9 கருத்துரைகள்
  1. இந்தக் கொடுமை இனியொரு முறை உங்களுக்கு நிகழ வேண்டாம். வண்டுகள் வரும் வாய்ப்பு உள்ள வீடு என்றால் முடிந்த மட்டும் காதுகளைப் போர்த்தியபடி படுங்கள். எனக்கு இப்படி ஆனபோது காதுகளில் எண்ணெய் ஊற்றவும் பூச்சி மேலே வந்துவிட்டது. ஆனால் இது சரியான முறையாவெனத் தெரியவில்லை.Take care and get well soon.

    ReplyDelete
  2. வண்டுகள் வரும் வாய்ப்பிருந்தால் காதில் சிறிது பஞ்சு வைத்துக்கொள்ளலாமே..

    யார் பேசினாலும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லையே..

    ReplyDelete
  3. @மிருணா...

    நல்லாயிட்டேன் மிருணா. இவர் நண்பர் மனைவி கூட வெதுவெதுப்பாக சுட வைத்த எண்ணெய் ஊற்றுவார் தன் அம்மா என்றார். பதிவில் விடுபட்டு விட்டது. 'நெகிழ்ச்சி' எனப்படும் காது கட்டிக்கு தான் எங்கள் பக்கம் அப்படிச் செய்வார்கள். மேலும் முருளு என்றொரு செடியை சூடு காட்டி அதன் சாற்றை பிழிவார்கள்.

    @ இராஜ இராஜேஸ்வரி ...

    ஆம்! இரட்டைப் பலன்:)

    ReplyDelete
  4. மிகவும் சிரமம்... ஆமாம் வண்டு எங்கே தான் போச்சி...?

    ReplyDelete
  5. @ திண்டுக்கல் தனபாலன்...
    அப்போ வலி? அது கடித்ததன் விளைவாம்.//
    //வண்டு காதினுள் சமாதியானதா அல்லது அன்றிரவே பிய்ந்த கால்களை விட்டு நொண்டிக் கொண்டு சென்றுவிட்டதா தெரியவில்லை. //

    புரியாத புதிர் தான் சகோ. தோழர் செந்தமிழன் சொன்னது போல் தானாக வெளியேறி விட்டதோ என்னவோ...

    ReplyDelete
  6. என்னப்பா இது இவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருக்கீங்க? காதுக்குள் நீர் பீச்சியடிப்பது காது ஜவ்வைப் பாதிக்குமென்று பல ஈஎன்டி மருத்துவர்களே எச்சரிக்கிறார்கள். இப்படி புண்ணாக இருக்கும்போது காதில் நீர் பீச்சுவது எவ்வளவு வலியும் வேதனையும் தருவதாக இருக்கும்? காதுக்குள் சிறிய உயிரினங்கள் புகுந்துவிட்டால் உப்பு நீரே போதுமானது என்று சொல்வார்கள். எவ்வளவோ மருத்துவ முன்னேற்றம் அடைந்துவிட்ட போதும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் போவது மிகவும் வருத்தம் தரும் விஷயம் நிலாமகள். எப்படியோ அந்த கொடுமையான தருணத்தைக் கடந்துவந்தீர்களே அதுவே நிம்மதி.

    ReplyDelete
  7. நமக்கு நடக்கிற எல்லா சம்பவத்திலும் நமக்கொரு அனுபவம் / பாடம் இருக்கும் என்று சொல்வார்கள்.’ ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டிருக்கிறது’ போலும்.

    உங்கள் இரு பதிவுகளையும் வாசித்த போது அப்படியே கண்முன்னால் ஒரு காட்சி விரிந்தது.

    இனி பூச்சிகள் வருகிற பொழுதுகளில் காதுகளுக்குள் மென்மையான பஞ்சினை மேலாக வைத்துக் கொள்ளுங்கள் நிலா. ( ஆக உள்ளே தள்ளி விடாதீர்கள். பிறகு அது வேறு பிரச்சினை ஆகி விடும்.:)

    கஸ்ரம் வந்தால் ஒரு புல்லுக் கூட நம் பல்லை உடைக்கும் என்றார் கண்ணதாசன். நம்மை விழுத்த ஒரு புல்லு போதுமாக இருக்கும். அப்படித்தான் நிலா இதுவும். பாருங்கள் ஒரு சிறு பூச்சி என்ன எல்லாம் செய்து விட்டது!

