நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

   
   
 ‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம்  ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர் திரு. ம. செந்தமிழன்.

            முதல் பக்கத்தின் ஒற்றை வரியான ‘தேடுதல் என்பதே எதையோ தொலைக்கும் முயற்சி தான்' என்றது வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்டப் போதுமானதாகிறது.

‘தேவையானவை தேடி வரும்'
‘விருப்பம் எனும் மாமருந்து'
‘சிறுத்தைகளும் மான்களும்'
‘துன்பங்களிலிருந்து விடுதலை'
‘வேட்டல்'
‘நம்பிக்கையைக் காட்டிலும் விருப்பம் மேலானது'
‘விதி'
போன்ற உப தலைப்புகளில் நூலாசிரியர் நம்முள் பாய்ச்சும் சிந்தனை வீச்சுகள் காலப்போக்கில் துளிர்த்துவிட்ட  பல மூடத்தனங்களை வேரறுப்பதாய் இருக்கின்றன.

            இறுதியாக ‘சமூகத்தின் விருப்பத்திற்காக பேராற்றலால் அனுப்பப் பட்டவர்' என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா பற்றிய கட்டுரை வேட்டலின் சாத்தியத்தையும் வேட்டலின் அற்புதத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

               பானை சோற்றுக்கு ஒரு சோறெடுத்துப் பதம் பார்ப்பதுண்டு. (குக்கர் வராத காலத்தில்) கூடுதல் தண்ணீர், கூடுதல் வெப்பத்தில் குழைய வேக வைக்கப் படும் பொங்கலுக்கு அது வேண்டியதில்லை. அவ்வப்போது பக்குவமாக கிளறுவது மட்டுமே அவசியம். நம்மை ஒரு கிளறு கிளறியிருக்கிறார் செந்தமிழன் தன் ‘வேட்டல்' மூலம்.

            ஆசைக்கும் விருப்பத்துக்குமான வேறுபாடு; உணர்வுக்கும் உணர்ச்சிக்குமான வேறுபாடு; பகுத்தறிவுக்கும் மெய்யறிவுக்குமான வேறுபாடு; நம்பிக்கைக்கும் விருப்பத்துக்குமான வேறுபாடு போன்றவற்றைத் தெளிவாக விளக்கும்  இந்நூல் நமது அகவொளிப் பயணத்தின் ஒரு ஊன்றுகோல்.

நூலில் நான் அடிக்கோடிட்டு வைத்துக் கொண்டவற்றில் கொஞ்சம் உங்களோடு பகிர்கிறேன்.

உங்கள் பிரத்யேக வாசிப்பில் மேலதிக மனத் தெளிவை ஏற்படுத்த விழையும் வல்லமை நிறைந்தது இந்தப் புத்தகம்.
Share on:


ஒரு வாரமாக அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர் யாரொருவருக்கும் நேரிலோ தொலைபேசியிலோ பேச்சின் துவக்கம் ‘பொங்கல் வேலை தொடங்கியாச்சா.. முடிச்சாச்சா?' பெண்களின் பேச்சுதான் இப்படி.

ஆண்கள் எப்போதும் போல் தான். ஒருசிலர் வீட்டுப் பெண்கள் கேட்கும் உதவிகளை சுத்தம் செய்யும் வேலையில் செய்யலாம். பணியாள் நியமித்தால் ஊதியம் தரலாம். பொறுப்பும் கவலையும் பெண்களைச் சார்ந்ததே.

வீட்டு வாசல்களில் வெயில் மினுங்க பளபளவென கழுவிக் கவிழ்க்கப் பட்டிருக்கும் வருடத்தின் ஓரிரு சமயங்களில் உபயோகிக்கும் அல்லது வருடக் கணக்கில் உபயோகிக்காத பித்தளை வெங்கல எவர்சில்வர் பாத்திரங்கள்.

வாசலில் அப்போதைக்கப்போது பழைய பேப்பர் வாங்குபவர்களின் சன்னமான குரல்கள். பழைய வீட்டு உபயோகப் பொருட்கள், பழைய துணிகள் இன்ன பிற பழையன எல்லாம் வாங்கிக் கொள்ள ‘குட்டி யானை' வண்டியில் ஒலிபெருக்கியில் பதிவு செய்யப் பட்ட குரலில் கூவலும் தினசரி கேட்கின்றது.

