ஜென் குழந்தைகள்


அரங்கை நிறைத்தது அமைதி
ஜென் தத்துவம் பற்றிய தெளிவுரை
உனக்குள் ஒடுங்கு
மனமற்ற மனம் கொள்
ஒருகை ஓசை உணர்
வெளியேறும் போது
புரிந்தாற்போலொரு உவகை
வீட்டுள் நுழைந்ததும்
வழக்கம் போல
குழந்தைகளுக்குள் பூசல்
ஒருவருக்கொருவர்
சைகையில் சாடினர்
அடங்கு! என
கிளர்ந்த எரிச்சல் தணிந்தது என்னுள்
ஜென் குழந்தைகள்!
3 கருத்துரைகள்
  1. அட.. அருமை.. கவிதையில் உங்கள் யுத்தி எனக்குப் பிடிக்கிறது..

    ReplyDelete
  2. சிரம் தாழ்ந்த வணக்கம்... பாராட்டுக்கு மகிழ்வும், நன்றியும்...

    ReplyDelete
  3. அடடா! மழலைப் பள்ளியாகிவிட்டதா மனம்? அழகு!

    ReplyDelete