மாரி, கொல்லையில் செழித்து வளர்ந்திருந்த முருங்கை மரத்திலிருந்து அலக்கு கழியால் பறிப்பதை கீழே மண்ணில் விழாமல் இலாவகமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் அவன் மனைவி காசாம்பு.
கைப்பிடியளவு இனுக்குகள் சேரச் சேர கத்தையாய் கட்டி விரித்திருக்கும் ஈர சாக்குத் துண்டில் அடுக்குவதும் அவளே. வயதின் முதிர்வு இருவரையும் சீக்கிரமே சோர்வாக்கியது.
“எத்தனை கட்டு தேறுது புள்ள?” தலைக்கு மேல் தூக்கித் தூக்கி துழாவிய அலக்கு தந்த தோள்வலியோடு, கழியை கீழிறக்கி தரையில் அண்டை கொடுத்து தோளில் சாய்த்துக் கொண்டே மாரி கேட்கிறான்.
“இத்தோட பதினெட்டு ஆவுது... போதாது...?” காசாம்புவுக்கும் உட்கார்ந்தால் தேவலை என்ற அசதி ஒலிக்கிறது குரலில்.
“போதும் போ... பதினெட்டஞ்சி தொண்ணூறு... பேரத்துல பத்திருபது கொறஞ்சாலும் பாதகமில்ல. சுள்ளான் மண்டியில கடன் சொல்லி வாங்கியாந்த காய்கறிங்க இருவது கிலோயிருக்கு. இதுங்களை வித்து முதலாக்கி வூடு வந்து சேர்ந்தாலே போதுமாச்சே. போய் எனக்கு ஏதாச்சும் நீராகாரமிருந்தா எடுத்து வெய். அந்தக் கண்ணியோரமா துளுத்துக் கெடக்குற வல்லாரையையும், மொடக்கத்தானையும் ஆய்ஞ்சினு வாரேன். சுண்டக்காய் பறிச்சு வெச்சியா?”
கைப்பிடியளவு இனுக்குகள் சேரச் சேர கத்தையாய் கட்டி விரித்திருக்கும் ஈர சாக்குத் துண்டில் அடுக்குவதும் அவளே. வயதின் முதிர்வு இருவரையும் சீக்கிரமே சோர்வாக்கியது.
“எத்தனை கட்டு தேறுது புள்ள?” தலைக்கு மேல் தூக்கித் தூக்கி துழாவிய அலக்கு தந்த தோள்வலியோடு, கழியை கீழிறக்கி தரையில் அண்டை கொடுத்து தோளில் சாய்த்துக் கொண்டே மாரி கேட்கிறான்.
“இத்தோட பதினெட்டு ஆவுது... போதாது...?” காசாம்புவுக்கும் உட்கார்ந்தால் தேவலை என்ற அசதி ஒலிக்கிறது குரலில்.
“போதும் போ... பதினெட்டஞ்சி தொண்ணூறு... பேரத்துல பத்திருபது கொறஞ்சாலும் பாதகமில்ல. சுள்ளான் மண்டியில கடன் சொல்லி வாங்கியாந்த காய்கறிங்க இருவது கிலோயிருக்கு. இதுங்களை வித்து முதலாக்கி வூடு வந்து சேர்ந்தாலே போதுமாச்சே. போய் எனக்கு ஏதாச்சும் நீராகாரமிருந்தா எடுத்து வெய். அந்தக் கண்ணியோரமா துளுத்துக் கெடக்குற வல்லாரையையும், மொடக்கத்தானையும் ஆய்ஞ்சினு வாரேன். சுண்டக்காய் பறிச்சு வெச்சியா?”