நான் இன்று ஒரு சுடுமண் இருக்காஞ் சட்டி விளக்கு.
நான் இன்று காய்த்துப் போன உள்ளங்கையுடன் ஒரு ஆதி மனுஷி 
திரித்த இலவம் பஞ்சுத் திரி.
திரித்த இலவம் பஞ்சுத் திரி.
நான் இன்று துயரிடைக் கசிந்த ஆனந்தத்தின் தைலம்.
நான் இன்று யாரின் அகல் தீயோ ஏற்றிய சுடர்.
நான் இன்று எல்லாச் சூறையையும் எதிர்கொண்ட ஒளித் தொடர்.
நான் இன்றைய கருக்கலில் எதிர்ப்படும் இன்னொரு திரியிடம் 
என்னை ஒப்படைத்து விடுவேன்.
******
என் தந்தை தச்சனில்லை.
எழுதுகிறவன்.
எனக்கு மரச்சிலுவை அல்ல
காகிதச் சிலுவை.
உயிர்த்தெழுதல் மூன்றாம் நாளல்ல
அன்றாடம்.
எழுதுகிறவன்.
எனக்கு மரச்சிலுவை அல்ல
காகிதச் சிலுவை.
உயிர்த்தெழுதல் மூன்றாம் நாளல்ல
அன்றாடம்.
 - வண்ணதாசன் 
எனக்குத் தெரியும்...
இபபோதும்  எங்கோ, யாரோ 
வண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!
எம் ஆதர்ச எழுத்தாசானை  வாழ்த்துவதும் வணங்குவதும் இத்தருணப் பெருமிதம்! 
அவர் விருதுகள்  சூழ நிற்கும் இந்த டிசம்பர் உச்சி குளிர்விக்கிறது எம்மை! 

 
											
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
