நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

    கடந்த  வாரம் நடந்தேறிய நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புதுப் புத்தகங்களைப் புரட்டினேன்.(ஆமாமாம்... சிபி நேற்றிரவு 11.30 பேருந்தில் கிளம்பியாச்சு.)
     பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாய் ச. மாடசாமி என்பவரெழுதிய ‘பூமரப் பெண்' என்ற நாற்பத்தெட்டு பக்க (பத்தே ரூபாய் தானுங்க) நூலினை வாசித்த வியப்பு தங்களுடனான பகிர்தலைத் துரிதப்படுத்தியது. மார்ச்-2007-ல் முதல் பதிப்பும், 2009-ல் இரண்டாம் பதிப்பும் பெற்ற இந்நூல் நான் கண்டடைய இவ்வளவு காலமாகியிருக்கிறது!
      முன்னுரை, அணிந்துரை... பதிப்புரை என ஒன்றுமேயின்றி தடாலெனத் துவங்கி விடுகிற சிறப்பென்னவெனில், உள்ளடக்கம் அதை எல்லாம் தாண்டிய காத்திரமாய் இருப்பது!
      மற்றொன்று, நூலாசிரியர் கதைகளைத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் நம்மோடு அவ்வப்போது எதிரிலமர்ந்து கலந்துரையாடவும், விவாதிக்கவும், சிந்தனையைத் தூண்டவுமாயிருக்கிறார். அறிவொளி இயக்கத்தில் இயங்கிய அனுபவத்தில் எழுதப்பட்ட நூல்.நன்றாகவேயிருக்கிறது இந்த உத்தி.   

Share on:
       கடல் அலைகள் கரை வந்து மோதி மோதிச் செல்வது போல் பேசவும், கேட்கவும் பலப்பல விஷயங்கள் நினைவுகளிலும் உணர்வுகளிலும் வந்து வந்து மோதிச் செல்கின்றன மனதுள்.       
        வாரத்தில் மூன்று நாட்களின் பத்து நிமிட நலவிசாரிப்புகள் பாலைவனத்து ஒட்டகத் திமிலின் தண்ணீர் சேகரிப்பு போலல்லவா இருந்தது!

         போன வாரமே முற்றிய மாங்காய்களைப் பார்த்து வாங்கி பழுக்க வைத்தாயிற்று.

          நான்கு நாட்களுக்கு முன்பே முற்றிய பலாக்காய் பறித்து காம்பை வெட்டி வேப்பங்குச்சி செறுகியாச்சு. (விரைவில் பழுக்கவும் சுவை அதிகரிக்கவும்)

         இரண்டு நாட்களுக்கு முன் சந்தை சென்றவர், காய்கறிகளை விடவும் அதிக அளவில் பிடித்தமான பழங்களை வாங்கிப் பைநிரப்பி வந்தாச்சு.

          அனைவரும் தூங்கியதை உறுதி செய்து கொண்டு சுவரேறிக் குதிக்கும் திருடனின் அவசரத்தோடு இருக்கப் போகிறது வரும் இந்த நாட்களில் எனது வலையுலா.

           காய்ந்தமாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தாற்போல் விருப்பத்துக்குரியவர்களின் பதிவுகளைப் படித்துவிடுவேன்... கருத்துரைக்கத் தவறினாலும்!

         ஆக்கிரமிப்பை அகற்றும் அவசரத்தோடு அவனறையில் ஏறிக் கொண்ட எங்கள் உடமைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும் இன்று.

         இன்னும் ஐந்தாறு நாட்கள் எங்கள் வீட்டின் அசையும் அசையாப் பொருட்கள் (நாங்கள் உட்பட) அவனது ஆளுமைக்கு உட்பட்டவர்களாவோம்.

       ஆம்.... சிபி வருகிறான் இன்றிரவு... அவன் சார்ந்த கல்வி நிறுவனம் பெரிய மனதோடு ஹோம்சிக் லீவ் தந்திருக்கிறது ஐந்து நாட்களுக்கு...!

          பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமானதாய்.

