நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

*மிகப் பெரியதாக வாய் திறக்கும் உயிரினம் நீர் யானை தான் என்கிறேன் நான். ஒப்புக் கொள்கிறீர்களா?

        இல்லீங்க! தவளை மீன் (Frog Fish) என்றொரு வகை உண்டு. தன் வாயைப் பன்னிரண்டு மடங்கு அளவுக்குப் பெரிதாக்கிக் கொள்ளும். உயிரினங்களில் உலக ரெக்கார்ட் என்று சொல்லலாம்! வாயை மூட அது எடுத்துக்கொள்ளும் நேரமும் ஆச்சர்யமானது. ஒரு வினாடியில் ஆறாயிரத்தில் ஒரு பகுதி! சின்னக் கூட்டமாக மீன்கள் போகும் போது  கண் மூடித் திறப்பதற்குள் பல மீன்கள்  தவளை மீன் வாய்க்குள் காணாமல் போய், மற்ற மீன்கள் 'எங்கேடா அத்தனை பேரும்?!' என்று திகைக்கும். அதே போல், 'காமெர்சன்' என்று அழைக்கப் படும் இன்னொரு தவளை மீன், தன்னைவிட இருமடங்கு பெரிய நீளமான இரையை விழுங்கக் கூடியது. அதற்கேற்றார் போல் அதன் உடல் எலாஸ்டிக் போல் நீண்டு கொள்ளும்! நாம் சாப்பிட சாப்பிட வயிறும் பெரிதாகிக் கொண்டே போனால் எப்படி இருக்கும்! இதையெல்லாம் விட பெரியதாக வாயைத் திறந்து விழுங்கும் உயிரினம் ஒன்று உண்டு.
        அது அரசியல்வாதி!

** டார்ச் லைட்டின் உண்மையான பெயர் சர்ச் லைட் என்பது சரியா ? தவறா ?

      எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். இரண்டும் ஒன்றே. 'டார்ச்'சை விட 'சர்ச் லைட்'டுக்கு  வீச்சு அதிகம். டார்ச் லைட் வட்டச் செயலாளர் என்றால், சர்ச் லைட் பெரிசு. எம்.எல்.ஏ. மாதிரி! (லைட் ஹவுஸ் தான் சி.எம்.! தொண்டர்- ட்யுப் லைட்!)


நன்றி:
    'ஹாய் மதன்' தொகுதி- 2,
    கிழக்குப் பதிப்பகம்,
    முதல் பதிப்பு: நவ.2006.
 
Share on:
"சின்னசாமியின் கதை" (புதினம்)

ஆசிரியர்: வளவ.துரையன்
வெளியீடு: அனன்யா, தஞ்சாவூர்
பக்கம்: 234
விலை: ரூ.200/-

      சாமானிய மனிதனொருவனின் கதையிலும் அசாதாரண செயல்களும், எதிர்பாரா திருப்பங்களும், வாழ்வியல் கோட்பாடுகளை விளக்கும் தத்துவ நெறிகளும் பரிபூரண அன்பும் நட்பும் உறவும் அமைந்திட சாத்தியங்கள் உண்டென்பதை ‘சின்னசாமியின் கதை' காட்டுகிறது.

       நம் ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு சிறந்த சுயசரிதை எழுதுமளவில் இருப்பினும்,
Share on:
தோலுரித்துத் தொங்கும்
ஆடுகளை கோழிகளை
கண்ணெடுத்துப் பார்க்க அஞ்சி
அந்தக் கடைகளின்
தெருவையே தவிர்த்துச் செல்லும்
கால்களும்

கடிக்காத எறும்பை
நசுக்க விரும்பாத
கருணையும் இருந்துமென்ன...

திறந்திருந்த உடற்பரப்பில்
சுருக்கெனக் கடித்து-தன்
விடமேற்றிய சிறுகுளவி
பிடிபடாமல் பறந்தது
கடுகடுப்பே மனசிலும்...

வலி மரக்க பற்பசைதடவி
மனம் மறக்க வலை மேய்ந்தேன்
கணினியில்...

சிற்றசைவில் கண் திரும்ப
சுவர்ப்பல்லி வாயில் சிறுகுளவி
அதக்கி அதக்கி
விழுங்கி
சப்பு கொட்டி நாசுழற்றி
திருப்தியான பல்லியை

குரூரக் குதூகலிப்பு எழ
பார்க்கும் என்னுள்
மெல்ல மெல்ல
வளர்ந்தது பல்லியின் வால்.

Share on:
Health Is Wealth: ஆழ் மனதில் அற்புத சக்தி.
Share on:
ஒரு ஊரில் ஒரு அம்மாவாம். ரெண்டாவது மூணாவது படிக்கிற தன் மகனையும் மகளையும் தினசரி பள்ளிக்கு கிளம்பி செல்லுமுன் பிரார்த்தனை செய்யச் சொல்வாங்க .

மகன் சொல்வான்...

அம்மா நல்லாயிருக்கணும்  அப்பா நல்லா இருக்கணும். அக்கா நல்லா இருக்கணும். தாத்தா நல்லா இருக்கணும். ஆத்தா நல்லா இருக்கணும். எல்லாரும் நல்லா இருக்கணும். நானும் நல்லா இருக்கணும். நல்ல புத்தியை கொடு. உடம்பு பலம் கொடு....

அவன் முடிக்கும் வரை கண் மூடி மெளனமாக நிற்கும் மகள் வாய் திறப்பாள் ...
"நானும்... எனக்கும் !"

