4 கருத்துரைகள்
  1. 23.12.2011 மின்னஞ்சலில் திரு. ரிஷபன் சொன்னது...

    இங்கப் பாரேன்மா. அந்தப் பாட்டி தன் மூணு வயசுப் பேத்தியை இழுத்துப் பக்கத்தில் நிறுத்திகிட்டு, “இவ முழுசா தெரியறாப்புல எடு ஆத்தா... மொத மொத இப்பத்தான் போட்டோ புடிச்சுக்கறா”ன்னுச்சு. ப்ச்... க்ளிக் பண்ற நேரத்துல பாட்டி மடியில கவுந்துட்டா பேத்தி. பாரு... முதுகுதான் தெரியுது.
    இங்கப் பாரு... இரண்டாவது வரிசையில வாய் பொத்திச் சிரிக்கறது போல முகத்தைக் கைக்குள்ள ஒளிச்சிட்டாங்க ஒருத்தங்க.
    நடுவுல இடது மூலை பாரேன். தன் தூக்கின பல்வரிசை தெரியக்கூடாதுன்னே ஒருபக்கமா திரும்பி நிக்கறாங்க ஒரு அக்கா.
    பின் வரிசையில கடைசியில கம்பீரமா கைகட்டி தைரியமா பார்க்கறாங்க ஒரு அம்மா. சிரிக்காட்டியும் அவங்க கண்ணுங்க பிரகாசமாயிருக்கறது அழகாத் தான் இருக்கு”.

    காவிரி ஜலம் போல ஓடிண்டே இருந்த அழகு கதை.

    ReplyDelete
  2. 23.12.2011 மின்னஞ்சலில் திரு.திண்டுக்கல் தனபாலன் சொன்னது...

    அருமை! வாழ்த்துக்கள். இரண்டு பதிவாக போடாமல் இருந்ததற்கு நன்றி. பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  3. வெங்கட் நாகராஜ் venkatnagaraj@gmail.com via blogger.bounces.google.com
    23/12/2011

    to me
    வெங்கட் நாகராஜ் has left a new comment on your post "சிரித்தால் அழகு!":

    அப்பப்பா.... அடித்துப் போட்டுவிடும் படி ஒரு எழுத்து உங்களுடையது நிலாமகள்.... படிக்க ஆரம்பித்ததிலிருந்து கண் கொட்டாமல் படித்து முடித்தேன்.....

    ஒவ்வொரு கதாபாத்திரமும் உண்மைகளை உரைக்கிற விதம்....

    நல்ல கதை... பகிர்வுக்கு நன்றி சகோ....

    ReplyDelete
  4. கீதா
    23/12/2011

    to me
    கீதா has left a new comment on your post "சிரித்தால் அழகு!":

    இயல்பான நடையில் இயல்பான மனிதர்களின் இயல்பான மனத்தை வெளிப்படுத்திய அழகுக் கதை. ஒரு புகைப்படத்தின் மூலம் கிராம மக்களின் வெள்ளந்தி மனசை வெளிச்சம் போட்டுக் காட்டியவிதம் அழகோ அழகு. கொஞ்சம் கொஞ்சமாய் அம்மாவின் அந்நாளைய இறுக்கம் கரைக்கும் மகளின் இதமான வார்த்தைகள் வெகு யதார்த்தம். மனம் நிறைந்த பாராட்டுகள் நிலாமகள்.

    ReplyDelete