நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.
வகையினம் >
வகையினம் >
ஒரு ஊரில் ஒரு அம்மாவாம். ரெண்டாவது மூணாவது படிக்கிற தன் மகனையும் மகளையும் தினசரி பள்ளிக்கு கிளம்பி செல்லுமுன் பிரார்த்தனை செய்யச் சொல்வாங்க .
மகன் சொல்வான்...
அம்மா நல்லாயிருக்கணும் அப்பா நல்லா இருக்கணும். அக்கா நல்லா இருக்கணும். தாத்தா நல்லா இருக்கணும். ஆத்தா நல்லா இருக்கணும். எல்லாரும் நல்லா இருக்கணும். நானும் நல்லா இருக்கணும். நல்ல புத்தியை கொடு. உடம்பு பலம் கொடு....
அவன் முடிக்கும் வரை கண் மூடி மெளனமாக நிற்கும் மகள் வாய் திறப்பாள் ...
"நானும்... எனக்கும் !"
இன்றைய சிறப்பு தினத்துக்கு பதிவு போட நேரமற்று ஊர்ப் பயணத்தில் பறக்கும் நானும் சொல்கிறேன்...
"வாங்க... நாம எல்லோரும் 'தஞ்சை கவிதை' வலைப்பூவுக்கு செல்வோம்.
http://krishnapriyakavithai.blogspot.in/
மகன் சொல்வான்...
அம்மா நல்லாயிருக்கணும் அப்பா நல்லா இருக்கணும். அக்கா நல்லா இருக்கணும். தாத்தா நல்லா இருக்கணும். ஆத்தா நல்லா இருக்கணும். எல்லாரும் நல்லா இருக்கணும். நானும் நல்லா இருக்கணும். நல்ல புத்தியை கொடு. உடம்பு பலம் கொடு....
அவன் முடிக்கும் வரை கண் மூடி மெளனமாக நிற்கும் மகள் வாய் திறப்பாள் ...
"நானும்... எனக்கும் !"
இன்றைய சிறப்பு தினத்துக்கு பதிவு போட நேரமற்று ஊர்ப் பயணத்தில் பறக்கும் நானும் சொல்கிறேன்...
"வாங்க... நாம எல்லோரும் 'தஞ்சை கவிதை' வலைப்பூவுக்கு செல்வோம்.
http://krishnapriyakavithai.blogspot.in/
காதல் கனிமொழியா?
துணையற்ற முதுமையின்
ஏக்கப் புலம்பலா?
நட்பின் குதூகலமா?
பேசி முடியாத
பங்காளிச் சண்டையா?
நூல் பெயர்:எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை
ஆசிரியர்:- ப. தியாகு (80123 30511)
வெளியீடு: வெயில்நதி (99411 16068)
பக்கங்கள்: 80
விலை: 70/-
“பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச் செயல்பாடு” என அணிந்துரையில் இருவரியில் அடக்குகிறார் கவிதைவெளியில் நெடுந்தூரம் பயணித்திருக்கும் திரு.சமயவேல்.
நிலா உடைய, சூரியன் சிதறியதாம். என்னடா இது அதிசயம் என்று பார்த்தால், நிலா வடிவ கோழிமுட்டையொன்று கைதவறி விழ, உள்ளிருந்த மஞ்சள் கரு சிதறி கவிச்சை வாடையோடு சூரியன் தகிப்பது போல் தெரிந்திருக்கிறது தியாகுவின் கவிமனசுக்கு.
மரக்கிளைகளில் பச்சைப் பாம்பு போலவும் சிறுகொடிபோலவும் தோற்றப்பிழையாக ‘நீ' எனக்கு யாதுமாகி நின்றாய் என்பதாக மற்றொரு கவிதை. ‘நீ' மனம் கவர் காதலியாகவுமிருக்கலாம்; மனதுக்கினிய மழலையாகவுமிருக்கலாம். வரிகளில் வழியும் கவித்துவம் வாசிப்பவர் மனசை சிலுசிலுக்கச் செய்கிறதென்பதை மறுக்க முடியுமா?!
கூண்டுப் பறவை ஆரூடம் மட்டுமா சொல்கிறது?
ஆசிரியர்:- ப. தியாகு (80123 30511)
வெளியீடு: வெயில்நதி (99411 16068)
பக்கங்கள்: 80
விலை: 70/-
“பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச் செயல்பாடு” என அணிந்துரையில் இருவரியில் அடக்குகிறார் கவிதைவெளியில் நெடுந்தூரம் பயணித்திருக்கும் திரு.சமயவேல்.
நிலா உடைய, சூரியன் சிதறியதாம். என்னடா இது அதிசயம் என்று பார்த்தால், நிலா வடிவ கோழிமுட்டையொன்று கைதவறி விழ, உள்ளிருந்த மஞ்சள் கரு சிதறி கவிச்சை வாடையோடு சூரியன் தகிப்பது போல் தெரிந்திருக்கிறது தியாகுவின் கவிமனசுக்கு.
