நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

       மாரி, கொல்லையில் செழித்து வளர்ந்திருந்த முருங்கை மரத்திலிருந்து அலக்கு கழியால் பறிப்பதை கீழே மண்ணில் விழாமல் இலாவகமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் அவன் மனைவி காசாம்பு.
       கைப்பிடியளவு இனுக்குகள் சேரச் சேர கத்தையாய் கட்டி விரித்திருக்கும் ஈர சாக்குத் துண்டில் அடுக்குவதும் அவளே. வயதின் முதிர்வு இருவரையும் சீக்கிரமே சோர்வாக்கியது.
       “எத்தனை கட்டு தேறுது புள்ள?” தலைக்கு மேல் தூக்கித் தூக்கி துழாவிய அலக்கு தந்த தோள்வலியோடு, கழியை கீழிறக்கி தரையில் அண்டை கொடுத்து தோளில் சாய்த்துக் கொண்டே மாரி கேட்கிறான்.
       “இத்தோட பதினெட்டு ஆவுது... போதாது...?” காசாம்புவுக்கும் உட்கார்ந்தால் தேவலை என்ற அசதி ஒலிக்கிறது குரலில்.
       “போதும் போ... பதினெட்டஞ்சி தொண்ணூறு... பேரத்துல பத்திருபது கொறஞ்சாலும் பாதகமில்ல. சுள்ளான் மண்டியில கடன் சொல்லி வாங்கியாந்த  காய்கறிங்க இருவது கிலோயிருக்கு. இதுங்களை வித்து முதலாக்கி வூடு வந்து சேர்ந்தாலே போதுமாச்சே. போய் எனக்கு ஏதாச்சும் நீராகாரமிருந்தா எடுத்து வெய். அந்தக் கண்ணியோரமா துளுத்துக் கெடக்குற வல்லாரையையும், மொடக்கத்தானையும் ஆய்ஞ்சினு வாரேன். சுண்டக்காய் பறிச்சு வெச்சியா?”

Share on:

          அந்திக் காற்று பகலின் புழுக்கத்தை மட்டுப்படுத்துவதாயிருந்தது. வாசல் கதவை விரியத் திறந்து வைத்து முன் நடையில் சுவரோரத்தை ஆக்கிரமித்திருக்கும் மரப் பலகையில் அமர்ந்திருக்கிறார் சங்கரசுப்பு. திறந்திருக்கும் கதவின் உபயத்தால் தெருக்கோடிவரை அவரது பார்வையின் எல்லைக்குள் அடங்குகிறது.
        உள்ளிருந்து கமழும் பில்டர் காபியின் மணத்தை ‘இன்னும்... இன்னும்' என நுரையீரலை விரித்து உள்ளனுப்புகிறது அவரது நாசியின் நுகர்திறன். சாயங்காலம் வாங்கும் இருநூறு மிலி பாலில் இவருக்கொரு கும்மோணம் டிகிரி காபியும், தனக்கொரு டீத்தண்ணியும் போட்டு, மிஞ்சும் ஐம்பது மிலி பாலை உறை ஊற்றி மறுநாளுக்கான மோராக்கிவிடும் சாமர்த்தியம் வேண்டியிருக்கிறது அவரது மனைவி கமலத்துக்கு.
       நுரைத்துத் தளும்பும் காபியை ஏந்திவரும் மனைவி தேவதையாகவே தெரிகிறாள். ஏதாவது வாங்கிவரச் சொல்லிப் பையுடன் தலைகாட்டும்போது மட்டும் அரக்கியாக மாறிக் காட்சியளிப்பாள் அவரது அகக்கண்ணுக்கு.
      ‘பணமும் பத்தாக இருக்கணும்; பிள்ளையும் முத்தாக இருக்கணும்' அவருக்கு. அதற்குத் தோதாக, கல்யாணமான புதிதில் கமலத்தின் வயிறு திறக்க வந்த ஒற்றைக் கருவும் முத்துக் கர்ப்பமாக, கருப்பை தவிர்த்து ஃபெலோபியன் டியூபில் தங்கி அற்பாயுசில் மடிந்தது. அதன் பிறகு அவர்கள் வீட்டுக் குடும்ப அட்டையில் இரண்டு நபர் மட்டுமே நிரந்தரமாகிப் போயினர்.
       காபியை ஆற்றி ஆற்றி நுரை கூட்டி கடைசி சொட்டு வரை ரசித்து உறிஞ்சுகிறார். நுரைக் குமிழ்கள் அவர் வாயுள் இரகசிய சப்தமெழுப்பியபடி உடைந்து மறைகின்றன. நாவின் சுவையுணர் அரும்புகள் விரிந்து விகசித்து ‘ஆகா... ஆகா' என தேவசுகம் தருவிக்கிறது அவருக்கு.
Share on:
      தணலிடையே உடல் கருகுவதுபோல் அக்னிச் சூரியனின் தகிப்பு! மின் விசிறியின் இறைச்சலுக்கு சற்றும் பயமற்று அனல் காற்று சுழன்றடித்தது அறை முழுதும்.       வேறு வழியின்றி, முற்றத்து தொட்டித் தண்ணீரில் ஒரு வாளி மொண்டு வாசலில் விசிறி, தெருக்கதவைத் திறந்து வைத்தாள் ரம்யா. பசித்த காக்கைக் கூட்டம் படைத்த உணவெடுக்கும் வேகத்தில் ஆவியானது நீர்த்தடம். சளைக்காமல் மறுபடி மறுபடி தெளித்த நீரில் மட்டுப் பட்டு தண்மையேறியது காற்றுக்கு.  அப்பாடாவென ஆயாசப் பெருமூச்சோடு உள்நுழைந்து அவளுடன் உறவாடியது மெல்ல.
        நேற்று வேலையோடு வேலையாக தைத்து வைத்த இரவிக்கைகளையும், ஊசி-நூல்கண்டு-ஊக்கு வகையறாக்களையும் சேகரித்து வந்தமர்ந்தாள் காற்றாட.
        குழந்தைகள் கிராமத்திலிருக்கும் தாத்தா பாட்டியுடன் விடுமுறையை உற்சாகமாகக் கழிக்க, துணைவரின் பணிக்கும், உணவகச் சாப்பாடு ஒவ்வாத அவரது பிணிக்குமாய் அவளது இருப்பு இங்கே என்றானது.
       இல்லறம் பெண்களுக்கான விடுப்பை எப்போதும் எளிதாக்குவதில்லையே. நாகரீகமும் நகர நெருக்கடிகளும் உடல்சார் ‘விடாய்' காலங்களைக் கூட புறந்தள்ளி விட்டதால்  அவரவர்க்கான ஓய்வு நேரம் அவரவர் மனப்பாங்காகி விட்ட சூழல். அன்றாட அலுவல்களும், துடைக்கவும், அடுக்கவும், தைக்கவும், பின்னவுமாக வேலைக்கும் நேரத்துக்கும் எப்போதும் போல் சடுகுடு.
        சத்தமின்றி வந்து நின்ற இ-பைக்கில் காலூன்றியபடி, ‘சார் இருக்காரா?' என்றவர் கணவரின் அலுவலக சகா.
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • அகவெளிப் பயணத்தின் வழித்துணை
             ‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம்  ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகி...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ▼  2011 (49)
    • ►  December (4)
    • ▼  November (3)
      • யாவாரம்
      • நேசத்தின் சீமாட்டி
      • விருந்தாளித் தாம்பூலம்
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

போக...வர...

  • திண்டுக்கல் தனபாலன்
    பொறை...
    2 days ago
  • முத்துச்சிதறல்
    வேங்கையின் மைந்தன்!!!!
    3 days ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    தமிழர் அறம் குறித்த சிந்தனைகள்
    5 days ago
  • கீதமஞ்சரி
    ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்கள்
    3 weeks ago
  • ரிஷபன்
    5 weeks ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    காட்டுக்குள்ளே
    3 months ago
  • வண்ணதாசன்
    தமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்
    3 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    4 months ago
  • அழியாச் சுடர்கள்
    மாபெருங் காவியம் - மௌனி
    7 months ago
  • சமவெளி
    அடிக் கிளைப் பூ.
    9 months ago
  • VAI. GOPALAKRISHNAN
    22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு !
    9 months ago
  • CrUcifiXioN
    FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!
    1 year ago
  • Thanjai Kavithai
    2 years ago
  • வானவில் மனிதன்
    'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்
    3 years ago
  • ஊமைக்கனவுகள்
    ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
    3 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    4 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    வர்தா புயலும் எனது காரும்...
    4 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    4 years ago
  • அடர் கருப்பு
    கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
    4 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    5 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.
    7 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை நாத்திகன்: 3
    8 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    8 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    9 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates