9 கருத்துரைகள்
  1. நல்ல பகிர்வு சகோ. மகாத்மா காந்தி பற்றி இன்று [30.01] உங்கள் பதிவு! மிக்க நன்றி.

    ReplyDelete
  2. யாரொருவர் தன்வாழ்க்கையின் ரகசியங்களைத் திறந்த புத்தகமாக்கத் துணிந்தாரோ-துணிவாரோ-

    யாரொருவர் தன் சொல்லையும் செயலையும் ஒன்றாய் இணைத்தாரோ-இணைப்பாரோ-

    யாரொருவர் இலக்கை அடைந்ததன் பின்னுள்ள காலத்தை முன்கூட்டியே கண்டறிந்து சொன்னாரோ-சொல்வாரோ-

    யாரொருவர் யாராலும் தொடமுடியாத உயரத்தை விட்டுச் சென்றாரோ-செல்வாரோ-

    யாரொருவரை இனிவரும் காலங்கள் தாகித்துத் தேடியலையுமோ-தேடிக்கண்டடையுமோ-

    அவருக்குப் பெயர் காந்தி என்பதாய் இருக்கும்-இருக்கட்டும்.

    ReplyDelete
  3. வாழ்க நீ எம்மான்..
    இன்றையத் தேவை இப்படி அபூர்வமான மனிதர்தான். நாம் எதற்கும் பின் சென்றே பழகி விட்டோம்.. வழி நடத்த தகுதியான எவரும் அமையா விட்டால் தேசம் இப்படித்தான் கொள்ளை போகும். நல்ல தலைமைக்குப் பிரார்த்தனையுடன்.

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. என் மலர்த்தூவலும் !

    ReplyDelete
  6. "ஜெய‌ 'மோக‌ன்" தாஸ் க‌ர‌ம் ச‌ந்த் காந்திஜி'க்கு எம‌து அஞ்ச‌லி.

    ReplyDelete
  7. முத்துக்களாய்;முற்றிய மல்லிகை மொட்டுக்களாய்
    பொறுக்கியெடுத்து மாலையாக்கி தந்திருக்கிறீர்கள் நிலா.

    காந்தியை வரிகளால் வடிவமைத்த திறம் வியக்க வைக்கிறது!

    மேலும் இது போன்ற பதிவுகளைத் தாருங்கள்.அறிய ஆவல்.

    ReplyDelete
  8. முதன்முதலாக உங்கள் பதிவிற்கு வந்தேன்.படித்தது நிறைவைத்தருகிறது.காந்தியை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் நான்.எனக்கு எட்டுவயதிருக்கும்போது.அப்போதைய மெட்ராசில் ஒரு கூட்டத்தில் கேள்வி கேட்க வந்த ஒருவனிடம் தமிழில் ‘உட்காரையா” என்று கூறியது இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை அரக்கோணம் தாசில்தார் தெருவில் நாங்கள் விளையாடும்போது ரேடியோவில் ஒலிக்கக்கேட்டு ஊருக்கே தெரியப்படுத்தினோம். அன்று ஊரே அழுதது இன்றும் நினைவுக்கு வருகிறது பழைய நினைவுகளை கிளரவிட்ட உங்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete