நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

(மயிலாடுதுறை-திருவாரூர் பேருந்தில் காலை 7.30 மணிக்குஒரு ஆசிரியர், மாணவரிடையேயான உரையாடல்)

         இந்தக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற ஒரு மாணவன் விடுமுறைக்கு தன் உறவினர் வீடு சென்று திரும்புகிறான் தன் சொந்த ஊருக்கு. ஏனெனில் அன்றுதான் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாள். (21.06.2012)

         மூவர் அமரும் இருக்கையின்  சன்னலோர இருக்கையில் அவன் அமர்ந்திருக்க, அருகில் துணைக்கு வந்த உறவுப் பெண்மணி. பேருந்தில் கூட்டம் அதிகரிக்கவும், அருகில் நின்ற ஒருவர் இடம் மாறி அமருமாறு கேட்கிறார்.  பெண்மணி சன்னலோரம் நகர பையன் நடுவில் மாறுகிறான். உட்கார்ந்த மறுநிமிடம், அவர் பேச்சைத் துவக்குகிறார்.

பயணி: என்ன படிக்கிறே தம்பி?

பையன்: பத்தாவது பாஸ் பண்ணியிருக்கேன்.

பயணி: இந்த வருஷமா?

பையன்: ம்...

பயணி: என்ன மார்க்?

பையன்: (தயங்கி, சங்கடத்துடன்) 307 தான்....

பயணி: 500ல் மீதி எங்க போச்சு?

(பையன் குற்ற உணர்வில் நெளிய, “ப்ளஸ் டூ-வில் வாங்கிடுவான் நிறைய” என உறவுப் பெண்மணி சமாளிக்கிறார்.)

பயணி: நானும் திருக்கண்ணபுரத்தில் ஆசிரியரா தான் பணி செய்யறேன்.       மார்க் ஷீட் எழுதத் தான் இப்ப போய்கிட்டிருக்கேன். எல்லோருக்கும் பதிவு பண்ணி கொடுக்க எல்லாப் பள்ளிகளிலும் மதியம் ஆயிடும். வீட்டுக்குப் போயிட்டு நீங்க பொறுமையா பதினொரு பண்ணெண்டு மணிக்கு பள்ளிக்கூடம் போனாப் போதும்.

(தலையாட்டிய பையன் பேசாதிருக்க, பின் இருக்கையில் கல்லூரி மாணவர்களின் அலைபேசியில் சமீபத்திய காதல் பாடல்களின் ஆரவார இறைச்சல். ஆசிரியர் மீண்டும் பேச்சைத் துவங்குகிறார்.)

ஆசிரியர்: என்ன பிரிவு கேட்கலாம்ன்னு இருக்கே, மேற்கொண்டு படிக்க?

பையன்: சி. எஸ். தான்...

ஆசிரியர்: ம்ம்...  தருவாங்களா இந்த மார்க்குக்கு? கேட்கணும், அப்பா அம்மாவை விட்டு தலைமையாசிரியர்கிட்ட விடாப்பிடியா... கேட்டு வாங்கினா மட்டும் போதாது. இன்னும் கடுமையா உழைச்சுப் படிக்கணும். ப்ளஸ் டூவில் 1200க்கு 1170க்கும் மேல மதிப்பெண் எடுக்கணும். வேலைக்குப் போகணும். கை நிறைய சம்பாதிச்சு பெரிய்ய ஆளாகணும். அப்பா, தாத்தாவை விட ...
         பின்னாடி பையன்க பேசிக்கிறாங்க பாரு... ‘அந்த வாத்தி போடவே மாட்டாண்டா... இதுல இன்னும் 30 மார்க்கு எடுத்திருக்கனும்டா'ன்னு... தான் சரியா படிச்சு எழுதாததை மறைச்சு வாத்தியார் மேல குறை சொல்றான் பார். இவன் ஒழுங்கா எழுதியிருந்தா அவர் ஏன் குறைச்சிருக்கப் போறார்? அதனால தான் பி.இ. சேர முடியாம ஐ.டி.ஐ. சேர்ந்திருக்கானுங்க...
          எங்க தலைமையாசிரியர் ஒருத்தர் ரொம்ப அழகாச் சொல்வார், ‘ஆடு மாடுங்களை அவுத்து விட்டா என்ன செய்யுது...? நேரா பச்சை தேடி மேயுது. இராத்திரி பூரா சுவாசிச்சிட்டிருக்கற மரமெல்லாம் சூரியன் உதிச்சதும் என்னா செய்யுது...? ம்... என்ன செய்யுது?

பையன்: ஒளிச்சேர்க்கை செய்யுது.

ஆசிரியர்: ஆங்... சூரியன் இருக்கற வரைக்கும் தனக்கான உணவு தயாரிக்குது. ஆனா மாணவப் பருவத்துல நாம என்ன செய்யறோம்...? டி.வி., கம்ப்யூட்டர், செல், கிரிக்கெட் இப்படி கவனத்தை பலதுலயும் சிதறடிக்கிறோம். அப்பறம் எப்படி அதிக மார்க் எடுக்க முடியும்?
          இந்த ரெண்டு வருஷமும் நீயும் இதெல்லாம் குறைச்சுக்கணும். விளையாட்டு வேணும்தான்... ஒருமணி நேரம் விளையாண்டதும், நான் படிக்கணும் போறேண்டான்னு சினேகிதன் கிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு வந்துடணும்.
          சி.எஸ். சேரணும்னியே... மேத்ஸ் வருமா உனக்கு?