சுமார் 20 தட்டுகளில் ஒரு அறைச் சுவர்கள் முழுதும் கடந்த 20 ஆண்டுகளில்
Share on:


அனைவருக்குமான கொண்டாட்டமாக ஆங்கிலப் புத்தாண்டு துவக்கம்!

ஆன்மீக அன்பர்களுக்கோ வைகுண்ட ஏகாதசி!

எங்க வீடருகே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெகு உற்சாகமாக இருக்கிறார்.

புல் டோசர் வைத்து நிரவப்பட்ட தெருவின் புதுப் பொலிவு.

புது வண்ணத்தில் கோயில் சுவர்.

தெரு வியாபாரிகள் காலையில் இருந்தே தத்தமது கடை விரிக்க இடங்களை தயார் செய்தபடி இருக்கின்றனர். தின்பண்டங்கள், பெண் குழந்தைகளுக்கான அலங்காரப் பொருட்கள், அவல் பொரி கடலை தள்ளுவண்டிகள், பலவகைக் காய்கறிக் கடைகள், பூசை பொருட்கள், சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள்,   வண்ணக் கோலப் பொடிப் பொதிகள், என ஒரு தற்காலிக அங்காடி உருவாகிக் கொண்டிருக்கின்றது. 

அரை ஆண்டு விடுமுறையில் உடனிருக்கும் அவர்களின் பொடிசுகள் அங்குமிங்கும் ஓட்டம். ஒரு குட்டிப் பையன் பலூன்களை ஊதிக் கட்டிக் கொண்டிருந்த தன் தகப்பனிடம் வேண்டிப் பெற்ற ஒரு மஞ்சள் நிற பலூனை  நீளமானதொரு நூலில் பிணைத்து விளையாடுகிறான். காற்றின் ஓட்டத்தில் பலூனை கீழே விடாமல் தட்டி விளையாடுவதில் இருக்கிறது அவனது கவனம்.

அருகில் ஒரு தள்ளுவண்டியில் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் செய்யத் தேவையான பொருட்கள். காவலுக்கு இன்னொரு பொடியன். இரு பொடியன்களுக்கும் ஆனதொரு இனிய ஒப்பந்தப் படி சிப்ஸ் கடைப் பையனுக்கு  பலூன் விளையாட்டுக்கு வாய்ப்பு வருகிறது . (இவனது அப்பா சிப்ஸ் பொரிக்கத் தொடங்கியதும் தனக்குத் தின்னத் தரும்  சிப்ஸில் பலூன் பையனுக்கும் ஒரு பங்கு)

பலூன் பையன் தள்ளு வண்டியிடம் நின்றாலும் கண்களும் மனசும் தன் பலூன் மேல் தான்.

சிப்ஸ் காரர் பையன் விளையாடும் ஆர்வத்தில் பலூனை ஓங்கித் தட்ட உயர எழும்பிய பலூனை காற்றும் தன்பங்குக்கு அடித்து ஆடுகிறது. பின் தொடர்கிறான் சிறுவன். இரு பொடியன்களையும் திகைப்பூட்டி அருகாமை வேலி மேல் செல்கிறது பலூன். பதறி ஓடும் இருவரையும் ஆசுவாசப் படுத்தும்படி  வேலியினருகில் இருந்த குத்துச் செடியில் தவ்வியது முட்களுக்கு தப்பிய பலூன்.

தாவிப் பிடித்தவன் சொல்கிறான், 'செடி காப்பாத்திடுச்சு டா... செடி காப்பாத்திடுச்சு!'

நம்மையும் காப்பாற்ற இந்த பூமித் தாய் தன் மடி வளர்க்கும் தாவர இனங்கள் பலவற்றைப் பொதித்து  வர இருக்கின்றன இனிவரும் சில பதிவுகள். அவற்றின் தாத்பர்யம் உணவே மருந்தாக. மருந்தே உணவாக.

நலம் பெருக வருக புத்தாண்டே!




Share on:
சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தேன். ஊரென்றால் பிறந்த ஊர். குறியாமங்கலம்.

அரசர்கள் காலத்தில் அந்தணர்களுக்கு தானமளிக்கப்பட்ட வகையில் (சதுர்வேதி மங்கலம்) 'குறிக்கப் படாமலே விடப்பட்ட ஊர்' என்ற பொருள் பொதிந்ததோ பெயர்க்காரணம்.... தெரியவில்லை.

புவனகிரியிலிருந்து ஐயப்பன் கோயிலை வளைந்து நெளிந்து சென்றால் இடைப்படும் பெரிய வாய்க்காலைப் பிடித்துக் கொண்டே செல்ல வேண்டியது தான்.  வலப் பக்கம் வாய்க்கால். இடப் பக்கம் வயல்வெளி. கரை புரளும் நீரோட்டமும் பச்சைப் பசேல் நெல் வயல்களும் பயணத்தை சுகமாக்கும்.
Share on:



ஒவ்வொரு பண்டிகைக்கும் நிவேதனம் செய்து உண்ண வேண்டியவை என்றொரு பட்டியல் நம்மிடம் உண்டு.

இன்றைய கார்த்திகை தீபத் திருவிழாவில் பிரதான இடம் வகிக்கிறது அவல் பொரி. அகல் விளக்குகளும் வண்ணக் கோல மாவுப் பொடிகளும் தெருவெங்கும் கூவிச் செல்லும் சிறு தெருவியாபாரிகள் ஓய்வெடுக்க இரவாகிவிடும். கையிருப்பை விற்குமட்டும் நாலு தெரு சுற்றியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

கடைத்தெருவுக்கு சென்றாலும் நெற்பொரியும், அவல்பொரியும், வெல்லமும், வாழையிலையும், விதவிதமான வடிவங்களில் அகல் விளக்குகளும், வாழைத் தார்களும் தப்படிக்கு ஒன்றாக குவித்து வைக்கப் பட்டு மும்முரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. சரஸ்வதி பூஜையில் முன்னணியில் நின்ற அரிசிப் பொரி இன்று கேட்பாரற்று பட்டாணிக் கடைகளில் ஒரு ஓரமாக ஒதுங்கி இருக்கிறது. வருடமெல்லாம் தேவைப்படும் பூக்காரர்களுக்கும் தனிக் கொண்டாட்டம் தான்.

கெட்டி அவல் பக்குவமாய் தணலில் பொரிக்கப்பட்டு தன்னளவில் பெரிதாகி உள்ளுக்குள் கனமற்றிருப்பது, மனிதன் தன் ஆணவம் கண்மம் மாயை போன்றவற்றை அனுபவ அடுப்பில் அறிவெனும் பெருநெருப்பில் புடமிட்டு மனசும் உடம்பும் கனமற்று இருக்க விழைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது.

அந்தப் பொரியுடன்  வெல்லப்பாகு, தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய், எள் எனப் பலவற்றையும் சேர்த்து சுவைகூட்டியபிறகே இறைவனுக்கு படைக்கிறோம். இத்தனையும் சேர்த்து உருண்டையாக்கி அதன் மதிப்பை கூட்டவும் முடிகிற நமக்கு ஒற்றுமையின் மகிமை புரிய வேண்டும். மனிதனும் சக உயிர்கள் மேல் அன்பு, கருணை, இரக்கம், ஈகை போன்றவற்றைக் கைக் கொண்டு உன்னத நிலையடைய முனைய வேண்டுமல்லவா!

தீப ஒளி பரவட்டும் உலகெங்கும் தீமையழித்து...!
தீப ஒளி பரவட்டும் மனசெங்கும் மேன்மையளித்து...!!


Share on:

புரியாததை புரிந்து கொள்ளவும் தெரியாததை தெரிந்து கொள்ளவும் கேள்வி கேட்பது வாடிக்கை.

முதலில் நம் ஐயத்தை தெளிவாக கேட்கத் தெரிய வேண்டும்.

யாரிடம் கேட்கிறோம் என்பது முக்கியம்.
Share on:
'கிரகச்சாரம்' தொடர்ச்சி....