    ReplyDelete
  8. @கீத மஞ்சரி...
    ஆம் தோழி. எல்லாவற்றிலும் 'நேரம் காலம்' என்று ஒன்றும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எதிர்பாரா நேரத்தில் வரும் இது போன்ற இடையூறுகளில் பயமும் பதட்டமும் நம்மை ஆட்கொண்டு விடுவதால் தாறுமாறாக முடிவெடுத்து விட்டு தடுமாறுகிறோம். ஆறுதலான தங்கள் கருத்துக்கு நன்றி!

    @ மணிமேகலா...

    சரிதான் நீங்க சொல்வதும். விதி 'வலி'யது தான்:))
    'துன்பம் வரும் வேளையிலே சிரிங்க' என்றார் போல் வலியுடன் பயணம் செய்த வேளையிலும் செய்வதறியாமல் எனது மாமியாரும் கணவரும் தவித்ததை எண்ணி சிரித்துக் கொண்டே சென்றேன். திகைப்புடன் என்னைப் பார்த்துப் பார்த்து வண்டி ஓட்டிய கணவர் என்ன நினைத்திருப்பாரோ...

    நடந்து முடிந்த பின் பல துன்பங்களும் சிரித்து ஆற்றிக் கொள்ளும் படி இருந்து விடுகின்றன.

    சில அனுபவங்கள் பாடமாகும் போது விலையாக வலியும் வேதனையும்.

    ReplyDelete
  9. ஆனாலும் இப்படி வலியைக் கூட விலாவரியாக விளக்கி எழுதும் உங்கள் எழுத்து வன்மைக்கு ஒரு சபாஷ் நிலா....
    உண்மையைச் சொல்வதென்றால், இதைப் படித்ததும் முதலில் நீங்கள் எழுதியிருக்கும் விதம் படித்து சிரிப்பு வந்தது. உங்கள் வேதனையை அடியில் தள்ளி, எழுதிய விதத்தால் ஒரு நல்ல நகைச்சுவைக் கட்டுரையாகி விட்டது . பாராட்டுக்கள் நிலா....

    ஆனால்,என் பணி அனுபவத்தில் இருந்து ஒரு சின்ன அறிவுரை. ஒரு வண்டு நுழைந்து அதிலும் அது படபடக்கும் வரை தெரிகிறது என்றால், அப்போதே ஒரு நல்ல மருத்துவரைப் பார்ப்பது தான் முறை. நம் கை வைத்தியம் எல்லாம் செய்து, எசகு பிசகு ஆக்கிக் கொண்டு பின் மருத்துவரிடம் போய் ....வேதனை அதிகம் தான் .
    இப்படி ஒரு ஈசல் போன்ற பூச்சி காதில் போய் அது பறக்கிறது என்று நான் சொல்ல, தண்ணீர் ஊற்று தண்ணீர் ஊற்று என்று எல்லோரும் சொல்லி நான் முடியாது என்று மறுத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஓடியது நினைவுக்கு வருகிறது. நீங்கள் எழுதியிருப்பது மாதிரி ஒரு இரவு நேரம்தான். ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அந்த மருத்துவர், சிரிஞ்சில் தண்ணீர் அடித்து உயிரோடு அந்த பூச்சியை என் கையில் விட்டார். அட, இன்னும் உயிரோடு இருக்கே என்று நான் அந்த டென்ஷனிலும் ஆச்சரியப் பட, திரும்பி காதிலே விடவா என்று அவர் கிண்டலடித்ததும் நினைவுக்கு வருகிறது.
    காதில் எறும்பு போவதற்கும், வண்டு போவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அத்தியாவசியத்திற்கு தகுந்த மாதிரி தான் முதலுதவிகளைச் செய்ய வேண்டும்.இது என் கருத்து மட்டுமே. இப்படி முதலுதவி என்ற பெயரில் பலதையும் செய்து, பிறகு தவிப்போடு வருகின்ற பலரையும் என் பணிச்சூழலில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.
    அதனால் மறுபடி இப்படி எதுவும் விருந்தாளிகள் வந்தால்,(வரவே வேண்டாம் என்று கிருஷ்ணனை வேண்டிக் கொள்கிறேன்) ஆவி பிடிக்கக் கிளம்பி விடாதீர்கள்...

    ReplyDelete