8 கருத்துரைகள்
  1. மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நான் என் குழந்தைகளை தமிழ் வழியில்தான் படிக்க வைக்கிறேன். இதை இத்தனைத் திறோடு நான் திரும்பத் திருமப பதிவதற்கு ஒரே காரணம்தாந் - யாரேனும் எடுத்துக் கொள்ள மாட்டார்களா என்பதே.பொன்னிறைவன், மகாதேவா ஆகியோருக்கும் , ஒரு நல்ல நேர்கானலை பார்க்க கொடுத்தமைக்காக நிலாவுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  2. தமிழில் போதனை மட்டும் இதற்குத் தீர்வாகாது. தமிழில் பேசுவதும் உரையாடுவதும் இழிநிலை-அவமானத்துக்குரியது என்றெண்ணும் போக்கு மாறாத வரையிலும், ஊடகங்களில் தவறான உச்சரிப்போடு பேசப்படும் தமிழை ஆதரிக்கும் வரையிலும், பத்திரிகைகளில் நம் கலாச்சாரம் மரபு குறித்த உண்மையான அக்கறையோடு எழுத்துக்கள் எழுதப்படாத வரையிலும் தமிழின் மீதான அக்கறை பெருமை கொள்ளாது.

    ஒரு மொழி செம்மொழி ஆவதும் செம்மொழி மாநாடு நடத்துவதும் மாத்திரம் தமிழின் பெருமை மீட்கப்படாது.வீடுகளிலும் பொதுவிடங்களிலும் அதன் கௌரவமும் பயன்பாடும் மீட்கப் படவேண்டும்.

    இது தனிமனிதனில் தொடங்கி தலைவன் வரைக்கும் ஏற்படவேண்டிய மாறுதல்.

    ஒரு மொழியை வளர்க்க யாரும் தேவையில்லை. அதை அழிக்க நாம் போதும்.

    ReplyDelete
  3. ஒரு ம‌ரபின் பெருமையைச் சிதைத்தால் ம‌ட்டுமே புதிய‌ வ‌ழக்க‌த்தை ஊன்ற‌ முடியும். ம‌லைக்காடுக‌ளை அழித்து, ம‌ண்ணைச் ச‌ரிக்காம‌ல் தேயிலையை ப‌யிரிட்டிருக்க‌ முடியாதுதானே?
    இன்று ம‌லைச்ச‌ரிவுக‌ள் ந‌ட‌ப்ப‌த‌ன் மூல‌ம் அவைதான். அத் போல‌வே, அடிமை நாட்டில் ந‌ம் மொழியை அழித்து ஆங்கில‌ தேயிலையை ந‌ட்ட‌‌ன‌ர். அவ‌ர்க‌ள் போன‌பின்பும் அதையே வ‌ள‌ர்த்துக் கொண்டு, ந‌ம் ம‌ண்ணின் ம‌ர‌ங்க‌ளை (மொழியை) புற‌க்க‌ணித்தே வ‌ருகிறோம். இன‌ம் காக்க‌ மொழிதான் ஆதிமூல‌ம். உல‌கிலுள்ள எல்லா முக‌ம‌திய‌ மக்க‌ளையும், அவ‌ர்க‌ளின் மொழி இணைத்து காக்கிற‌து. இரானிய‌ ஹ‌மீது, ம‌ல‌யாள முக‌ம‌துட‌ன் தாராளமாய் க‌தைக்க‌ முடியும். ந‌மக்கோ இல‌ங்கை த‌மிழ‌னிட‌ம் கூட‌ இய‌ல்பாய் பேசவிய‌லாது.

    ReplyDelete
  4. அவசியமான ஒரு தலைப்பு. நமது சாபக்கேடு, "தமிழ் தமிழ்" என்று மேடையில் முழங்குவோர் கூட சரியான தமிழை பேசுவதில்லை. நாங்கள் வாழ்வது வெளிநாடு. குழந்தைகள் தமிழை பள்ளியில் கற்கவில்லை. இருப்பினும், தமிழைப்பற்றி அதிகம் பேசி அவர்களது மனதில் தமிழ் ஒரு சிறந்த மொழி என்ற ஒரு எண்ணத்தை ஏற்ப்படுதிக்கொண்டு இருக்கிறேன். எனது மகள் தொலைக்காட்சியில் வரும் தமிழ் எழுத்துக்களை தன்னார்வம் கொண்டு படிக்கிறாள். நல்ல கருத்தாழம் மிக்க பழைய தமிழ் திரை இசை பாடல்களின் அர்த்தங்களை அறிந்து தமிழின் இனிமையை அறிய முற்படுகிறாள் . இந்த முயற்சி வரவேற்க தக்கதல்லவா? பட்டுக்கோட்டை "திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று பாடியது போல, தமிழர்களாய் பார்த்து தமிழுக்கு அழகு சேர்க்க வில்லை என்றால், தமிழில் நிலையும், தமிழ் விரும்பிகளாகிய நமது நிலையும் கவலைக்குரியதுதான்.

    நன்றி நிலாமகள்...

    ReplyDelete
  5. வல்லது வாழும் நிலா!

    மாற்றங்களை அனுசரித்து போகும் வரை எதற்கும் இறப்பில்லை.

    தமிழ் ஏடுகளில் இருந்து தாள் கண்டுபிடிக்கப் பட்ட போது தாளுக்கு மாறி,இப்போது கணணியிலும் கொலு வீற்றிருக்கிறதே!

    காலம் சிறு வட்டத்தில் இருந்து தமிழையும் தமிழனையும் உலகளாவ எடுத்துச் சென்றிருக்கிறது.

    புதிய மண்!புதிய முளை!!

    வல்லது வாழும்!

    ReplyDelete
  6. இதனைத் தான் ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ என புலம்பினானா, பாரதி?

    ReplyDelete
  7. வல்லான் வகுத்ததே வாய்க்கால்.அவசியமான ஒரு தலைப்பு. நமது சாபக்கேடு,

    ReplyDelete
  8. மொழியைக் காக்க வேண்டும்.. அதேபோல தமிழ் பேசும்.. தமிழ் வளர்த்த மனிதரிடையே சாதி, மதம் பேசி வெறுப்பு வளர்க்கும் போக்கும் களையப்பட வேண்டும்.

    ReplyDelete