        இரவு வீடு வந்ததே இரண்டு மணிக்கு மேல். எஞ்சிய பொழுது எளிதாக இல்லை. கடத்தினேன் கடத்தினேன்... ஒவ்வொரு வலிக்குமான இடைவெளியை கண்களை மூடி, வலிக்குமிடத்தில் மனதை நிறுத்தி, வலி பரவுவதை வேடிக்கை பார்த்து...

       எல்லோருக்கும் விழிப்பு வரும் ஐந்து ஐந்தரைக்கு உறக்கம் வந்தது எனக்கு அரைகுறையாய்... அதுவரை மணி என்ன இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆவல் தலை தூக்கும் போதெல்லாம் கண் திறந்து தலைதூக்கி கடிகாரமிருக்கும் திசை பார்ப்பேன். விரும்பிக் களிக்கும் பொழுதுகளில் ஓட்டமாய் ஓடும் வினாடி முள், நகர்ந்தது நத்தைக்குப் போட்டியாய்.

குளிக்கும் போது ‘நமக்கு ஏன் இப்படியான சோதனை?' என்ற வேதனையில் நீருடன் கலந்தது கண்ணீர். பெருகிய கண்ணீர் மூக்கிலும் சேர, ஒரு மூக்கு மூடி மறு மூக்கை சிந்தியபோது காதுக்குள் வண்டு ஆழத்திலிருந்து மேற்புறம் வருவது போல் உணர்வு. சற்று நேரம் வலியும் வேதனையும் குறைந்தது. பிறகு மறுபடியும் வலி. மறுபடி சிந்தினால் மீண்டும் சற்று வலியில்லை. காது துவாரத்தை  மேலாக துணியால் துடைத்தால் வண்டின் கால்கள்! ‘ஆகா'வென பரவசத்தோடு இவரிடம் ஓடிவந்து, ‘வண்டு மேலாக வந்து விட்டது; பாருங்களேன்' என்றால், டார்ச் அடித்துப் பார்த்து, ‘தெரியவில்லையே' என்றவர், சோதனை முயற்சி ஏதும் வேண்டாம். மருத்துவரிடமே காட்டிக் கொள்ளலாம் என்கிறார். இடைவெளி விட்டு திரும்பவும் வலி தான்.

வடலூர் ஈ.என்.டி. டாக்டரிடம் முதல் ஆளாய் போயாச்சு. அப்போதுதான் கதவைத் திறந்திருப்பார்கள் போல. இயல்பு நிலைக்கு வந்து எங்களை அழைக்க அரை மணி ஆனது. வலியின் அளவும் வரும் கால இடைவெளியும் பழகிப் போனதால் பொறுத்திருப்பது சிரமமில்லை. மருத்துவரின் உதவியாளர் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தார். கருவி சரிவர வேலை செய்யவில்லை. 24 மணி நேர மருத்துவரின் இரவுக் குறிப்பையே மறுபதிவு செய்து கொண்டார்.
Share on:
        கடந்த வாரம் ஒருநாள்  இரவு மணி 11.30. படிக்கும் போது படுத்துக் கொள்வதும் (ஒய்வு+வாசிப்பு ) படுக்கும்  போது படிப்பதும் எனக்கிருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று.

         மழைக் காலங்களில் இரவில் விளக்கொளிக்கு சிறு பூச்சி வகைகள் சுற்றுவதுண்டு. ஈசல் வந்தால் விளக்கணைப்பது; அசுவினிப்  பூச்சி மேலே விழுந்தால் நசுக்கி விட்டு வருந்துவோம். அதன் நாற்றத்துக்காக. சிறிய எலுமிச்சை அளவில் தென்னைமரக் கருப்பு வண்டுகள் (அதன் பெயர் காண்டாமிருக வண்டாம். கூகுலார் சொல்கிறார்) கூட  சாளரம் வழியே முன்னிரவுகளில் வரும். அவற்றின் 'கிர்ர்' ஒலியில் சுதாரித்து அடித்து வெளியேற்றுவோம். முழுத் துவரை அளவில் கண்ணங்கருப்பாக  ஒன்று வரும். பறந்து பறந்து மேலே விழுந்தால் ஊர்ந்து கொண்டே இருக்கும் நம் மேல். இரு விரலால் பிடித்து ஒரே  அழுத்தத்தில் உயிரெடுத்து கையெட்டும் தூரத்தில் கிடாசுவோம்.

           முசுடு எனப்படும் சிவப்பு எறும்புகள் (அரிசி போன்று முட்டை இடுவன) ஏராளமாக இரவு நேரத்தில் வீட்டுக்குள் வந்து விரும்பிய இடத்தில் அடைந்து இனப்பெருக்கம் செய்யும். நம் மேல் ஏறி தாவிக் குதித்து அனாயசமாகச் செல்லும். பெரும்பாலும் கடிக்காது என்பதால் நாங்களும் பயமின்றி ரொம்பக் கூசினால் விரலால் நசுக்காமல் பிடித்துப் போடுவோம். புதிதாக வரும் விருந்தினர் தரையில் படுக்க நேர்ந்தால் அவர்களுக்கும் தைரியம் சொல்வோம். நாய் வளர்ப்பவர்கள் சொல்வதுபோல்...



           சம்பவ நாளன்று சின்னக் கருப்பு வண்டு (துவரையத்தினி) ஒன்று ஒருக்களித்துப் படுத்திருந்ததால் மேல் பக்கமிருந்த வலக்காது மடலினுள் தொப் என விழுந்தது.எழுந்து பறக்க எத்தனமாய் குட்டிச் சிறகுகளை விரித்து கிர் கிர் என்றது. சுதாரித்து பிடித்தேன்... அதன் 'மொழுக்' என்ற மேற்பரப்பில் விரல் வழுக்க  தடக்' என்று காது துவாரத்துக்குள் விழுந்தது.

      'படக்' என எழுந்து பட்ஸ் எடுத்துக் குடைந்தேன். அதுவோ இன்னும் ஆழமாய் போகவும் பயந்து தண்ணீர் எடுத்து காதில் ஊற்றினேன். அதற்குள் 'வெடுக் வெடுக்' எனக் கடிக்கத் தொடங்கி விட்டது வண்டு.
Share on:
வாகனக் கொட்டகை கதவை விரித்து வைத்து
ஒதுங்கி நின்றேன்
பின்னோட்டமாக நகரத் தொடங்கியது வண்டி
ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டு
விறுவிறுவென வந்த
மழைக் காலக் கருப்பு மரவட்டைகளை
கண்ட கணநேரத்தில் காலால் தள்ளியேனும் இருக்கலாம்.
சரேலென நசுக்கிக் கடந்தது வண்டிச் சக்கரம்
இறுக மூடிக் கொண்டன என்னிரு கண்கள்.
உரு எதுவானால் என்ன? உயிர் தானே...
இரட்டைக் கொலைக்கான தண்டனை யாருக்கு?

Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • “மின்மினிகளால் ஒரு கடிதம்”- அப்துல் ரஹ்மான்
    *விளக்காக எரித்தல் விட்டிலாக எரிதல் வேறென்ன இருக்கிறது காதலில்? ^^^^^^^^^^^^^^^ *நான் தவளை என் கிணறு நீ இது என் பெருமை. ^^^^^^^^^^^^...

Blog Archive

  • ▼  2020 (1)
    • ▼  March (1)
      • வானில் சில தாமரைகள்
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • அக்ஷ்ய பாத்ரம்
    ஒரு படமும் சில பின்னணிகளும்
    2 weeks ago
  • கீதமஞ்சரி
    மலைகளுக்கு நடுவில் மனம் மயக்கும் சோலை
    4 weeks ago
  • CrUcifiXioN
    Vintage collections
    2 months ago
  • முத்துச்சிதறல்
    துபாயில் ஏவுகணைகள்!!
    4 months ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    Hello world!
    6 months ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    சீட்டுக்கவி
    1 year ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    1 year ago
  • ஹரணி பக்கங்கள்.......
    2 years ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    6 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    6 years ago
  • Thanjai Kavithai
    8 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    8 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    8 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    9 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    9 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    9 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    10 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    10 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    10 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    10 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    12 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    13 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    14 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    15 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates