14 கருத்துரைகள்
  1. கீச் கீச் என்றது /அணில்/ அண்டாவின் மேல் ஏறி நின்று.என்று இருக்க வேண்டுமோ?

    அணில் மட்டுமில்ல ஒவ்வொரு ஐந்தறிவு விலங்குககளோட பேசறது அதுவும் நமக்கு பரிட்சையமானவற்றோடு பேசறது சந்தோஷமா இருக்கும்!

    நல்லா எழுதியிருக்கீங்க!

    கடைசியில் ட்ரையாம்பேக்கை பூனை தின்றுவிட்டதா? :(

    ReplyDelete
  2. ஆமாம்பா ... சில ஆண்டுகளுக்கு முன் செஞ்சோலைக் குழந்தைகள் திடுக்'ன்னு விழுந்த குண்டுகளால செத்துப் போன மாதிரி.

    ReplyDelete
  3. உங்களின் பதிவை படித்தபோது
    மெல்லிய உணர்வு ஒன்று எழுகிறது தோழி

    ReplyDelete
  4. நெய்வேலியின் மரங்கள் சூழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.சின்னவன் அங்குதான் பிறந்தான்-அது என் மாமனார் நெய்வேலியிலிருந்த காலம்.அற்புதமான நிசப்தத்துக்கும் மயான அமைதிக்கும் இடைப்பட்ட பொழுதுகள்.உங்கள் பதிவில் இறந்த அணில் முன்பே என் கண் முன் பூனையால் பத்து வருஷங்களுக்கு முன் தின்னப்பட்டது.எட்டு மணிக்கு முந்தைய வேக நடை.

    ReplyDelete
  5. @வேல் கண்ணன்...
    ரொம்ப சந்தோசம் சகா.

    @சுந்தர்ஜி...
    நம்ம ஊர் மாப்பிள்ளையா நீங்க...! மகிழ்ச்சி. இருப்போர்க்கும் , வருவோர்க்கும் இனிமையானது நெய்வேலி...!!

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு சகோ! நானும் நெய்வேலி தான்! பிறந்ததிலிருந்து 20 வருடங்கள் வரை அங்கிருந்து விட்டு தற்போது தில்லியில் இருக்கிறேன். படித்த போது மகிழ்ச்சியாக இருந்தது - திரும்பவும் நெய்வேலி வந்தது போல இருந்தது.

    வெங்கட்
    புது தில்லி.
    www.venkatnagaraj.blogspot.com

    ReplyDelete
  7. மிகவும் நன்றாக உள்ளது சகோதரி. நெய்வேலியில் உள்ள அன்றாட நிகழ்ச்சிகளை என் மாமியார் கதை கதையாக கூறியுள்ளார்.

    ReplyDelete
  8. நிலா...இன்றுதான் வாசித்தேன்.பிடிச்சிருக்கு.நீண்ட பின்னல்..மூஞ்சூறு..எறும்பு வகைகள்...பூரான்...மரவட்டை...
    கம்பளிப்பூச்சி...எல்லாமே ஊரை ஞாபகப்படுத்துகிறது.

    ReplyDelete
  9. @வெங்கட் நாகராஜ் ...
    பிறந்து வளர்ந்த ஊரின் நினைவலைகள் நம் மனக்கடலில் ஓயாமல் அலையடித்தபடி தான்... அமாவாசை, பௌர்ணமி போல் ஊர் நினைவைக் கிளறிவிடும் நிகழ்வுகள் இப்படியாக சமயங்களில் அமைந்துவிடுகின்றன. எப்படியிருப்பினும் என் வசிப்பிடம் எனக்கொரு
    சகோதரனைக் கொடையளித்திருக்கிறது! மகிழ்கிறேன் வெகுவாய்.

    ReplyDelete
  10. @கோவை 2 டெல்லி ...
    எந்த ஊருக்கு சென்று யாரிடம் பேசினாலும் நெய்வேலியில் சொந்தம் இருப்பதாகவோ இருந்ததாகவோ கூறக் கேட்கும் அதிசயம் அடிக்கடி எனக்கு நேர்வதுண்டு. இப்படியாக நாம் இன்னும் நெருங்கிவிட்டோமோ தோழி...!

    ReplyDelete
  11. @ஹேமா...
    ஊர் நினைவும் சிறு பிராயமும் மகிழ்வைக் கிளர்த்தியதா...? பெருமூச்சு எழச் செய்ததா?
    'ஜனவரி 29 ' என்ற குறும் படத்தை பார்க்கும் வாய்ப்பு நேற்று தான் கிடைத்தது. அந்தப் பையன் முத்துக்குமார் என்னைக் கலங்கடித்து விட்டான். அன்றைய தினத்தில் 250 கி.மீ தள்ளியிருக்கும் எங்களால் உணர முடியாத உண்மையின் தாக்கத்தை அப்படம் தான் தந்தது.

    ReplyDelete
  12. என்னையே கண்ணாடியில் பார்த்துக்கொள்வது போலிருந்தது நீங்கள் அணிலுடன் பேசியதை படித்த போது. பல்லி, தவளை, தேரை, சில சமயம் பாம்பு என்று நான் பேசும் போது என் பிள்ளைகள் என்னை கேலி செய்வதுண்டு. சூப்பர் நிலா....

    ReplyDelete
  13. வாங்க கிருஷ்ண பிரியா... தத்தமது அனுபவங்களை நினைவில் கிளர்த்தியிருக்கும் எனதன்பு ட்ரையாம்பக் மறுபடி எங்கேனும் உயிர்த்திருக்கும்...!
    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி தோழி!

    ReplyDelete
  14. ஒரு தாய்மை வலி எழுத்தில்.:((

    ReplyDelete