இன்றைய சிறப்பு தினத்துக்கு பதிவு போட நேரமற்று ஊர்ப் பயணத்தில் பறக்கும் நானும் சொல்கிறேன்...
"வாங்க... நாம எல்லோரும் 'தஞ்சை கவிதை' வலைப்பூவுக்கு செல்வோம்.

 http://krishnapriyakavithai.blogspot.in/

Share on:

உயிர்ச் சிறைக் கூடமாய்
மனித உடம்பிருக்க
கருவறை வெளிபோந்தும்
மற்றுமொரு சிறைவாசம்
சந்தர்ப்ப சூழலால்...

வெகு தாமதமாகவேனும்
கட்டறுத்தது காலக் கத்திரி
வயிறு குளிர மனம் நெகிழ
மறுபிரசவித்தாய் உன் மகனை.

வாழிய!




Share on:

இணையுடனான
காதல் கனிமொழியா?

துணையற்ற முதுமையின்
ஏக்கப் புலம்பலா?

பகிர்ந்து மாளாத
நட்பின் குதூகலமா?

பேசி முடியாத
பங்காளிச் சண்டையா?
Share on:
நூல் பெயர்:எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை
ஆசிரியர்:- ப. தியாகு (80123 30511)
வெளியீடு: வெயில்நதி (99411 16068)
பக்கங்கள்: 80
விலை: 70/-

        “பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச் செயல்பாடு” என அணிந்துரையில் இருவரியில் அடக்குகிறார் கவிதைவெளியில் நெடுந்தூரம் பயணித்திருக்கும் திரு.சமயவேல்.
        நிலா உடைய, சூரியன் சிதறியதாம். என்னடா இது அதிசயம் என்று பார்த்தால், நிலா வடிவ கோழிமுட்டையொன்று கைதவறி விழ, உள்ளிருந்த மஞ்சள் கரு சிதறி கவிச்சை வாடையோடு சூரியன் தகிப்பது போல் தெரிந்திருக்கிறது தியாகுவின் கவிமனசுக்கு.
         மரக்கிளைகளில் பச்சைப் பாம்பு போலவும் சிறுகொடிபோலவும் தோற்றப்பிழையாக ‘நீ' எனக்கு யாதுமாகி நின்றாய் என்பதாக மற்றொரு கவிதை. ‘நீ' மனம் கவர் காதலியாகவுமிருக்கலாம்; மனதுக்கினிய மழலையாகவுமிருக்கலாம். வரிகளில் வழியும் கவித்துவம் வாசிப்பவர் மனசை சிலுசிலுக்கச் செய்கிறதென்பதை மறுக்க முடியுமா?!
        கூண்டுப் பறவை ஆரூடம் மட்டுமா சொல்கிறது?
Share on:


           “எம்மாம் நேரம் குந்தி கெடந்தாலும் இந்தாளு மனசு கசியப் போறதில்ல” ஜாங்கிரி உட்கார்ந்திருந்த மணல் திட்டிலிருந்து எட்டி காரி உமிழ்ந்தாள். சின்ன வயசில் கூட்டாளிகளால் வைத்த பட்டப் பெயர் இது. கொண்டவன் வீட்டிலும் நிலைத்து, இப்போது பஞ்சம் பிழைக்க வந்த இடத்திலும் முதலாளியிலிருந்து சக தொழிலாளி வரை ஜானகி என்று கூப்பிடுவார் யாருமின்றி ஜாங்கிரியாகவே இருப்பவள்.
                இத்தனைக்கும் காரணமான அவள் தலைமுடி எண்ணெய் காணாமல் வறண்டு சுருண்டு மேலேறியிருந்தது. எடுத்து ஒரு ரப்பர்பேண்டில் அடக்கி வைத்திருந்தாலும் அந்த அத்துவானத்தின் அந்திக்காற்றில் திமிறிப் பறந்து கொண்டிருக்க, முடிக்கற்றைகளை அடிக்கொரு தரம் இடதுகையால் இழுத்து இழுத்துக் காதோரம் செருகி  மாளவில்லை அவளுக்கு.
                அவள் காலருகே பரட்டை தலையும் ஒழுகும் மூக்குமாய் நிமிர்ந்து பார்த்து சிரிக்கும் ஒன்றரை வயது மகள் செல்லியை இழுத்து முந்தானையை உதறி மூக்கை நோகாமல் துடைத்து விட்டாள். அவளிடமிருந்து திமிறி இறங்கிய அது மண்டியிட்டு ‘விசுக் விசுக்' என நகர்ந்து அடுத்ததாக குவித்திருந்த கருங்கல் ஜல்லி முட்டில் சட்டமாக உட்கார்ந்து கொண்டது. ரெண்டு நாளாகப் பெய்த மழையில் தேங்கிக் கிடந்த ரோட்டுப் பள்ளத்தில் ஒவ்வொரு ஜல்லியாக விட்டெறிந்து விளையாடத் துவங்கியது.
                அரை கிலோ மீட்டர் தூரத்தில் வந்த தொழிற்பேட்டையால் இந்த இடத்துக்கு பவிசு வந்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்த அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் பெரும்பாலும் கட்டிக் காசுபார்த்துக் கைதேர்ந்த அவள் முதலாளி, அடுத்த  கட்டடத்துக்கான அஸ்திவாரம் போடுவது பற்றி மேஸ்திரிகளிடம் விவாதித்துக் கொண்டிருந்தார்.
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ▼  2020 (1)
    • ▼  March (1)
      • வானில் சில தாமரைகள்
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • அக்ஷ்ய பாத்ரம்
    சரஸ்வதி பூசையும் குருபரனின் பக்தித் தமிழும்
    6 days ago
  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (4) மேப்பிள்
    1 month ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    சீட்டுக்கவி
    2 months ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    7 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    10 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    6 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    8 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    9 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    9 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    10 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates