8 கருத்துரைகள்
  1. பூமரப் பெண் கதை மூலம் எத்தனை நல்ல விஷயங்களைச் சொல்லி சென்று இருக்கிறார் ஆசிரியர்.

    அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ...

    ReplyDelete
  2. கதை சொல்லாமல் சொல்லிச் செல்கிற தகவல்கள்தான் அதன் மீதான ஈர்ப்புக்குக் காரணம்.
    பழங்கதைகள் இப்படித்தான் பூடகமாய் வாழ்வியலை அடையாளம் காட்டிப் போகின்றன.. வெறும் சுவாரசியத்திற்காக வாசிக்காமல் ஊடுருவிப் பார்க்கும் மனசு வாய்த்தால் கதைகளின் பலன் பூர்ணமாய் கிட்டி விடும்.
    அறிமுகம் செய்த அழகு நடைக்கு நன்றி

    ReplyDelete
  3. ஒரு பெண் எங்கெல்லாம் பாதுகாக்கப்படுகிறாள்,யாரிடம் சிக்கினால் சிதைந்துபோவாள் என்பதை உணர்ந்து எழுதியிருக்கிறார்.பூமரப்பெண் மென்மையான ஒரு பூவேதான்.உங்களுக்கும் நன்றி நிலா !

    ReplyDelete
  4. நல்ல பகிர்வின் மூலம் நல்ல‌ விஷயங்கள் கிடைக்கும். நல்ல உணர்வுகள் பிறக்கும். உங்கள் பகிர்வினால் நல்லதொரு கதையைப்பற்றிய அறிமுகம் கிடைத்தது. அன்பு நன்றி!

    தங்களை நல்லதொரு தொடர்பதிவிற்கு இன்று அழைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. கதை நிற்கிறது ஆல மரமாய்... விழுதுகளாய் விவாதங்கள் பெருகுகின்றன//

    உண்ர்ச்சிக்குவியலாய் அருமையான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. மிக நல்ல பதிவு . நிச்சயம் இந்த புத்தகத்தைப் படிப்பேன். ஏ.கே.ராமானுஜனின் பார்வை கூரியது. அதோடு ''உதாரணமாய், நாட்டுப் புறக் கதைகளில் எளிய கதாபாத்திரங்களின் ஆக்கப் பூர்வமான் பங்கேற்பு. வண்டிக்காரர்களும் பணிப்பெண்களும் இல்லாவிட்டால் பூமரப்பெண்ணுக்கு மீட்சி ஏது?'' என்ற உங்களின் கருத்து மிகச் சிறப்பு. எனக்கு உங்களை நினைத்துப் பெருமையாக இருந்தது. வாய்மொழிக் கதைகள் எளியவர்களின் வாழ்வை, வாக்கைப் போகிற போக்கில் ஆழமாகப் பேசி விடுகின்றன. பூமரப் பெண்ணின் திறமை பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் மட்டும் பயன்படுவதும் காணக் கிடைக்கிறது கதையில். அதோடு உன்னை எப்படி இளவரசனுக்குத் தெரியுமென்று கேட்கப்படுவதும், அடிக்கப்படுவதும் பெண்ணிடம்தான். அவள் இளவரசனை விரும்பி இருந்தால் அது இயல்பு என்பது ஒரு புறமிருக்க, கதையில் இளவரசன்தான் அவள் மேல் விருப்புற்றதாக வருகிறது. ஆக இன்னொருவர் பார்த்தாலும் அடி பெண்ணிற்குத்தானா? என்ன அவலம்? அதோடு //பூமரமாகும் நிர்ப்பந்தம் அவளுக்கு ஒருபோதும் திரும்ப நேரவில்லை// எனும்போது அந்த பெண்ணிற்கு தான் பூமரம் ஆவது குறித்துப் பெருமையோ, மகிழ்வோ இல்லையா, அது நிர்பந்த்தம் மட்டுமா என்றும் தோன்றுகிறது. கூடவே மன்னன் திரைப்படத்தில் தன் நிறுவனத்தை முதலிடம் பெற வைக்கும் திறனுள்ள விஜயசாந்தி படத்தின் இறுதியில் வேலையை விட்டுவிட்டு கணவனுக்கு டிபன் பாக்ஸ் கொடுத்துக் கையசைக்கும் காட்சி நினைவுக்கு வருகிறது! மீண்டும் இந்த பதிவிற்கு நன்றி நிலாமகள் தோழி.

    ReplyDelete
  7. /அதிகாரத்தின் அடையாளமான பேச்சை, சக்தியின் (empowerment) கருவியாக மாற்ற வேண்டுமானால் ஒவ்வொருவரையும் பேச வைப்பது அவசியம்./

    இது பற்றி என் அபிப்பிராயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

    மெளனம் என்பதும் ஒரு வகைப் பேச்சுத் தான் தோழி.

    அது புறக்கணிப்பை,எதிர்ப்புணர்வை,அடுத்தகட்ட நகர்வை,நிரந்தரமானதொரு வெறுப்புணர்வை,முக்கியமாக’ஒரு பயனும் இல்லை’என்ற ஒரு தீர்வைச் சொல்லி நிற்கும்.

    அது அகிம்சையும் அமைதியும் நிரம்பிய வழியுமாகும்.

    புத்தியுள்ளவர்கள் அவரவருடய பிரச்சினைகள் வழியாக அந்த மெளனத்தின் பாஷையை புரிந்து கொள்வார்கள்.அல்லது காலம் புரிய வைக்கும்.

    அதிலிருக்கின்ற முக்கிய தன்மை என்னவென்றால் அது காலம் எழுதிச் செல்லும் பாஷையாக இருப்பது தான். அது மிக நீண்ட பதில்.:)

    ReplyDelete
  8. வணக்கம் சகோ இன்றுதான் உங்கள் வலைத்தளம் வந்தேன்
    சிறந்த ஆக்கங்களை வெளியிடும் உங்களுக்கு எனது மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.............

    ReplyDelete