வெளிக்கிளம்ப
இவ்வீட்டு வாண்டுப் பையனோடு
கல்லூரிப் பேருந்து
தெருமுனை திரும்பும் வரை
கண்ணாடியே கதியாக
நெளிந்து வளைந்து சீவிக் கலைத்து
ஒப்பனைகள் பலசெய்து
கற்பனையில் மிதந்திருப்பான் பெரியவன்
எட்டாச்சு ஒன்பதாச்சு எல்லாரும் போயாச்சு
பத்தோடும் அழுக்கோடும்
அம்மா மல்லுக்கட்டி நிற்க
திறந்தவுடன் பறந்துவிடும்
எத்தனிப்பில்
சிறகுகளைக் கோதிக்கொண்டிருக்கின்றன
கூண்டுக் கதவருகில் குருவிகள்...
-
கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
-
உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.

நிலாமகள்
View My Complete ProfileFollowers

Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
-
வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
-
நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
-
மலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
-
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
-
குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
-
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2: htt...
-
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
-
'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...
-
வேம்பு: சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்7 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?7 years ago
-
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.11 years ago
-
கலர் சட்டை: 112 years ago
-
நூற்பயன், நன்றி12 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?13 years ago
-