கல்வி உளவியல்

(மயிலாடுதுறை-திருவாரூர் பேருந்தில் காலை 7.30 மணிக்குஒரு ஆசிரியர், மாணவரிடையேயான உரையாடல்)          இந்தக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற ஒரு மாணவன் விடுமுறைக்கு தன் உறவினர் வீடு சென்று திரும்புகிறான் தன் சொந்த ஊருக்கு. ஏனெனில் அன்றுதான் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாள்....

தாய்மையின் த‌விப்பு...

அதிகாலைப் பொழுதொன்றில் அய‌ர்ந்து தூங்குகிறாள் தாய்ப்பால் ம‌ற‌க்க‌த் த‌வித்த‌ழுத‌ ம‌க‌ள் ... அவ‌ள் கைக‌ளுக்குள் த‌லையணை உருவில் நான்! ம‌ல்லிகை, வேப்பிலை, மாத்திரை தாண்டியும்க‌ன‌த்துக் கிட‌ந்த‌தென் மார்பு! புழ‌க்க‌டையில் ம‌டிக‌ன‌ம் தாளாது கால்மாற்றி நின்று'அம்மா'வென‌ க‌ல‌ங்கிக் க‌ரைந்த‌ர‌ற்றும் செவ‌லைப் ப‌சு... வைக்கோல் க‌ன்றால் ம‌டிசுர‌ந்த‌ ப‌சும்பால் நுரைத்து...

படைத்தவனுக்கில்லை பாரபட்சம்

கோயில் கருவறையில் தேய்த்தும் குறையாதஎண்ணெய் பிசுக்குபளபளக்க... ஏழைக் கருவறையில்வெளிவந்த பலருக்குவறண்டு சிக்கேறிய கேசம். பால், தயிர், பன்னீர், இளநீருடன்தேன், பழங்கள், திரவியப் பொடியுடனும்தடபுடலாய் அபிசேக ஆராதனைகள்கோயில் சிலைகளுக்கு... வாசலுக்கு வெளியேவருவோரிடம் கையேந்திபிரசாதத்தில் உயிர் வளர்க்கும்பல பிறவிகள். கைகூப்பி தொழுவோரிடம்கணக்கற்ற பிரார்த்தனைகள்இதைத் தந்தால் இதைத் தருவேனென்றபலப்பல ஒப்பந்தங்கள்...