நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

      தன்னை வாசிப்பவரை அனுபவங்களாலும் ஞானத்தாலும் நிரப்புகிற அறிவுப் பிரபஞ்சம், ஞானத் தந்தை புத்தகம்!
       ரோஜா ஒன்று. எல்லாக்காலத்திலும் அதே நிறம் அதே வாசம். ஆனால் ஒரே புத்தகம் வாசிக்க வாசிக்க காலம்தோறும் புதியதாகிறது. வாசிப்பவரைப் புதியவராக்குகிறது. அதுதான் புத்தகத்தின் ரகசியம். புத்தகத்தின் அதிசய ஆற்றல்.
        எழுதி முடித்த புத்தகமென்பது உறைந்து இறுகிப் போன சிந்தனையன்று. இடையறாது இயங்கி வளர்ந்துகொண்டிருக்கிற ஓர் அனுபவக்கற்றை. வாழ்க்கையைப் போல் உயிருடன் இயங்கி முன்னேறும் பேருணர்வு. ஊட்டி சென்று ஒருவாரம் சுற்றித் திரிந்தவன் கற்றறிந்ததை விட ஊட்டி பற்றி எழுதப்பட்ட சிறந்ததொரு நூலை வாசித்தால் பேரதிகமாக உணர்ந்துகொள்ள முடியும்.
         நேர்முகத் தரிசனமென்பது ஒற்றைக் கோணம் மட்டுமே அறிமுகப்படுத்தும். ஒரு நல்ல நூலென்பது, அதன் பன்முகத் தோற்ற முழுப்பரிமாணத்தை உணர்த்தும்.
          ஒரு மனிதன் பிறந்து எண்பது வயது வாழும் காலத்தில் ஓயாத உழைப்பாலும், பார்த்து கேட்டு பேசி கிடைத்த அனுபவ அறிவாலும் உணர்ந்து தெளிந்ததை விடவும் அதிகமாகவே ஒரு நல்ல நாவலை வாசிக்கும் போது பலநூறு மனிதர்களின் வாழ்வனுபவங்கள் முழுமையும் நமக்குள் இறங்கி வளரத்தொடங்குவது திண்ணம்.
         ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு உலகின் கதவுகளைத் திறந்துவிடுகிறது. நமக்குள் ஒரு புதிய உலகமாக-புதிய வெளிச்சமாக-புதிய அனுபவமாக ஒவ்வொரு புத்தகமும் விரிகிறது. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு பிரபஞ்சம். அவரவர் பார்வையிலிருந்து பதிவாகிற பிரபஞ்சம்.
          புத்தகம் வாழ்க்கையைப் பேசும். எது வாழ்க்கை என்று கற்றுத்தரும். வாழ்க்கைக்கும் பிழைப்புக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தும். “புரட்சியும் கலகமும் ஒன்று என்று வெகுகாலமாக நினைத்திருந்தேன். ‘உள்ளதை அழித்து புதியதை நிர்மாணிப்பது புரட்சி; உள்ளதை அழித்து சூனியத்தில் எறிவது கலகம். இரண்டும் ஒன்றல்ல. எதிரெதிர் முரண் என்பதை ஒரு புத்தக வாசிப்பில்தான் கற்றறிந்து கொண்டேன்.” (மேலாண்மை பொன்னுச்சாமி)
         புத்தகம் கற்றுத் தராதது எதுவுமில்லை. என்னிடமிருப்பதெல்லாம் புத்தகத்தின் தானம் தான். புத்தகம் பேசும். நம்முடன் தோழமை கொள்ளும். நண்பனாகத் துணை நிற்கும். ஆசானாகக் கற்றுக் கொடுக்கும். தாயாக அன்பு செலுத்தும். தந்தையாகக் கல்வி தரும்.
         உலகம் பொய்யென்று ஒரு புத்தகம் சொல்லிவிடக் கூடும். புத்தகத்தின் ஆற்றல் பொய்யென்று எந்த உலகமும் சொல்லிவிட முடியாது.
நன்றி:  மேலாண்மை பொன்னுச்சாமி, தினமணி -23.4.2012
Share on:
   
       கன்னல், ஆலை, தும்பு, கழை, இக்கலம், அங்காரிகை, இக்கு,  ஈர், வெகுரசம், கணை, வெண்டு, மதுதிரிணம், வேழம்... இவையனைத்தும் கரும்பைக் குறிக்கும் வேறு தமிழ்ச் சொற்களாக பழந்தமிழகராதிகள் மூலம் அறிகிறோம்.       நினைவில் வாழும் சிவகங்கைக் கவிஞர் ‘மீரா'வின் செல்லமகள் செல்மாவுக்கு அன்பு, பாசம், நேசம், தோழமை, ஆசான், வழிகாட்டி, வழிபடுதெய்வம் என அனைத்துக்கும் ஒரே உருவாய் அப்பா... அப்பா... அப்பா மட்டிலுமே!
       தன் மணவாழ்வில் இரு ஆண் குழந்தைகளுக்குப் பின் பத்தாண்டுகள் கழித்துப் பிறந்த பெண் மகவைத் தன் ஆதர்சக் கவிஞர் கலீல் கிப்ரானின் ‘செல்மா'வாகவே வளர்த்தெடுத்தார் கவிஞர் மீரா.
       முதுகலைத் தமிழிலக்கியம் பயின்ற தன் அன்பின் செல்மா, பின்னாளில் தனக்காக ஒரு கவிதை நூலெழுதி கண்ணீர் அஞ்சலி செய்வாரென கனவிலும் நினைத்திருப்பாரோ...!
       கிப்ரான் தன் ‘தீர்க்கதரிசி'யில் சொல்வதைப் போல, “தனக்குச் சிறகுகள் தந்த நாவையும் உதடுகளையும் ஒரு குரலால் சுமந்து செல்ல முடியுமா?”
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ▼  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ▼  April (2)
      • வாசித்தலை நேசிப்போம்-புத்தக தின வாழ்த்துகள்
      • செல்மாவின் “கவிதை அப்பா”
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • அக்ஷ்ய பாத்ரம்
    Art journal
    21 hours ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    கபீரும் நானும் 55
    1 month ago
  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 month ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    5 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    7 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    8 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    9 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates