14 கருத்துரைகள்
  1. குறிப்பிட்ட பதிவை வாசித்திராததால் முழுமையான விவரம் என்னவென்று தெரியவில்லை. எனினும் உங்கள் கருத்துகள் முற்றிலும் வரவேற்கப்படவேண்டியதே. வெட்டுதல் இல்லாமல் வெளிவந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  2. @கீத மஞ்சரி

    ஆம் தோழி. அதைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பு நான் தந்திருக்க வேண்டும்.

    பெப்சிகோ நிறுவன சி.இ.ஓ. ஒரு இரவு 9.30 மணிக்கு அலுவலகப் பணியிலிருந்த இந்திரா நூயியை அழைத்து அவரை நிறுவன அதிபராக நியமித்திருப்பதாகத் தெரிவிக்க, அதைப் பகிரும் மகிழ்வோடு வீடு வந்த இந்திராவை வாசலில் வழிமறித்த அவரது தாயார் வீட்டுக்காக பால் வாங்கிவரப் பணித்திருக்கிறார். முன்னமே வீடு வந்திருந்த இந்திராவின் கணவரை வாங்கி வரக் கேட்டிருக்கலாமே என்றதற்கு, தாயார், அவர் களைப்பாக வந்தார் என்றிருக்கிறார். பால் வாங்கி வந்த இந்திரா, நான் பெப்சிகோ வின் தலைவராகியிருக்கிறேன்; என்னைப் பால் வாங்கிவரச் சொல்கிறாய், என்ன அம்மா நீ? என்றதற்கு, உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே என்றாராம் அவரம்மா. "நீ பெப்சிகோவின் தலைவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்து விட்டால், மனைவி, பெண், மருமகள், அம்மா எல்லாமே நீ தான். அந்த இடத்தை வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது" என்றாராம்.

    சரிதானே அவர் சொன்னதும்.

    ReplyDelete
  3. முழுமையாக இல்லாவிட்டாலும் மிகவும் அருமை. [பொதுவாகப் பெண் என்பவள் முழுமையாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வது இல்லை அல்லவா ! ;))))) அதனாலும் இருக்கலாம்] எனினும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வணக்கம்

    ...ஆணை விட பெண் அதிக பளு தூக்கத் தான் வேண்டும். அதற்கான வலுவும் பெற்றவள் தான் பெண்...
    உணமைதான்... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. குடும்பம் உயிர்ப்போடிருக்க வேண்டும் என்றால் ஆணை விட பெண் அதிக பளு தூக்கத் தான் வேண்டும். அதற்கான வலுவும் பெற்றவள் தான் பெண் ????...

    ReplyDelete
  6. எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்தும் இதயத்தின் வேலையை இதயமும், நுரையீரலின் வேலையை நுரையீரலுமே செய்துகொண்டிருக்கிறது

    உயிர்த்துடிப்பான பகிர்வுகள்..!

    ReplyDelete
  7. ரொம்ப நாட்களுக்குப்பிறகு நிலாவிடமிருந்து ஒரு அழகிய பதிவு! ஹிந்துவில் உங்கள் கருத்துக்கள் வெளியாகி இருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    உங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன் நிலா!

    ReplyDelete
  8. நிறைய 'கலப்படம்' இருக்கிறது இந்திரா நூயி பற்றிய செய்திகளில். இந்தக் குறிப்பிட்ட கட்டுரையை (?) நான் படிக்கவில்லை - ஆனால் அவர் ஒரு பெரிய கம்பெனியின் தலைவராக இயங்க நிறைய பேர் - அவர் கணவர் உட்பட தியாகங்களும் அநுசரணையும் செய்திருக்கிறார்கள். பால் வாங்கி வா என்று அம்மா பணித்தது - நம்பவே முடியாத ஒன்று. சாதாரணமான வீட்டில் கூட இது அவ்வளவாக நடப்பதில்லை - பெப்சியின் சிஇஓ - வாய்ப்பேயில்லை. ஆனால் இப்படி எழுதினால் தான் sensationalஆக இருக்கும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் ஏதாவது எழுதிவிடுகிறார்கள். இதைப் பாரம்பரியம் என்பதில் ஒரு 'destructive romanticism' இருப்பதால் படிக்கும் நமக்குள்ளும் ஒரு 'அட!' உணர்வு உண்டாகிறது. இந்திரா காந்தியைப் பற்றியும் இப்படி ஒரு கலப்படச் செய்தி செயற்கையாக அவரை humanize செய்யும் முயற்சியில் எழுதப்பட்டது. உண்மையில் இந்திரா நூயி பற்றி பெருமைப் பட வேண்டிய அவசியம் அவர் பாரம்பரிய கலாசார விதிகளுக்குட்பட்ட ஒரு பெண் எனபதால் அல்ல என்பதை அறிந்து கொள்ளும் பொழுது இது போன்ற cheap shots அவருடைய பெருமையை மாற்றுக் குறைப்பதும் புரியும்.

    நுரையீரல் வேலையை நுரையீரல் செய்கிறது - படிக்கும் பொழுது தைக்கிறது என்றாலும் நூயியீரல் வேறே கதை.

    ReplyDelete
  9. @அப்பாதுரை

    'கட்டு உரை' :)))

    பரபரப்புக்கான பத்திரிகை தந்திரம் என்பது சரியே அப்பாஜி.

    வாசகர்கள் கருத்தைக் கேட்டு, தங்களுக்கு ஏற்ற கருத்தை எடுத்து வெளியிடுவது நெருடல் எனக்கு.

    பெண்ணோ ஆணோ - குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இன்றி தன் துறையில் சிறப்புற இயங்குவது இயலாத ஒன்றே.

    'நல்ல வேளை, அம்மா சொன்னதாக போட்டாங்க.மாமியார் சொல்லியிருந்தா ...' (இதை சொன்னது எங்க இல்லத்தரசர்)

    இப்படியும் ஒரு கோணம் இருக்கிறது இதில்.

    உங்க பார்வையின் கோணம் (நூயியீரல்) மறுக்கத் தக்கதல்ல.

    அவர் பாரம்பரிய கலாச்சார விதிகளுக்கு உட்பட்டதொரு பெண் என்பதற்காக அல்ல நானும் அவரைப் பற்றிப் பெருமைப் பட்டது.

    ஏதோவொரு நேர் காணலில் எதற்கோ சொன்ன பதிலை தங்களுக்கு சாதகமாய் திரித்து பெரிதுபடுத்தப் படுவது எனக்கும் புரிகிறது.

    ReplyDelete
  10. @மிருணா

    கேள்விக்குட்படுத்துவதும், ஏற்றுக் கொள்வதும் அவரவர் பாங்கு. நம் கருத்துக்கும் நடைமுறைக்கும் இடைவெளிகள் உண்டுதானே தோழி?!

    ReplyDelete
  11. @வை.கோ. சார்...
    @ரூபன்..
    @இராஜ இராஜேஸ்வரி..
    @மனோ மேடம்...

    வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  12. கட்டு உரை - அட்டகாசம் போங்க. இதைப் பயன்படுத்திக்க அனுமதி கொடுங்க.

    ReplyDelete
  13. மாமியார் சொன்னதா... insightful. கண்டிப்பா அது இன்னொரு பரபரப்பின் அடிப்படையாகியிருக்கும்.

    ReplyDelete
  14. பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா

    ReplyDelete