          தோட்டத்து மரங்கள்  மழைக்குக் காத்திருப்பதைப் போல் நாங்களும்....
Share on:
மலைவேம்பு (melia dubia)

       மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட் டோர்,வீட்டு மரசாமான்கள்,லாரி பாடி பில்டிங், தீக்குச்சி , பேப்பர்
உட்பட பல பொருட்கள் தயாரிக்க மலைவேம்பு பயன்படுகிறது.

சிறப்புகள்:

        குறைந்த வருடங்களில் மற்ர மரவகைகளை காட்டிலும் அதிக வருமானம்.ஒரு ஏக்கருக்கு ஏழு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் வருமானம்.குறைந்த அளவு நீர்வளம் கொண்ட பகுதிகளிலும் நன்கு
வளரும்.வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களுக்கும் ஏற்றது.குறிப்பிட்ட உயரம் வரை (20-25 அடி)90 சதவீதம் பக்க கிளைகள் வராது.மிக நேராக வளரும் தன்மை கொண்டது. அதிக மரக்கழிவு
இல்லை.பராமரிக்க குறைந்த ஆட்களே தேவை.மலைவேம்பு நடவு செய்த 5-ஆண்டுகள் வரை ஊடுபயிர் செய்யலாம்.இலை ஆடுகளுக்கு நல்ல தீவனமாகப் பயன்படுகிறது.விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ளதால் தேவையும்,விலையும் எப்போதும் உண்டு.கரும்பு,நிலக்கடலை,மிளகாய்,மரவள்ளி,மஞ்சள்,உளுந்து,
பாக்கு மற்றும் தென்னையிலும் ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

        இஸ்ரேலிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகக்குறைந்த நீர்வளம் உள்ள பகுதிகளிலும் மலைவேம்பு வளர்க்கலாம்.ஒரு ஏக்கரில்
கரும்பு,தென்னை,வாழை பயிரிடத்தேவைப்படும் நீர்வளத்தை கொணடு 5-ஏக்கரில் மலைவேம்பு வளர்க்கலாம்.

மருத்துவப் பயன்:
        பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த  பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.( மலைவேம்பு இலை இரு கைப்பிடி, இரு டம்ளர் நீர் கொதிக்க வைத்து ஒருடம்ளராக குறுக்கிக் குடிக்கவும் )

நன்றி: Google Search .
               
Share on:

வேம்பு:
 சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என  அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பமரக் காற்று தொற்று நோய்வராமல் தடுக்கும் வல்லமை பெற்றது.
Share on:
       நிறைவேறாக் காதலுக்கு மதுவை நாடும் பழக்கம் சுமார் 47 ஆண்டுகளாக எழுதாச் சட்டமாகியதன் மூலகாரணமாக, சரத் சந்திரரின் ‘தேவதாஸ்' நாவலுமிருக்கிறது. ஒரு கதாபாத்திரம், காதல் தோல்வியின் சோர்வுக்குக் குறியீடாகவே மாறிய விந்தை!
       ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து வறுமையால் படிப்பைத் தொடரமுடியாமல் கைவிட்ட சரத் சந்திரர், ஏழைகள் படும் துன்பங்களையும், சந்திக்கும் போராட்டங்களையும் உலகுக்கு எடுத்துரைப்பதே எழுத வந்ததற்கான காரணமென்கிறார். பக்கிம் சந்திரர், தாகூர் போன்றவர்கள் சமூக மாற்றம், சுதந்திரப் போராட்டம், மெய்தேடல் என தீவிரத் தளங்களில் எழுதிய போது, இவர் பாமரர்களும் படிக்கும்படியான எளிமையான, சுவையான, பெண்களை மையமாகக் கொண்ட குடும்ப நாவல்களை எழுதி, தாகூரை விடவும் புகழ்பெற்றவர். நகர மயமாதலின் ஆரம்பகால மாற்றங்களை இவரது எழுத்தில் உணரலாம். இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் திரைப்படமாக்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை அடைந்துள்ளது ‘தேவதாஸ்'!
Share on:
வெயிலுக்கு ஏற்ற ஒன்றல்லவா... பழத்தை வெட்டி உச்சியில் வைத்து தேய்க்க உன்மத்தம் கூட குறையுமென வேடிக்கையாகக் கூறிக் கேட்டதுண்டு. குளிர்ச்சி மற்றும் கண்ணோய்க்கு நிவாரணியாய் கண்ணில் பிழிந்து கொள்பவர்களைக் கண்டதுண்டு. நகசுற்றுக்கு எலுமிச்சை செறுகியதுண்டா... மகா அவஸ்தை அது!