பையன்: ம்ஹும்... அவ்வளவா வராது.

ஆசிரியர்: அப்புறம்? இப்ப மேத்ஸ்ல என்ன மார்க் எடுத்திருக்கே?

பையன்: 60 தான்...

ஆசிரியர்: 60 வாங்கியிருக்கியா! அப்புறம் வராதுன்னே... 35 வாங்கறவன் தான் வராதுன்னு சொல்லனும். 200க்கு 120 வாங்க முடியும் உன்னால. இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சா இன்னும் கூட வாங்கிடலாமே...
           எம்பொண்ணு ப்ளஸ் டூவில 1164 மார்க்! நாகை மாவட்டத்திலேயே முதலா வந்தவ. பி.இ. முடிச்சிட்டு இப்ப 40,000 சம்பளம் வாங்கறா! பொம்பள புள்ள... அவளாலயே முடியுது... ஆம்பள புள்ள உன்னால முடியாதா?

         (பூந்தோட்டம் வந்துவிட அப்பெண்மணியும் அப்பையனும் எழுந்து இறங்கினர். பெண்மணி இறங்குமுன் சொன்னார்... ‘உங்க வார்த்தைங்களை மனசில் ஏத்தி உணர்ந்தான்னா பின்னாள்ல பெரியாளா ஆகிடுவான் சார். நன்றி!' ‘எடுத்துச் சொல்லுங்கம்மா' என்றபடி அவர்கள் இறங்க கூட்டத்தை விலக்கி வழி ஏற்படுத்திக் கொடுத்தார் அம்மருத்துவர்.)

          ‘நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'ன்னு வள்ளுவர் மருத்துவருக்கு மட்டுமா சொல்லிச் சென்றார்...?!

ஆச்சார்ய தேவோ பவ!!
Share on:
அதிகாலைப் பொழுதொன்றில்
அய‌ர்ந்து தூங்குகிறாள்
தாய்ப்பால் ம‌ற‌க்க‌த் த‌வித்த‌ழுத‌ ம‌க‌ள் ...

அவ‌ள் கைக‌ளுக்குள்
த‌லையணை உருவில் நான்!
ம‌ல்லிகை, வேப்பிலை, மாத்திரை தாண்டியும்
க‌ன‌த்துக் கிட‌ந்த‌தென் மார்பு!

புழ‌க்க‌டையில் ம‌டிக‌ன‌ம் தாளாது கால்மாற்றி நின்று
'அம்மா'வென‌ க‌ல‌ங்கிக் க‌ரைந்த‌ர‌ற்றும் செவ‌லைப் ப‌சு...
வைக்கோல் க‌ன்றால் ம‌டிசுர‌ந்த‌
ப‌சும்பால் நுரைத்து வ‌ழியுமென் கைப்பாத்திர‌த்தில்!!

க‌ன்றிழ‌ந்த‌ தாய்ப்ப‌சுவுக்கும்
பால் சுர‌ப்பு நிற்க‌
மாத்திரை தேடுவ‌தில்லையே நாம்...!

உட‌ல்நோவும்
உயிர்நோவும்
ச‌க‌ உயிர்க்கும் உண்ட‌ன்றோ...!

த‌வித்துத் த‌டுமாறுமென்னை
வேடிக்கை பார்க்க‌
கிழ‌க்கில் உதிக்கிறான் ப‌க‌ல‌வ‌ன்.
Share on:
கோயில் கருவறையில்
தேய்த்தும் குறையாத
எண்ணெய் பிசுக்கு
பளபளக்க...

ஏழைக் கருவறையில்
வெளிவந்த பலருக்கு
வறண்டு சிக்கேறிய கேசம்.

பால், தயிர், பன்னீர், இளநீருடன்
தேன், பழங்கள், திரவியப் பொடியுடனும்
தடபுடலாய் அபிசேக ஆராதனைகள்
கோயில் சிலைகளுக்கு...

வாசலுக்கு வெளியே
வருவோரிடம் கையேந்தி
பிரசாதத்தில் உயிர் வளர்க்கும்
பல பிறவிகள்.

கைகூப்பி தொழுவோரிடம்
கணக்கற்ற பிரார்த்தனைகள்
இதைத் தந்தால்
இதைத் தருவேனென்ற
பலப்பல ஒப்பந்தங்கள்

எதைப் பெற்றும்
திருப்தியடையா
அரைகுறைகள்.

கால் வைக்கும் இடமெல்லாம்
பளிங்குக் கல் பதித்த கோயில்களை
மகிழுந்தில் சென்று தரிசிக்கும்
பயணங்களில்
இருக்கையில் இருந்தபடி
வணங்கிச் செல்பவருக்கும்
அபயமளிக்கும்
பாதையோர சிறுதெய்வங்கள்...

தலைச்சுமையை இறக்காமல்
தாடையில் போட்டுக் கொண்டு
‘காப்பாத்துடா என்னைய்யா'
என்றபடி கடக்கும்
அன்றாடங்காய்ச்சிகளையும்
கைவிடுவதேயில்லை.

ந‌ன்றி: 'காக்கை சிற‌கினிலே' மே'12
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ▼  June (3)
      • கல்வி உளவியல்
      • தாய்மையின் த‌விப்பு...
      • படைத்தவனுக்கில்லை பாரபட்சம்
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • சிவகுமாரன் கவிதைகள்
    கபீரும் நானும் 55
    1 month ago
  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 month ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    1 month ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    4 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    7 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    8 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    9 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates