பயணங்களில் பிரம்மிப்பூட்டும்
கட்டிடங்களின் கண்காட்சி!
ஆங்காங்கு அடக்கமாய்...
மயான கொட்டகைகள்.
கலைந்தெழ மனமின்றி...
கனவில்... அம்மா!
வாழ்க்கை
உயிர்ச் சக்கரத்துடன் ஓடும்
அச்சாணியற்ற வண்டி.
காற்றில் பூவாசம்
நாசியில் மோதிட
கடந்த ஊர்தியில் சவம்.
பேரண்டத்தின் சிற்றணு நாம்...
![]() |
அலைகடலின்
கரைநிரப்பிக் கிடக்குமிந்த
மணற்றுகள்கள்
தம்மை
தகர்த்தவர்க்கும்
சிதைத்தவர்க்கும்
மிதித்தவர்க்கும்
உறுதுணையாய்
இறுதிவரை.
/மயான கொட்டகைகள்./
ReplyDelete:) பல இடங்கள் இப்படி தான்.. மனசிலும்
நல்லயிருக்கு
ReplyDelete:) Nice
ReplyDeleteஇந்தத் தளத்தையெல்லாம் என்றோ நீங்கள் கடந்துவிட்டீர்கள் என்றல்லவா நான் நம்பிக் கொண்டிருந்தேன் நிலாமகள்?என்னாச்சு உங்கள் கவிதைகளுக்கு?
ReplyDelete@வினோ...
ReplyDeleteமிக்க நன்றி வினோ!
@தியாவின் பேனா...
வருகைக்கு நன்றி தியா!
@சிவாஜி சங்கர் ...
மிக்க நன்றி சிவாஜி...!
@சுந்தர்ஜி ...
ReplyDeleteஎன் மேலான நம்பிக்கைக்கும், உயரிய நட்புடனான அறிவுறுத்தலுக்கும் தலைவணங்குகிறேன் ஜி! கடை போட்ட பின் ,தெரு வியாபாரி ஆக பின்னோக்கிப் போகும் அபத்தம் விளங்குகிறது. இனி கவனமாயிருப்பேன். உடனுக்குடன் பதிவிடும் பதற்றத்தால் வந்த வினை.
தாயிழந்த கவிதை - அருமை !
ReplyDeleteபேரண்டத்தின் சிற்றணு நாம் - என்ன சொல்றதுன்னே தெரியலை இதான் பெஸ்ட்!
மற்றவைகளும் நல்லாருக்கு!
@ப்ரியமுடன் வசந்த்...
ReplyDelete'தாயிழந்தவள்' எழுதி, வருடங்கள் கடந்தும் அச்சேறாத ஆதங்கத்தில் பதிந்தது.
'பேரண்டத்தின் சிற்றணு நாம்' என்பதைக் கூட, 'மணலாய் இரு' என ஜென் தனமாய் தலைப்பிட்டிருக்கலாமோ ...
தம்பி வர போக இருப்பது சந்தோஷமே எனக்கு.