9 கருத்துரைகள்
  1. மனித மனங்களின் கருத்தியல்புகளும், அவர்களின் விருப்பு வெறுப்புக்களும் அவர் தம் குண இயல்புகளையும் மன ஓட்டத்தையும் அடிப்படையாக வைத்தே வேறுபடுகின்றன. இவ் வகையில் நீங்கள் பதிவிச் கூறியிருக்கும் எதிர்கருத்துக்கள் இக் காலப் பெற்றோரின் யதார்த்த நிலையினை உணர்த்தி நிற்கின்றன,
    இவ் இடத்தில் கல்லூரிகளின் நிலையினையு, புகழினையும் கருத்திற் கொண்டு மாணவர்கள் தத்தமது துறைகளைத் தேர்வு செய்கையில் உள்ளூர் கல்வி நிலையங்களின் வளர்ச்சி, காத்திரத் தன்மை என்பன புறக்கணிக்கப்படுகின்றன.

    மாணவர்களின் சுய புத்தியில் உருவாகும் விருப்புக்களே சாலச் சிறந்தவையாகும். இதற்கு பெற்றோரோ, அல்லது ஆசிரியர்களோ அம் மாணவர்களை வற்புறுத்தித் அவர்களை ஒரு துறையினுள் இறக்கினால் அது கண்ணை மூடிக் கொண்டு குழியில் வீழ்வதற்கு ஒப்பாகி விடும் என்பதே என் கருத்து.

    உங்களது காத்திரமான எதிர்க் கருத்துகளுடன் நானும் ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete
  2. நல்லாசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.. இப்போதும் இருக்கிறார்கள்.. நீங்களே சொல்வது போல் ஓரிரண்டு கற்களுக்காக குறை காண்பதில் அறிவுடைமை இல்லைதான்.. நாம் இப்போது நல்லனவற்றை அடையாளம் காண்பதிலும் காட்டுவதிலும் பின் தங்கிப் போனோமோ.. என்கிற ஐயம் எனக்குள்.. மீடியாக்கள் எல்லாமே முரண்களை மட்டுமே வெளிச்சம் காட்டுகின்றன..

    ReplyDelete
  3. ரிஷபன் சொல்வது சரி நிலா.இப்போ எங்கும் எதிலும் வியாபாரம்தானே.அந்த ஆசிரியர் யாரிடம் பணம் வாங்கினாரோ !

    ReplyDelete
  4. இந்த மாதிரி தில்லுமுல்லுகள் எல்லாகாலத்திலும் நடைபெறுகின்றன. அந்த காலத்தில் 'தேர்வில் தேறினால் போதும்' என்கிற மனநிலையில் இருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது தவறாக தெரியவில்லை. இந்த போட்டி மிகுந்த உலகத்தில் நடுத்தர வகுப்பிலிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தங்கள் மதிப்பெண்களால் மட்டுமே நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமென்ற நிலை இருக்கிறது. நிறைய மாணவர்கள் சாப்பிடவும், தூங்கவும் மட்டுமே வீட்டிற்கு வருகிறார்கள். மீதி நேரமெல்லாம் தங்களின் இலட்சியத்திற்கு கடுமையாக உழைக்கிறார்கள். பெற்றோர்கள் கட்டாயப்படுத்திய காலமெல்லாம் சென்றுவிட்டது. ஆறாவது படிக்கும் மாணவனொருவன் தன் காலாண்டுத்தேர்வுக்கு வலைத்தளங்களில் மாதிரி வினாத்தாள் பார்த்துக்கொண்டிருக்கிறான். எனவே, பதினான்கு (இப்போது பதினைந்து) வருடங்கள் அவர்கள் உழைத்த உழைப்பை பதினான்கே நொடிகளில் வீணாக்கும் சுயநலவாதிகளை நாம் எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்கக் கூடாது.

    எல்லா ஆசிரியர்களும் இதுபோல இல்லை என்பது அப்பழுக்கில்லாத உண்மை. தன் மாணவர்களின் படிப்புக்காக உற்றார் உறவினர்களை இழக்கும் ஆசிரியர்களையும் நாம் பார்க்கிறோம். ஆனால் குவளை நிறைய இருக்கும் பாலில் ஒருத்துளி விஷம் சேர்ந்தாலும், 'விஷத்தை தவிர மிச்ச பால் நல்ல பால்' என்பவர்களும் இருக்கிறார்கள்... என்ன செய்ய...

    ReplyDelete
  5. கீழேயுள்ள ச‌வுக்கு த‌ளத்தில், தின‌ம‌ணியில் வ‌ந்த‌ ம‌தி அவ‌ர்க‌ளின் க‌ருத்து(கேலி) சித்திர‌ம், உங்க‌ளின் சில கேள்விக‌ளுக்கு, முழுமையான ப‌தில் அளிக்கும் என ந‌ம்புகிறேன்.
    த‌லைப்பு "திரும்பிப் பார்க்கிறோம் (28.07.2007)
    http://savukku.net/index.php?option=com_content&view=article&id=633:2011-03-31-02-52-51&catid=9:2010-07-22-06-30-17&Itemid=7

    ReplyDelete
  6. @நிரூபன், ரிஷபன், ஹேமா, சிபிகுமார்...

    தங்கள் அனைவரின் தொடர்ந்த வருகைக்கும் விரிந்த சிந்தனைப் பகிர்வுக்கும் நன்றியுடையவளாகிறேன்.

    ReplyDelete
  7. @வாசன்...

    வருகைக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி ஐயா. தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. யாராக இருந்தாலும் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் முறையீடு செய்திருக்கலாம் தங்களுக்கான நியாயத்திற்கும், இனி வரும் மாணவர்களின் வாழ்கைக்காகவும். குறைந்த பட்சம் ஒரு கடிதமாவது சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அக்கறையுள்ளவர்கள் அனுப்ப வேண்டும். மிகுந்த மனச் சுமையை ஏற்படுத்திய பதிவுகள் தோழி. அந்த பிள்ளைகளின் மனக் கொதிப்பும், வேதனையும் நன்கு புரிகிறது.அவர்களுக்கு இனி சமூகம் மேல் என்ன கருத்து மிஞ்சக் கூடும்?

    ReplyDelete
  9. @ சைக்கிள்...

    வாங்க மிருணா... புரிதலுடனான தங்கள் மறுமொழி ஆறுதல் படுத்துகிறது.

    ReplyDelete