மரக்கிளைகளில் பச்சைப் பாம்பு போலவும் சிறுகொடிபோலவும் தோற்றப்பிழையாக ‘நீ' எனக்கு யாதுமாகி நின்றாய் என்பதாக மற்றொரு கவிதை. ‘நீ' மனம் கவர் காதலியாகவுமிருக்கலாம்; மனதுக்கினிய மழலையாகவுமிருக்கலாம். வரிகளில் வழியும் கவித்துவம் வாசிப்பவர் மனசை சிலுசிலுக்கச் செய்கிறதென்பதை மறுக்க முடியுமா?!
கூண்டுப் பறவை ஆரூடம் மட்டுமா சொல்கிறது?
“எம்மாம் நேரம் குந்தி கெடந்தாலும் இந்தாளு மனசு கசியப் போறதில்ல” ஜாங்கிரி உட்கார்ந்திருந்த மணல் திட்டிலிருந்து எட்டி காரி உமிழ்ந்தாள். சின்ன வயசில் கூட்டாளிகளால் வைத்த பட்டப் பெயர் இது. கொண்டவன் வீட்டிலும் நிலைத்து, இப்போது பஞ்சம் பிழைக்க வந்த இடத்திலும் முதலாளியிலிருந்து சக தொழிலாளி வரை ஜானகி என்று கூப்பிடுவார் யாருமின்றி ஜாங்கிரியாகவே இருப்பவள்.
இத்தனைக்கும் காரணமான
அவள் தலைமுடி
எண்ணெய் காணாமல்
வறண்டு சுருண்டு
மேலேறியிருந்தது. எடுத்து ஒரு ரப்பர்பேண்டில் அடக்கி
வைத்திருந்தாலும் அந்த அத்துவானத்தின் அந்திக்காற்றில் திமிறிப்
பறந்து கொண்டிருக்க,
முடிக்கற்றைகளை அடிக்கொரு தரம் இடதுகையால் இழுத்து
இழுத்துக் காதோரம்
செருகி
மாளவில்லை அவளுக்கு.
அவள் காலருகே
பரட்டை தலையும்
ஒழுகும் மூக்குமாய்
நிமிர்ந்து பார்த்து சிரிக்கும் ஒன்றரை வயது
மகள் செல்லியை
இழுத்து முந்தானையை
உதறி மூக்கை
நோகாமல் துடைத்து
விட்டாள். அவளிடமிருந்து
திமிறி இறங்கிய
அது மண்டியிட்டு
‘விசுக் விசுக்'
என நகர்ந்து
அடுத்ததாக குவித்திருந்த
கருங்கல் ஜல்லி
முட்டில் சட்டமாக
உட்கார்ந்து கொண்டது. ரெண்டு நாளாகப் பெய்த
மழையில் தேங்கிக்
கிடந்த ரோட்டுப்
பள்ளத்தில் ஒவ்வொரு ஜல்லியாக விட்டெறிந்து விளையாடத்
துவங்கியது.
அரை கிலோ
மீட்டர் தூரத்தில்
வந்த தொழிற்பேட்டையால்
இந்த இடத்துக்கு
பவிசு வந்துவிட்டது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்த அடுக்கு மாடிக்
குடியிருப்புகளில் பெரும்பாலும் கட்டிக்
காசுபார்த்துக் கைதேர்ந்த அவள் முதலாளி, அடுத்த கட்டடத்துக்கான
அஸ்திவாரம் போடுவது பற்றி மேஸ்திரிகளிடம் விவாதித்துக்
கொண்டிருந்தார்.
முதற்பதிப்பு: நவம்பர் 2013,
பக்கம்: 80
விலை: 65/-
கோடுகளில் ஓடுவதில் அமைதி கிடைத்ததினால்
கோடுகள் சிலதைக் காட்டி மகிழ்வித்ததினால்
கோடுகளைக் கொண்டு அடைய முடிந்ததினால்
கோடுகளில் உணர்ந்து
கோடுகளால் உணர்த்த முடிந்ததினால்
கோடுகளால் அல்லது
கோடுகளோடு வாழவும் முடிந்ததினால்
கோடுகளும் கலை எனப்பட்டதினால்
எல்லாவற்றையும் கோடுகளில் ஓடவிட்டு
கோடுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்
என்ற தன்னைப் பற்றிய அறிமுகப்படுத்தலோடு தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன்' நூலை சுவைபடத் துவக்குகிறார் செந்தில்பாலா.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நெகனூர் புதூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். கதை, கவிதை, ஓவியம், குறும்படம், நாடகம் எனப் பலதளங்களில் வெளிப்படத் துடிக்கும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘கதைகள் தீர்ந்த போது அம்மா சொன்ன கதைகள்' (2007) முகனூல் பக்கத்தில் தெளிவோடும் திறனோடும் இயங்கிக் கொண்டிருக்கிறார். https://www.facebook.com/senthilbala.bala
“ஒற்றைக் கோட்டில் உருவெடுக்கும் பாலாவின் ஓவியங்கள் அலாதியானவை; பிரமிப்பூட்டுபவை. அவற்றிற்கு இணையான பாதையில் பல்வேறு தரிசனங்களோடு இருட்டும் வெளிச்சமுமாய் பிரவகிப்பவை அவரது கவிதைகள்” -இது அவரது ஆத்ம நண்பர் நறுமுகை ஜெ.ராமகிருஷ்ணனின் அறிமுகச் சொற்கள்.
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ளப் படுகின்றன. அவை தோலின் மேற்புறத்துக்கு வந்து படிப்படியாக மாள்கின்றன. ஆனால், இந்த இறந்த எபிடெர்மிஸ் மண்டை செல்கள் பெரிய அளவான கட்டிகளாகப் பரவிக் காணப்படும்.
இவையே பொடுகு எனப்படுகின்றன.
பொடுகு வரக் காரணங்கள்:
இவையே பொடுகு எனப்படுகின்றன.
பொடுகு வரக் காரணங்கள்:
பனிக்காலம் வந்தாலே சிலருக்கு தோல் வறண்டு தலையில் பொடுகுத் தொல்லையும் வந்துவிடும். வைத்தியரிடம் தருவதை வாணியரிடம் தந்து ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோரெல்லாம் நிழற்படங்களினுள்ளிருந்து நம்மைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர்.
நம் வாழ்விடத்தின் தட்பவெப்பத்துக்கும் நமது உடல்வாகுக்கும் ஏற்றதாய் உணவும் பழக்கவழக்கங்களும் கொண்டிருந்த அவர்களெல்லாம் பழமைவாதிகளாகி விட்டனர், மேலைநாகரீக மோகத்தில் மூழ்கிய இன்றைய தலைமுறையினருக்கு...!
தலையில் எண்ணெய் தடவிய கையோடு கைகால்களை வருடிக்கொண்ட(கைகுவித்து எண்ணெய் ஊற்றி தலையில் தேய்த்தவர்கள் அவர்கள்) அந்நாளைய ஆசாமிகள் பற்றிப் பேசினால் கேலிப்பொருளாகிறோம் நாம். எண்ணெயை ஸ்ப்ரே செய்து கொள்ளும் காலத்திலல்லவா வாழ்கிறோம்!
பொடுகு+முடி உதிர்தல்=வழுக்கை:
தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியடியில் பலமணி நேரம் அமர்ந்து பணி புரியும் பெரும்பாலோருக்கு இன்றைய பெரும் பிரச்சினை இது. எத்தனை இளைஞர்களின் திருமணம் இதனால் பாதிக்கப் பட்டிருக்கிறது தெரியுமா? வீண் செய்த இயற்கையை எத்தனை பிரயாசைப்பட்டும் எத்தனை செலவழித்தும்...
-
கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
-
உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்
View My Complete ProfileFollowers
Labels
- அசை (16)
- அறிந்தும் / அறியாமலும் (10)
- கவிதை (61)
- சிறுகதை (9)
- சுவையான குறிப்புகள் (1)
- செல்லத்தின் செல்லம் (6)
- தாய் மடி (2)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
- தொடர் பதிவு (1)
- நூல் மதிப்புரை (1)
- நேர்காணல் (3)
- பகிர்தல் (51)
- படித்ததில் பிடித்தது (63)
- மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
- மருத்துவம் (12)
- வாழ்த்து (14)
Popular Posts
-
வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண) இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
-
நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
-
மலைவேம்பு (melia dubia) மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
-
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
-
குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
-
தொடக்கம்: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1: http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2: htt...
-
நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
-
'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன் குழந்...
-
*விளக்காக எரித்தல் விட்டிலாக எரிதல் வேறென்ன இருக்கிறது காதலில்? ^^^^^^^^^^^^^^^ *நான் தவளை என் கிணறு நீ இது என் பெருமை. ^^^^^^^^^^^^...
வலைப்பூ உலகில் எங்க குடும்பம்
போக...வர...
-
-
-
-
துபாயில் ஏவுகணைகள்!!4 months ago
-
-
-
-
-
-
-
-
இயல்பிலே இருக்கிறேன்8 years ago
-
-
-
அட! இப்படியும் எழுதலாமா?9 years ago
-
-
-
-
-
-
முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.12 years ago
-
கலர் சட்டை: 113 years ago
-
நூற்பயன், நன்றி14 years ago
-
எதுக்கு இவ்வளவு Build Up?15 years ago
-