எலுமிச்சையில் 60 வகைகள் உள்ளனவாம். நாம் அறிந்தது நாட்டு எலுமிச்சை மற்றும் கொடி எலுமிச்சை.
Share on:
நீளும் வாக்குவாதத்தின்
உச்சாணியில் நிற்கும்
உக்கிரம் தணிய
அருமருந்தாய்
இருக்குமொரு
வார்த்தையுமற்ற
மெளன வெளிநடப்பு .

சூழல்களால் கிளறப்பட்ட
அடிமனசின் ஆற்றாமைகள்
மேலெழும்பி நம்மை
அமிழ்த்தும்போது
வாயடைத்து
மனப்புழுக்கம் கூட்டுவிக்கும்
மெளனம் மட்டும்
பெருநோயாய் ...
Share on:
‘தெய்வத்திண்டே கண்ணு' -என்.பி.முகமது

      குழந்தைமை நிறைந்த கேள்விகளும், அவற்றுக்கான தேடல்களுமாய் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் அஹம்மது. எரியும் சருகுகளுக்கும், உதிரும் இலைகளுக்கும், அறுபடும் கோழிகளுக்கும், இரயில் கடக்கும் போது கடபட, தடபட என்று அழும் பாலத்துக்கும் இரக்கப்பட்டு உருகி நிற்பவன்.
      கோழிக்கோட்டிலிருந்து பரப்பனங்காடியிலிருக்கும் உறவினர் வீட்டில் வந்து தங்குகிறான். முன்பொரு முறை ஆயிசா மாமி இறந்தபோது அவனிங்கு வந்ததுண்டு. அச்சமயம் நல்ல மனநிலையிலிருந்த, தனக்கு மிட்டாயெல்லாம் வாங்கித் தந்து தோளில் தூக்கி வந்த, மொய்யம்மதாலி அண்ணன் ஆயிசா மாமி மகன். இப்போது சங்கிலியால் கட்டப்பட்டு நெடும்புரையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். பூதங்கள் விரும்பிய தோட்டத்துக் காளானைப் பறித்து உண்டு புத்தி பேதலித்ததால் அவனிப்படி ஆனதாக  தன்னொத்த விளையாட்டுத் தோழி, மரியம் மாமி மகள் உம்மு மூலம் அறிகிறான்.
Share on:
     நேற்றிர‌வு  எங்களிட‌ம் விடைபெற்று த‌ன் த‌ந்தையுட‌ன் பேருந்து நிலைய‌ம் சென்றான் எங்க‌ள் அருமை ம‌க‌ன். இன்றிர‌வு  ஐநூறு கிலோமீட்ட‌ர் தாண்டிய‌ ப‌ள்ளி விடுதியில் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌டுத்துற‌ங்கிக் கொண்டிருக்கிறான். இராம‌னின் தாய் கோச‌லையின் ஏக்க‌த்தையும் த‌விப்பையும் எல்லாத் தாயாரும் அனுப‌விக்க‌ நேர்கிற‌து அவ்வ‌ப்போது. என‌க்கான‌ முறை இப்போது.
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ▼  2020 (1)
    • ▼  March (1)
      • வானில் சில தாமரைகள்
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • கீதமஞ்சரி
    அப்பா!
    5 weeks ago
  • CrUcifiXioN
    Vintage collections
    1 month ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    நியுசிலாந்து - 1 - புற்கள், மரங்கள், மாடுகள், மலைகள் மற்றும் சில மனிதர்கள்....
    1 month ago
  • முத்துச்சிதறல்
    துபாயில் ஏவுகணைகள்!!
    3 months ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    சீட்டுக்கவி
    11 months ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    1 year ago
  • ஹரணி பக்கங்கள்.......
    2 years ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    6 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    6 years ago
  • Thanjai Kavithai
    8 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    8 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    8 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    9 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    9 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    9 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    9 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    10 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    10 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    10 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    10 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    12 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    13 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    14 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    15 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates